Wednesday 23 January 2008

5-தமிழீழ விடுதலைப் புலிகள் (ஒரு சிறிய நோக்கு)

விடுதலைப் புலிகள் அமைப்பு 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வமைப்பானது இலங்கை அரசுகளின் தமிழர் தொடர்பான கொள்கைகளால் விரக்தியுற்ற பல இளைஞர்களை கவர்ந்து வந்தது. தொடக்கத்தில் இலங்கை காவல் துறையினர், மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் போன்ற இலங்கை அரசின் இலக்குகள் மீது சிறிய அளவிளான தாக்குதல்களை நடத்தி வந்தனர். 1975 ஆம் ஆண்டு யாழ் நகர முதல்வர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலை செய்யப்பட்டமை இக்காலப்பகுதியில் புலிகளால் செய்யப்பட்ட முக்கிய தாக்குதலாக கொள்ளப்படுகிறது. இக்காலப்பகுதியில் புலிகள் அமைப்பு ஏனைய இயக்கங்களுடன் இணைந்தே செயற்பட்டு வந்தது. 1986 ஆம் ஆண்டு புலிகள் ஈழ தேசிய விடுதலை அமைப்பில் இருந்து விலகி தனித்து இயங்க ஆரம்பித்தனர்.
ஈழப் போரின் தொடக்கம்
உள்நாட்டுப் போரின் தொடக்கம் கறுப்பு யூலை இனக்கலவரங்கள் மனிதஉரிமைகள் அரச பயங்கரவாதம்.
இதன் பின்னர் புலிகள் அமைப்பு மீதமிருந்த ஈழ இயக்கங்களை தம்முடன் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான அறிவித்தல்கள் யாழ்பாணத்திலும் சென்னையிலும் விடுக்கப்பட்டன. இதனால் பல விடுதலை இயக்கங்கள் காணாமற்போன நிலையில் சுமார் 20 ஏனைய இயக்கங்கள் புலிகள் அமைப்புள் உள்வாங்கப்பட்டன. இதன் மூலம் யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்தது.இத்தாக்குதல்களின் விளைவாக புலிகள் ஈழ இயக்கங்களில் முதன்மை அமைப்பாக உருவெடுத்தனர். 1987 ஆம் ஆண்டு புலிகள் பொருளாதார, அரசியல், இராணுவ இழக்குகள் மீது தற்கொடைத் தாக்குதல்களை மேற்கொள்ளும் கரும்புலிகள் அணியை உருவாக்கி இலங்கை இராணுவத் தளம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி 40 இராணுவத்தினரைக் கொன்றனர்.

1987 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் யாழ் குடாநாட்டை புலிகளிடமிருந்து ஆக்கிரமிக்கும் நோக்குடன் ஒப்பரேசன் லிபரேசன் என்ற இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. பெருகி வந்த ஈழத் தமிழர் ஆதரவினாலும் இந்தியா நோக்கிச் சென்ற அகதிகளாலும் இந்தியா முதன் முறையாக இலங்கை உள்நாட்டுப் போரில் பூமாலை நடவடிக்கையில் இலங்கை வான்பரப்பை மீறி யாழ்பாணத்துக்கு உணவுப் பொருட்களை இட்டதன் மூலம் தலையிட்டது. பின்னர் ஏற்பட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் இலங்கையும் இந்தியாவும் 1987 ஆம் ஆண்டின் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில்
கைச்சாத்திட்டன. இதன் படி இலங்கை அரசு தமிழருக்கு கூட்டாட்சி வடிவிலான தீர்வை வழங்கும், அதேவேளை ஈழ இயக்கங்கள் போர்கருவிகளை கீழ் வைக்க வேண்டும். போர்கருவிகளை களைவதை நடைமுறைப் படுத்தும் நோக்கில் இந்திய இந்திய அமைதி காக்கும் படைய அனுப்புவதாகவும் ஒப்பத்தில் ஏற்பாடாகியிருந்தது.
ஈழ இயக்கங்கள் அனைத்தும் இவ்வொப்பந்ததை ஏற்றுக் கொண்டாலும்,புலிகள் அமைப்பு இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மக்கள் கருத்துக் கணிப்பு ஒன்றை மேற்கொள்வதற்கு எதிர்புத் தெரிவித்து ஒப்பந்தத்தை எதிர்த்தனர்மேலும் புலிகள் தமது போர்க்கருவிகளை இந்திய அமைதிக்காக்கும் படைகளிடம் ஒப்படைக்க மறுத்தனர். முறுகல் நிலை முற்றவே, புலிகள் 1987.10.5 ஆம் நாள் இந்திய அமைதி காக்கும் படையினரோடு ஒத்துழையாமையை அறிவித்தனர். இதன் விளைவாக புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கிடையானபோர் வெடித்தது. இந்திய அரசு வன்முறை மூலம் புலிகளின் போர்க்கருவிகளை களைய திட்டமிட்டு பல இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதில் விடுதலைப் புலிகளிடமிருந்து யாழ்குடாநாட்டைக் ஆக்கிரமிக்கும் நோகில் மேற்கொள்ளப்பட பவான் நடவடிக்கையும் அடங்கும். பவான் நடவடிகையின் கொடுரம் காரணமாகவும் ஏனைய புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகள் காரணமாகவும் இலங்கைத் தமிழரிடையே இந்திய அமைதிகாக்கும் படையின் செல்வாக்கு குறைந்தது.
இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையின் பெரும்பான்மை சிங்களவரிடையேயும் தனது செல்வாக்கை இழந்திருந்தது. இந்திய அமைதி காக்கும் படையும் புலிகளுடன் 2 ஆண்டுகளாக போரில் ஈடுபட்டு பாரிய இழப்புகளை சந்தித்து வந்தது. 1990 ஆம் ஆண்டு இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் இருந்து மீளப்பெறப்பட்டது.

ஈழப் போர் II
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஒரு போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட்டது. இந்தப் சமதானப் பேச்சு வார்த்தையிலிருந்து பின்வாங்கிய புலிகள் இயக்கம் 1990.06.11 ஆம் நாள் தொடக்கம் பல தொடர் தாக்குதல்களைத் தொடுத்தனர்.
1990களில் போர் தொடர்ந்து நடைப்பெற்று வந்தது, இக்காலப்பகுதியில் இரண்டு முக்கிய கொலைகள் செய்யப்பட்டன. முதலாவது 1991 ஆம் ஆண்டு முன்னாள் இந்தியப் பிரதமர் தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கொலைச் செய்யப்பட்டார், இரண்டாவது 1993 ஆம் ஆண்டு இலங்கை அதிபர் ரணசிங்க பிரேமதாசா மே நாள் ஊர்வலத்தின் போது கொழும்பில் கொலைச் செய்யப்பட்டார். இவ்விரண்டு சந்தர்ப்பங்களிலும் தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஈழப் போர் III
1994 ஆம் ஆண்டில் சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க இலங்கை அதிபராக தெரிவுச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சில காலம் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தது. சந்திரிகா அரசுடன் புலிகள் பேச்வார்தையில் ஈடுபட்டனர். சந்திரிகா அரசு தீர்கமான ஆக்கபூர்வமான தீர்வு நோக்கி செல்ல தவறியது. இதனால் புலிகள் பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவாதாக அரசுக்கு அறிவித்தனர். இதன்பின்னர், 1995 ஏப்ரல் மாதம் புலிகள் திருகோணமலை துறைமுகத்தில் இலங்கை கடற்படையின் இரண்டு கலங்களை தாக்கியழித்தனர். இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் மூலம் இலங்கை இராணுவம் முக்கியத்துவம் வாய்த யாழ்ப்பாண நகரையும் குடா நாட்டையும் புலிகளிடமிருந்து ஆக்கிரமித்துக் கொண்டது. மேலும் சில நடவடிக்கைகள் மூலம் இலங்கை இராணுவம் புலிகள் வசமிருந்த வன்னிப் பெருநிலப்பரப்பில் முக்கிய நகரம் கிளிநொச்சியையும் பல சிறிய நகரங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டது. ஆனால் 1998 ஆண்டு முதல் புலிகள் தாக்குதல்களைத் தொடுத்து வன்னிப் பெருநிலப்பரப்பிம் பல பகுதிகளை மீள் கைப்பற்றிக் கொண்டனர். தொடர் போர்களின் முடிவில் போரியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள ஆனையிறவுத் தளம் 2000 ஆம் ஆண்டு புலிகளால் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம் நகரின் எல்லை வரை முன்னேறிய புலிகள் பின்னர் பின்வங்கி முகமாலையில் தமது முன்னரங்க நிலைகளை அமைத்துக் கொண்டனர்.

2001 போர் நிறுத்தம்
2001 ஆம் ஆண்டு sept 11 தாக்குதல்களில் பின்னணியில் புலிகள் இயக்கம் தமது அரசியல் இராணுவ அரசியல் அணுகுமுறையில் மாற்றங்களச் செய்தனர். தமிழ் மக்களது பிரச்சினைகளை தீர்க்க கூடிய தேவைகளை நிறைவுச் செய்யக்கூடிய கூட்டாட்சி அமைப்பை ஏற்பதை பரிசீலிக்க முன்வந்தனர். இலங்கை அரசு முன்னரே நோர்வேயை பேச்சுகளை ஆரம்பிக்க வருமாறு அழைத்திருந்தாலும் அதுவரை போரை நிறுத்துவதற்கு அவர்களால் முடியாமல் போனது.
ஆனால் விடுதலைப்புலிகள் நான்கு மாதங்கள் ஒருதலைப்பட்சமான யுத்த நிறுத்தம் ஒன்றை செய்தனர். ஆனால் அரசாங்கத்தினால் பல ஆத்திரமூட்டும் தாக்குதல்கள் நடாத்தப்பட்ட போதும் புலிகள் தற்காப்பு போரை மட்டும் நடாத்தியவாறு பொறுமை காத்தனர். பின்னர்
டிசம்பர் 2001 இல் நடைப்பெற்ற பொதுத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிப் பெற்று பிரதமரானதைத் தொடர்ந்து இரணுவத்தினரும் புலிகளும் போர் நிறுத்தமொன்றை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக 2002 ஆம் ஆண்டு இலங்கை அரசும் புலிகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. இதன் ஒரு அங்கமாக, போர் நிறுத்தத்தை கண்கானிக்க நோர்வே தலைமையில் ஏனைய நோர்டிக் நாடுகளின் பிரதிநிதிகளையும் கொண்ட இலங்கைப் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டது.
வெளிநாடுகளில் நடைப் பெற்ற ஆறுச் சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் 2003 ஆம் ஆண்டளவில் பேச்சு வார்த்தைகளில் முறுகள் நிலை ஏற்பட்டது. இக்காலப்பகுதியில் தெற்கிலும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா, இலங்கை பிரதமாரக இருந்த ரணில் விக்ரமசிங்காவையும் அவரது அரசையும் புலிகள் மீது மென்மையான் அணுமுறையை கையாள்கிறார்கள் எனக் குற்றம் சாட்டி ஆட்சியைக் கலைத்ததார். எனினும் இக்காலப்பகுதியில் பாரிய போர் நடவடிக்கைகள் நடைப்பெறவில்லை.
2005 இலங்கை அதிபர் தேர்தலின் போது மகிந்த ராஜபக்ச புலிகள் மீதான கடும் போக்கையும் ரணில் விக்ரமசிங்க பேச்சுக்களை மீளத் தொடங்குவதாக அறிவித்து போட்டியிட்டனர். புலிகள் இத்தேர்தலை புறக்கணிக்குமாறு வட கிழக்குத் தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்து மக்களை வாக்களிப்பில் இருந்து தடுத்தனர். தேர்தலில் மகிந்த ராஜபக்ச சிறியளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தற்ப்பேது இலங்கையில் இனவாத அரசியல் நடாத்திவருகிறது மகிந்த அரசாங்கம். இதன் ஒரு அம்சமாக அனைத்துலக ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையில் இருந்து தன்னிச்சையாக வெளியேறி தமிழ் மக்கள் மீதான இன அழிப்பினை ஆரம்பித்துள்ளது. ஆனால் தற்போது புலிகள் மிக நவீன போரியல் தளபாடங்களுடன் சிறந்த கட்டமைப்புக்களுடன் தலைவர் அவர்களால் வளர்க்கப்பட்டு இன்று தரைப் படை, கடற் படை, வான் படை, என முப்படைகளுடன் சிறந்த இராணுவமாக வளர்ச்சி பெற்று உள்ளது. எனவே இலங்கை அரசாங்கத்தின் இன அழிப்பிற்கான பதில்கள் விடுதலைப்புலிகளினால் விரைவில் வழங்கப்பட்டு தமிழ் மக்களிற்கான தனி அரசிற்கான முன்னெடுப்புக்களும் இடம் பெறும் எனவும் எதிர்பார்க்கலாம்.
(இவ் ஆக்கமானது எனது ஒரு சிறிய முதலாவது தொகுப்பாகும் தவறுகள்
இருப்பின் மன்னித்து தவறுகளை அறியத்தரவும்)
நன்றி…வணக்கம்..
jaalavan@gmail.com

Friday 11 January 2008

4-சுயநிர்ணய உரிமையுடன் தமிழர்கள் வாழ்வதற்கு சர்வதேச சமூகம் அங்கீகாரம் வழங்க வேண்டும்: விடுதலைப் புலிகள்

இலங்கையில் போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் ஒரு தலைபட்சமாக வெளியேறிய நிலையில் சிறிலங்கா அரசின் இனவாதப் போக்கினை புரிந்துகொண்டு தமிழர் தேசத்தின் நியாயமான போராட்டத்தை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை இன்று வியாழக்கிழமை (10.01.08) வெளியிட்டுள்ள அறிக்கை:
சிறிலங்கா அரசின் இனவாதப் போக்கினை புரிந்துகொண்டு தமிழர் தேசத்தின் நியாயமான போராட்டத்தை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும்
2002 ஆம் ஆண்டு நோர்வே அரசாங்கத்தின் ஆதரவுடன் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையினை சிறிலங்கா அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக முறித்துக் கொண்டதையிட்டு நாம் மிகவும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளோம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய இராணுவ வெற்றிகளைக் குவித்து படை வலுச்சமநிலையில் மேலோங்கியிருந்த நிலையில், 2002 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கமானது போரில் விடுதலைப் புலிகளை வெற்றிகொள்ள முடியாதென்பதை உணர்ந்து போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு முன்வந்தது.
இதனடிப்படையில் போர்நிறுத்த ஒப்பந்தமானது 2002 பெப்ரவரி 22 ஆம் திகதி இருதரப்புக்கும் இடையே கைச்சாத்திடப்பட்டது.
சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய படை நடவடிக்கைகள் காரணமாக அழிவுக்குள்ளாகியிருந்த தமிழீழ தாயகத்தில் போர் அமைதியை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையினை எமது மக்கள் அனுபவிப்பதற்கு வழிகோலுவதற்கும் நிரந்தரமான அமைதியை ஏற்படுத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் அத்திவாரமாக அமையும் என்ற எதிர்பார்ப்புடன் இது கைச்சாத்திடப்பட்டது.
தமிழர் தாயகப் பகுதியில் சிங்கள ஆக்கிரமிப்புப் படையினரால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த இராணுவ வலயங்கள் அகற்றப்பட்டு,
அங்கு தமிழ் மக்கள் மீளக்குடியமர்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு,
தமிழர் தாயகப் பகுதிகளில் சிறிலங்காப் படையினரால் மூடப்பட்டிருந்த மக்கள் போக்குவரத்துப் பிரதான பாதைகளான ஏ-9 யாழ்-கண்டி, செங்கலடி-பதுளை வீதிகள் திறக்கப்பட்டு,
பாடசாலைகள், வழிபாட்டுத்தலங்கள், மக்கள் குடியிருப்புக்கள் ஆகியனவற்றிலிருந்து சிறிலங்காப் படையினர் வெளியேறி மற்றும் மீன்பிடித் தடைகளை முழுமையாக நீக்கி இயல்பு வாழ்க்கையை மீண்டும் தமிழர் பிரதேசத்தில் நிலைநாட்டுவதற்கான ஏற்பாடுகள் இந்த ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்த ஒப்பந்தத்தினை நூறு வீதம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை மேசைகளிலும், சர்வதேச பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களின் போதும் மற்றும் தமது பல்வேறு அறிக்கைகளிலும் தொடர்ச்சியாக தெரிவித்து வந்ததுடன் இதனை நடைமுறைப்படுத்துவதற்குத் தம்மால் இயன்றவரை ஆக்கபூர்வமான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.
சிறிலங்கா அரசோ அல்லது சிறிலங்காப் படையினரோ போர்நிறுத்த உடன்படிக்கையினை முழுமையாக செயற்படுத்தி இயல்பு வாழ்க்கையை தமிழர் தாயகத்தில் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கால வரையறைகளுக்கு அமைய மேற்கொள்ளாது தொடர்ந்தும் தனது போர்நிறுத்த மீறல் நடவடிக்கைகளைத் தொடர்ந்த வண்ணமிருந்தன. அவ்வாறிருந்தும், தமிழீழ விடுதலைப் புலிகள் சிறிலங்கா அரசுடன் 2002 செப்ரெம்பர் முதல் 2003 மார்ச் வரை ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் இதய சுத்தியுடன் கலந்துகொண்டு சிறிலங்கா அரசாங்கமும் அதனது படைகளும் போர்நிறுத்த உடன்படிக்கையில் நடைமுறைப்படுத்த வேண்டிய சரத்துகளை தொடர்ச்சியாக மீறிவருவது தொடர்பாக அனுசரணையாளர்கள், கண்காணிப்புக்குழுவினர் மற்றும் சர்வதேச சமூகத்தினர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.
சிறிலங்கா அரசானது போர்நிறுத்த உடன்படிக்கையின் சரத்துக்களை மீறியது மட்டுமன்றி, பேச்சுவார்த்தை மேசைகளில் இணக்கம் காணப்பட்ட உடனடி மனிதாபிமானத் தேவைகளுக்கான உப குழு, பகைமைத் தணிப்பு மற்றும் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கான உப குழு போன்ற குழுக்கள் செயற்பட முடியாதவாறு பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டு அமைதி முயற்சிகளைப் பலவீனப்படுத்தியது.
போர் நிறுத்த உடன்படிக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமை, பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்படாமை, போர் நிறுத்த உடன்படிக்கை மற்றும் சமாதான முயற்சிகளின் ஒரு தரப்பாகிய விடுதலைப் புலிகளை சம தரப்பாக நடாத்துவதற்குத் தவறியமை ஆகிய காரணங்களால் தவிர்க்கமுடியாத சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளிலிருந்து தற்காலிகமாக ஒதுங்கிக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இருந்தபோதிலும், விடுதலைப் புலிகள் போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்தோ அல்லது சமாதான முயற்சிகளிலிருந்தோ முற்றிலுமாக வெளியேறாது, தொடர்ந்தும் நோர்வே அரசின் அநுசரணையுடன் சமாதான வழிகளிலே ஒரு நிரந்தரமான அமைதித் தீர்வை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வகையில், பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு மீண்டும் புத்துயிர் அளிப்பதற்காகவும் தமிழர் தாயகப் பகுதியில் இடைக்கால நிர்வாகத்தைக் கொண்டுவந்து போரினால் பேரழிவுக்குட்பட்டிருந்த தமிழர் தாயகப் பகுதிகளில் புனர்நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு இயல்பு வாழ்க்கையினை ஏற்படுத்துவதற்காகவும் சிறிலங்கா அரசாங்கம் ஓரு முன்மொழிவினை முன்வைக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் வலியுறுத்தினார்கள்.
சிறிலங்கா அரசு முன்வைத்த இடைக்கால நிர்வாகத்திற்கான முன்மொழிவுகள் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைக்கூடத் தீர்ப்பதற்குத் தேவையான அதிகாரங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை. இதனால், விடுதலைப் புலிகள் நோர்வேயின் அனுசரணையுடன், பல நாடுகளிலுமுள்ள சட்ட வல்லுநர்களின் ஆலோசனையுடன் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையினை முன்வைத்தனர். சிறிலங்கா அரசானது பேச்சுவார்த்தைக்கான ஓர் அடிப்படையாகக்கூட இதனை ஏற்கமறுத்தது. இதன் காரணமாக, பேச்சுவார்த்தைக்குப் புத்துயிர் கொடுப்பதற்கு ஏதுவாக, விடுதலைப் புலிகள் நோர்வே மற்றும் சர்வதேச சமூகத்தின் வேண்டுகோளுக்கு அமைய எடுத்த முயற்சிகள் எந்தவிதப் பலனையும் தந்துவிடவில்லை.
இதேபோலவே ஆழிப்பேரலை அனர்த்தத்தின் பின்னர் தமிழர் தாயகப் பகுதிகளில் மீள்கட்டுமானப்பணிகளை மேற்கொள்வற்கெனக் கைச்சாத்திடப்பட்ட பொதுக்கட்டமைப்பினையும் சிறிலங்கா அரசானது வழமைபோலவே குப்பைக்கூடைக்குள் வீசியது.
போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் எள்ளளவும் கருத்தில் எடுக்காது, சிறிலங்கா அரசானது தமிழர் தாயப் பகுதியில் பாரிய இராணுவ நடவடிக்கைகளைத் தொடராக மேற்கொண்டு மனித அவலத்தினை ஏற்படுத்திநின்ற வேளையில், மீண்டும் நோர்வே அனுசரணையாளர்களும் சர்வதேச சமூகமும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தி இருதரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என்று வேண்டிக்கொண்டதற்கமைய விடுதலைப்புலிகள் ஜெனிவாவில் 2006 ஆம் ஆண்டு இரு தடவைகள் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டார்கள்.
இந்த இரண்டு பேச்சுவார்த்தைகளின்போதும் விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்கள். அத்துடன், விடுதலைப் புலிகள் தாம் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை நூறு வீதம் நடைமுறைப்படுத்தத் தயாராகவுள்ள அதேவேளை, சிறிலங்கா அரசாங்கமானது போர் நிறுத்த உடன்படிக்கையின் ஒரு சரத்தான ஏ-9 வீதியினைத் திறந்து யாழ். குடாநாட்டில்; போக்குவரத்துப் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டு திறந்தவெளிச் சிறச்சாலையில் அடைபட்டதுபோன்று அவலப்படும் நான்கு இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் அவலங்களை நீக்குவதற்கு முன்வரவேண்டும் என மனிதாபிமான ரீதியில் வேண்டுகோள் விடுத்த போதிலும் சிறிலங்கா அரசாங்கமானது இக்கோரிக்கையினை நிராகரித்தது. இதன் காரணமாக பேச்சுவார்த்தை முயற்சிகள் மீண்டும் தொடரமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.
விடுதலைப் புலிகளின் சமாதானப் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவராகவும் அரசியல்துறைப் பொறுப்பாளராகவும் விளங்கிய சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களை சிறிலங்கா அரசானது படுகொலை செய்தபோதிலும் கூட விடுதலைப் புலிகள் போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான முடிவு எதனையும் எடுக்கவில்லை.
சிறிலங்கா அரசானது தற்போது போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து எதுவிதமான நியாயங்களுமின்றி ஒருதலைப்பட்சமாக விலகிவிட்டது.
இந்நிலையிலும், தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்த உடன்படிக்கையினை வரிக்கு வரி அமுல்படுத்தி அதனை நூறு வீதம் கடைப்பிடிப்பதற்குத் தயாராகவே இருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.
அத்துடன், சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் சமாதான முயற்சிகளுக்கான அனுசரணைப் பணியினை நோர்வே அனுசரணையாளர்களே தொடர்ந்தும் முன்னெடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
சிங்கள இனவாத அரசுகள் காலத்திற்குக் காலம் தமிழ் மக்களின் நிரந்தர அமைதிக்காக மேற்கொள்ளப்பட்டு வந்த ஒப்பந்தங்கள் அனைத்தையுமே நடைமுறைப்படுத்தாது உதாசீனப்படுத்தியதே வரலாறாகும்.
தமிழ் மக்கள் நிரந்தரமான அமைதியுடன் தமது தாயக பூமியிலே சுதந்திரமாக, கௌரவமாக வாழ்வதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் ஒருபோதுமே இடமளிக்கமாட்டார்கள் என்பதை தற்போது முன்னெப்பொழுதும் இல்லாதவாறு அண்ணளவாக ஆறு வருடங்கள் நீடித்த போர் நிறுத்த உடன்படிக்கையினை முறித்தமை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
எனவே சர்வதேச சமூகம் இதனைப் புரிந்துகொண்டு, சிறிலங்கா அரசுகளின் பொய்ப் பிரசாரத்திற்கு எடுபட்டு விடுதலைப் புலிகள்மீது விதித்திருக்கும் தடைகளை உடனடியாக நீக்கி, தமிழ் மக்களின் நியாயமான அபிலாசைகளை ஏற்று, அவர்களின் தாயகத்தில் சுயநிர்ணய உரிமையுடன் வாழுவதற்கு அங்கீகாரம் வழங்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
jaalavan@gmail.com

3-விடுதலைப் புலிகளின் புலனாய்வு அமைப்பு உலகத்தரம் வாய்ந்தது: கொழும்பு ஊடகம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வு அமைப்பு பொட்டு அம்மான் தலைமையில் இயங்கி வருகின்றது. அது மிகவும் நவீனமான புலனாய்வு அமைப்பாகும். அதன் உயர்ரகத் தகவல்கள் மிகவும் துல்லியமானவை என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்த ஆண்டின் முதல் 10 நாட்களில் கொழும்பில் நடைபெற்ற மூன்று பாரிய சம்பவங்கள் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தி உள்ளது. போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து அரசு தன்னிச்சையாக வெளியேறியதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் முழு அளவிலான போரை ஆரம்பிக்கலாம் என புலனாய்வுதுறை எச்சரித்துள்ளது. தற்போது சிறிலங்காவில் அதிகளவான புலனாய்வுதுறை அமைப்புக்கள் இயங்கி வருகின்றன.
குற்றப்புலனாய்வு திணைக்களம்,
பயங்கரவாத விசாரணைப் பிரிவு,
படைத்துறை புலனாய்வுப் பணியகம்,
தேசிய புலனாய்வுத் திணைக்களம்,
சிறப்பு விசாரணைப் பிரிவு,
கடற்படையினரின் புலனாய்வுப் பிரிவு,
வான்படையினரின் புலனாய்வுப் பிரிவு,
சிறப்பு அதிரடிப்படையினரின் புலனாய்வுப் பிரிவு
ஆகியன இயங்கி வருகின்றன. இராணுவத்தின் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சூள செனிவிரட்ன அதன் தலைவராக கடமையாற்றி வருகின்றார். அவருடன் பிரிகேடியர் கபில ஹெந்தவிதான தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவராக கடமையாற்றி வருகின்றார். இந்த இரு அதிகாரிகளின் தலைமையிலேயே எல்லாப் புலனாய்வு அமைப்புக்களும் இயங்கி வருகின்றன. எனினும் இந்த அமைப்புக்களுக்கு இடையில் ஒருங்கிணைப்புக்கள் இருப்பதில்லை. குறிப்பாக அவர்கள் தகவல்களைக் கூட பரிமாறுவதில்லை. எனவே தான் முக்கிய விசாரணைகளில் கூட அவர்களால் செயற்திறனுடன் பணியாற்ற முடிவதில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த விவகாரத்தை கையாள்வதற்கு பாதுகாப்பு அமைச்சு சிறப்புக்குழுவை அமைத்துள்ளது. நாட்டின் முழுப் பாதுகாப்புக்கு தேசிய புலனாய்வு அமைப்பே தற்போது பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளது. எனினும் சில அரசியல் தலைவர்களும், படை உயர் அதிகாரிகளும் தமது பதவிகளை தக்கவைப்பதற்காக இந்தப் புலானாய்வு அமைப்புக்களை தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் உயர் படை அதிகாரிகளின் தகவல் பரிமாற்றங்களையும் ஒட்டுக்கேட்டு வருகின்றனர். விடுதலைப் புலிகளின் புலனாய்வு அமைப்பு பொட்டு அம்மான் தலைமையில் இயங்கி வருகின்றது. அது மிகவும் நவீனமான புலனாய்வு அமைப்பாகும். அதன் உயர்ரக தகவல்கள் மிகவும் துல்லியமானவை. பெருமளவிலான சிங்கள மக்களும், அரச படையினரும் விடுதலைப் புலிகளின் புலனாய்வு அமைப்புக்கு தகவல்களை வழங்கி வருகின்றனர். பெரும்பாலான நாடுகளில் ஒரு பிரதான புலனாய்வு அமைப்பே உள்நாட்டு புலனாய்வு நடவடிக்கைகளை கவனித்து வருகின்றது.
உதாரணமாக
இஸ்ரேலின் "மொசாட்", அமைப்பு,
இந்தியாவின் "றோ" அமைப்பு,
அமரிக்காவின் "மத்திய புலனாய்வு அமைப்பு",
ரஷ்யாவின் "கேஜிபி", பாகிஸ்தானின் "உள்ளக புலனாய்வு அமைப்பு"
ஆகியவற்றைக் குறிப்பிடலாம். சீனாவின் போரியல் மேதையான சன் சூவும் புலனாய்வுத் தகவல்களின் முக்கியத்துவம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளார். "புலனாய்வுத் தகவல்கள் போரில் முக்கியமானவை, ஏனெனில் முழுப் படையினரின் நகர்வுகளும் அதில் தான் தங்கியுள்ளது. போரியல் உத்திகளுக்கு அவை முக்கியமானவை. மிகவும் நுண்ணிய அறிவு படைத்த தரமிக்கத் தலைவர்களே புலனாய்வுத்துறையிலும், அதன் தரத்திலும் மேலோங்க முடியும், அவர்களே பாரிய வெற்றிகளைப் பெறுவார்கள்" என சன் சூ தெரிவித்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
jaalavan@gmail.com

Sunday 6 January 2008

2-சிங்களம் வெட்டிய குழிகள் எங்கணும் விடுதலை அரசியலை விதைத்த மதியுரைஞர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த அரசியல் போராளியாக, மதியுரைஞராக, தத்துவாசிரியராக விளங்கி, தமிழர் போராட்ட வரலாற்றில் உயர்ந்து நின்றவர் "தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கம்.ஈழத்தமிழர்களின் வன்முறைப் போராட்டத்திற்கு நியாயம் காட்டி அரசியல் வடிவம் கொடுக்கும் பணியைத் தமது தோள்மீது சுமந்தவர் பாலா. அவர் குறித்த ஒரு பார்வை இக்கட்டுரை. "தேசத்தின் குரல்' விடுதலைப் பாதையில் தடையரண் களும் அழிவுக் கிருமிகளும் உட்புகுந்து வேரழிக்கச் சன்னதம் கொண்ட வேளையில், தனது மார்க்சிசப் பார்வை விரவிய அறிவாயு தத்தைக் கையிலெடுத்துச் சமராடிய பெரு மகன் இவர். எதிரியானவன், தலையைத் தட வியபடி "முதுகிற்குப் பின்னால் வெட்டிய குழிகளுக்குள்' விடுதலை விதைகளை விதைத்து "தனது அறிவாற்றலை உரமாக்கி' நீரிழிவு நோய் வாட்டிடும் போதும் அவ்விடு தலை விருட்சத்திற்கு நீர் பாய்ச்சிய அரசியல் சமராடி பாலா அண்ணர்.பேச்சு மேடையில் விடுதலைப் புலி களுக்கு வீசப்பட்ட சர்வதேச வலையை இலாவகமாக கழற்றி எறிந்த சாணக்கியமே சர்வதேசத்தை நோக்கிய சுயநிர்ணய உரிமை அறைகூவலிற்கு அத்திவாரமிட்டது.தனியரசுக்கு மாற்றீடான மறுபக்க இணைவுச் சாத்தியங்களை சமஷ்டி என்றும், உள்ளக சுயநிர்ணயம் என்றும் நடைமுறை யிலுள்ள கோட்பாடுகளை எடுத்துக் கூறியும் சிங்களத்திற்கு எதுவுமே புரியவில்லை.இயல்பு வாழ்வு திரும்பவேண்டுமென மனித உரிமை பற்றிக் கூறியும் சர்வதேசத்திற்கு விளங்கவில்லை. உலகத்து மக்களுக்கு ஏதோவொரு வகையில் தமிழர் தரப்பின் அரசியல் அபிலாஷைகள் பேச்சுத் தளத்தினூடாகக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்ற நம்பிக்கை உண்டு.பயங்கரவாதமென்ற போர்வைக்குள் மூடி மறைக்கப்பட்டிருந்த விடுதலையின் ஒளியினை அவர்களுக்குப் புரிந்த அரசியல் கோட்பாட்டு மொழிமூலம் சர்வதேசப் பரப்பில் படரவிட்ட தேசத்தின் குரலின் ஆளுமை போற்றத்தக்கது.உலகத்திற்கு எடுத்துரைத்த பெரும் பணி2002 பெப்ரவரி மாதம் வரை நிகழ்த்தப்பட்ட தமிழ்த் தேச விடுதலைப் போராட்ட பரிமாணத்தின் அரசியல் கருத்துநிலை வடிவத்தினை பேச்சுகள் ஊடாக உலகிற்கு எடுத் துரைக்கும் பெரும்பணி தமிழர் தலைமையில் தேசத்தின் குரலிற்கு வழங்கப்பட்டி ருந்தது.அரசியல் ஆளுமையும், தேச உருவாக்க சிந்தனையும் அற்ற வெறும் வன்முறைக் குழுவாக விடுதலைப் புலிகளைக் கணித்த அல்லது அவ்வாறு இருக்க வேண்டுமென் கிற கருத்தினைத் திணித்த சில பிராந்திய நலவாதிகளுக்கு அரசியல் ஆலோசகரின் முதிர்ச்சியான தேசிய விடுதலைக் கோட் பாட்டுக் கருத்துரைப்புகள் கசப்பாகவே இருந்திருக்கும்.விடுதலைப் புலிகளை இராணுவ வழிமூலம் அழிப்பதே சரியானதென தற்போது கூறும் பேராசான் ஜீ.எல். பீரிஸ், தேசத்தின் குரலோடுதான் சர்வதேசம் அங்கீகரிக்கும் நாகரிக அரசியல் பற்றிப் பேசினார்.சர்வதேசத்தின் ஏமாற்றும் தந்திரத்தைஉணர்ந்து கொண்டே பேச்சுஆழ்மனத்தில் இராணுவச் சிந்தனையும் நுனி நாக்கில் கற்றறிந்த ஏட்டுச் சுரக்காய்களும் ஊடாடுவதை அரசியல் வித்தகர் ஆறு சுற்றுப் பேச்சிலும் உணர்ந்திருப்பார்.திம்புவிலிருந்து ஜெனிவாவரை திலகர், யோகி, பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் போன்ற அரசியல் தளபதிகளை சிங்களத்தோடு பேசுமாறு அனுப்பியும் எதுவுமே அசைவுறாத நிலையில் இனி எந்த சிங்களத் தலைவர்களையும் நம்ப முடியாதென்கிற நிலைப்பாட்டினை 2007 ஆம் ஆண்டு மாவீரர் தின உரையில் தேசியத் தலைவர் முன் வைக்கிறார்.பேசிப் பயனில்லை என்பதையும், பேசியே அம்பலமாக்க வேண்டுமென தேசத்தின் குரல் உணர்ந்தார். ஆயினும் பேச வலியுறுத்தும் சர்வதேச நாடுகளின் ஏமாற்றும் தந்திரத்தை உணர்ந்தவாறே பேசச் சென்றார்கள் விடுதலைப் புலிகள்.35 வருடகாலப் போராட்ட வாழ்வில் ஐந்து வருடங்கள் சர்வதேச அரசியல் களத்திற்கு ஒதுக்கப்பட்டது. திம்புவில் தமிழர் போராட்டத் தலைமைகளால் உறுதியாக முன்வைக்கப்பட்ட முதல் மூன்று கோட்பாடுகளும் தேச உருவாக்கத்தோடு பரிணாமமடைந்து தாயகம், தேசியம், தன்னாட்சி என்கிற உச்ச கருத்து நிலையை வந்தடைந்துள்ளன.நியாயபூர்வமான கற்பனைக் கருத்துருவமாகக் கொள்ளப்பட்ட கோட்பாடுகள், விடுதலைப்புலிகளின் போராட்ட முன்னெடுப்போடும் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்ட தேச உட்கட்டுமானத்தோடும் யதார்த்த நிலையை எட்டியுள்ளது.அரசியல் கோட்பாட்டு வடிவத்தை உருவாக்கியவர்இந்த முழுமைப் பரிமாணத்திற்கான அரசியல் கோட்பாடு வடிவத்தை உருவாக்குவதில் தேசத்தின் குரல் ஆற்றிய பங்களிப்பு மிகவும் காத்திரமானதொன்றாக அமைகிறது.சமஷ்டி என்றாலே பதற்றமடையும் சிங்களத் தரப்பிற்கு "உள்ளக சுயநிர்ணயம்' என்கிற மாற்றுப் பதத்தை முன்வைத்து தமிழர் தரப்பின் அபிலாஷைகளை விளக்க முயற்சித்தார்.ஆனாலும் ஒற்றையாட்சி என்கிற குண் டுச் சட்டிக்குள் குதிரை ஓட்ட விரும்பும் சிங் களத்திற்கு சமஷ்டி, உள்ளக சுயநிர்ணயம், கூட்டாட்சி யாவும் அகராதியிலிந்து அகற் றப்படவேண்டிய சொற்பதங்களே.ஓருலகக் கோட்பாட்டுச் சிந்தனையைக் கொண்ட நாடுகளில் நடைமுறையிலுள்ள ஆட்சியமைப்பு வடிவங்களான சமஷ்டி, உள் ளக நிர்ணயம், கூட்டாட்சி என்பனவற்றையே தேசத்தின் குரல் தனது பேச்சுகளில் தீர்விற்கான மாற்று வழிமுறைகளாக முன்வைத்தார். அது குறித்து பேசப்படலாமென்பதை முன்னிலைப்படுத்தவோ அல்லது தாம் கடைப்பிடிக்கும் அரசியல் முறைமைகளை நியாயப்படுத்தவோ அனுசரணை வகித்த எவரும் முயலவில்லை.சிங்களம் விரும்பும் அரசியல் தீர்வோடு, சமரசம் கொள்ளும் நிர்ப்பந்தங்களையே தமிழர் தலைமை மீது திணிப்பதற்கு சர்வதேசம் விரும்பியது. இதனடிப்படையிலேயே இந்தியா ஏமாற் றியது போன்று சர்வதேசமும் இன்று எம்மை ஏமாற்றி விட்டதென தேசியத் தலைவர் தனது விசனத்தை மாவீரர் தின உரையில் தெரிவிக் கிறார்.கொசோவோவின் பிரகடனம் அவதானிக்கப்படுகிறதுஇன்றைய நிலையில் கொசோவாவின் சுயநிர்ணய உரிமைப் பிரகடனத்திற்கு சர்வ தேசம் மேற்கொள்ளப் போகும் இராஜதந்திர நகர்வுகளையும் அணுகுமுறைகளையும் அதே போன்று போராடும் சக்திகள் அனைத்தும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன. அரசுகளிற்கிடையே ஏற்படும் யுத்தங்களும் அரசொன்றினை எதிர்த்து தமது சுயநிர்ணய உரிமைக்காக முன்னெடுக்கப்படும் மக்கள் யுத்தங்களும் சர்வதேச மட்டத்தில் பல பிராந்திய முரண்பாடுகளைத் தோற்று விக்கின்றன.இம்முரண்நிலையைப் பகுப்பாய்வு செய்து சர்வதேச நகர்வுகளுக்கு ஏற்றவாறு எமது தேச விடுதலையை வென்றெடுக்கக்கூடிய இராஜதந்திர வழிமுறையினை வகுக்கக்கூடிய வல் லாண்மை தேசத்தின் குரலிற்கு உண்டு.அவர் எம்மைவிட்டுப் பிரிந்தாலும் தமிழ்த் தேசிய அரசியல் ஆளுமையில் அண்ணன் ஆற்றிய கனதியான பங்களிப்பும், தேசியத் தலைவனின் ஆழமான பிரபஞ்சம் பற்றிய புரிதலும், நேர்த்தியான பாதையில் எமது விடுதலைப் போராட்டத்தை வழிநடத்தியே தீரும்.தமிழின வரலாறு பாலாவின்பெயரைச் சுமக்கும்அப்பாதையை சீராகச் செப்பனிட்டு, விடுதலை வேள்வித் தீயில் தன்னை இணைத்து தேசத்தின் குரலாகவும் அரசியல் முகவரியாகவும் திகழ்ந்த அன்ரன் பாலசிங் கம் அவர்களைத் தமிழின வரலாறு நிச்சயம் சுமந்து செல்லும்.வாழ்வதற்காகப் போராடினார்.போராடக் கற்றுக்கொண்டார்.கற்றவற்றைப் பிரயோகித்தார்.பிரயோகித்ததை நிலைநாட்டினார்.நிலைநிறுத்தியது விரிந்து செல்லும்.விரிவனவெல்லாம் இலக்கை அடையும்.
Thanks Uthayan.
jaalavan@gmail.com

1-தமிழ்ச் சமூக வரலாறு

ஆ. சிவசுப்பிரமணியன்
சங்க காலம்தமிழக வரலாற்றின் தொடக்க காலமான சங்ககாலம் இனக்குழு வாழ்க்கையிலிருந்து நிலமானிய முறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.இதனால் இக்காலத்தை மாறுதல் நிகழும் காலம் என்பர். உணவு தேடி வாழும் இனக்குழு வாழ்க்கை, கால்நடை வளர்ப்பினை மையமாகக் கொண்ட மேய்ச்சல் நில வாழ்க்கை, உணவு உற்பத்தி செய்யும் ஒரு விதமான நிலவுடைமைச் சமுதாய வாழ்க்கை என மூன்று வகையான சமூக அமைப்புகள் வௌ;வேறு நிலப்பகுதிகளில் ஒரே நேரத்தில் நிலவின. இதனடிப்படையில் வௌ;வேறு வகையான பொருளாதார நடவடிக்கைகளும் சமூக அமைப்புகளும் கொண்ட ஓர் அசமத்துவ வளர்ச்சி )சங்ககாலத்தில் நிலவியது.
நிலப் பாகுபாடு
மலையும் மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி, காடும் காடு சார்ந்த பகுதியும் முல்லை, ஆறும் ஆறு பாயும் சமவெளிப் பகுதிகளும் மருதம், கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என அழைக்கப்பட்டன. குறிஞ்சியும் முல்லையும் கோடையின் வெம்மையால் தம் நிலையிலிருந்து மாறுபட்டு நிற்கும். இது தற்காலிகமான ஒன்று. இந்நிலப்பகுதி பாலை எனப்பட்டது.மக்களும் பண்பாடும்குறிஞ்சி நில மக்கள் சிலம்பன், குறவன், வெற்பன், வேட்டுவர், கானவர், குன்றவர் என அழைக்கப்பட்டனர். தொடக்கத்தில் வில், அம்பு, வேல் ஆகியவற்றின் துணையுடன் வேட்டையாடி வாழ்ந்தனர். மூங்கிலரிசி, திணை, மலை நெல், தேன், கிழங்குகள் ஆகியனவும் உணவாகப் பயன்பட்டன. உணவு தேடி வாழும் வாழ்க்கை இங்கு நிலவியது. பின், புன்புல வேளாண்மை உருவாகியது. சேயோனாகிய முருகன் இவர்களுடைய கடவுளாக இருந்தான். பறை, தொண்டகப்பறை, குறிஞ்சியாழ் ஆகியன இங்கு வழங்கிய இசைக் கருவிகள்.வள்ளிக்கூத்து குறிஞ்சி நிலத்துக்குரிய ஆட்டக் கலையாகும்.ஆடுமாடுகளை மேய்க்கும் மேய்ச்ச்சல் நில வாழ்க்கையை மையமாகக் கொண்டது முல்லை நிலம். வரகு, சாமை, கேழ்வரகு, கடலை, அவரை, துவரை ஆகியன மழையை நம்பி மேற்கொண்ட வேளாண்மையில் கிட்டின. மாயோனாகிய திருமால் முல்லை நிலத்தின் கடவுள். ஏறுகோட்பறை, குழல், முல்லையாழ் ஆகியன இந்நிலத்துக்குரிய இசைக் கருவிகள். உணவு தேடும் வாழ்க்கையைக் கடந்து உணவு உற்பத்தி செய்யும் நிலையும் நிரைகளை சொத்துக்களாக கொள்ளும் நிலையும் இங்கு உருவாகின.மலையிலும் காட்டிலும் அலைந்து திரிந்த நிலையிலிருந்து வளர்ச்சி பெற்று ஆற்றங்கரையில் நிலையாக வாழத் தொடங்கிய இடம் மருத நிலமாகும். இங்கு உழு தொழிலின் மூலம் உணவு உற்பத்தி நிகழ்ந்தது. ஆற்று நீரை நேரடியாகவும் நீர்நிலைகளில் தேக்கி வைத்தும் பயன்படுத்தினர். செந்நெல், வெண்நெல், கரும்பு, மஞ்சள் (பிற்காலத்தில் வாழை) ஆகியன முக்கிய உற்பத்திப் பொருளாயின. கரும்பிலிருந்து வெல்லம் தயாரிக்கும் கரும்பாலைகளும், உபரி நெல்லை மூலதனமாகக் கொண்டு பண்டமாற்று வாணிபத்தை மேற்கொண்ட வாணிப குழுக்களும் உருவாயின. சிற்×ர்கள் பேரூர்களாக வளர்ச்சி பெறத் தொடங்கின. நெல்லரிப் பறையும், மருதயாழும் இந்நிலத்தின் இசைக் கருவிகளாகயிருந்தன. தச்சர், கொல்லர், குயவர் ஆகிய கைவினைர்களின் தோற்றமும் இங்குதான் உருவாகியது.நெய்தல் நிலப்பகுதியில் மீன்பிடித்தலும், உப்பு உற்பத்தி, உலர்மீன் உற்பத்தி செய்தலும், இவற்றை பிற நிலப்பகுதிகளுக்குக் கொண்டு சென்று பண்டமாற்று செய்தலும் முக்கிய தொழில்கள். இதன் வளர்ச்சி நிலையாகக் கடல் வாணிபம் உருவாகியது. நெய்தல் குடியிருப்புகள் பட்டினம், பாக்கம் என்றழைக்கப்பட்டன. வருணன் (வண்ணன்) இந்நிலத்தின் தெய்வம். நாவாய்பறையும், நெய்தல் யாழும் இசைக் கருவிகள்.வளமற்ற நிலப்பகுதியான பாலையில் வழிப்பறியும் கொள்ளையும் மக்களின் துணைத் தொழில்களாயின. இங்கு வாழ்ந்த மறவர்களின் குடியிருப்பு, கொல் குறும்பு எனப்பட்டது. கொற்றவை, இந்நிலத்தின் தெய்வம். நிறைகோட்பறை, சூறைகோட்பறை, வாகையாழ் ஆகியன இந்நிலத்தின் இசைக் கருவிகள்.சங்ககால அரசியல்சங்ககாலத் தமிழகம் மன்னராட்சியின் கீழ் செயல்பட்டது. ஆட்சி புரிவோர் குறுநில மன்னர்கள். வேந்தர் என இரண்டு வகையாக அழைக்கப்பட்டனர். குறிஞ்சி முல்லை நெய்தல் பாலை ஆகிய நான்கு நிலப் பகுதிகளிலும் வாழ்ந்த குறவர், ஆயர், பரவர், மறவர் ஆகிய மக்கட் பிரிவினர் தத்தமக்கென சுயேச்சையான ஆளுவோரைக் கொண்டிருந்தனர். இவர்களையே குறுநில மன்னர்கள் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடும். குறுநில மன்னர்களுக்கும் அவர்களால் ஆளப்படும் மக்களுக்குமிடையே ஆழமான வேறுபாடுகள் நிலவவில்லை. மருதநில அல்லது நெய்தல் நில நகர் ஒன்றினை மையமாகக் கொண்டு பரந்த நிலப்பகுதியை ஆட்சிபுரிந்தவர்கள் வேந்தர் எனப்பட்டனர். சேரர், சோழர், பாண்டியர் என மூன்று வேந்தர்கள் மட்டுமே பெருநிலப் பகுதியை ண்டனர். வாய்ப்பு நேரிடும் போது குறுநில மன்னர்களின் நிலப் பகுதியையும் தங்களுடன் இணைத்துக் கொண்டனர்.மூவேந்தர்களுக்கு துணை புரிய 1. அமைச்சர், 2. புரோகிதர், 3. சேனாதிபதி, 4. தூதர், 5. ஒற்றர் என்போரைக் கொண்ட ஐம்பெருங் குழுவும், 1. கரணத் தலைவர், 2. கருமகாரர், 3. கனகச்சுற்றம், 4. கடைகாப்பாளர், 5. நகரமாந்தர், 6. படைத் தலைவர், 7. யானை வீரர், 8. இவுளிமறவர் என்போரைக் கொண்ட எண்பேராயம் என்ற அமைப்பும் இருந்தன. ஆயினும் இவ்விரு அமைப்புகளும் மன்னனைக் கட்டுப்படுத்தும் தன்மையன அல்ல. குறுநில மன்னர்கள் ஆண்ட பகுதிகளில் பொதியில் மன்றம் என்ற அமைப்புகள் செயல்பட்டன.சமயம்ஆவிகளின் மீது நம்பிக்கை கொண்ட ஆவி உலகக் கோட்பாடும் குலக்குறி’ வழிபாடும் மூத்தோர் வீரர்வழிபாடும் சங்ககாலச் சமயத்தில் செல்வாக்கு செலுத்தின. போரில் இறந்துபட்ட வீரர்களுக்கு நடுகல் நட்டி வழிபடும் நடுகல் வழிபாடு பரவலாக இருந்தது. கடிமரம், காவல்மரம் என்ற பெயரில் குறிப்பிட்ட மரங்கள் புனித மரங்களாகக் கருதப்பட்டன. பாம்பு வழிபாடும் வழக்கிலிருந்தது. திருமால், முருகன், கொற்றவை ஆகியன சங்ககாலத்தில் முக்கிய தெய்வங்களாக விளங்கின. இன்று பரவலாக உள்ள பிள்ளையார் வழிபாடு சங்ககாலத்தில் இல்லை. சிவனைப் பற்றிய குறிப்புகள் சங்க நூல்களில் இடம் பெற்றாலும் மேற்கூறிய தெய்வங்களைப் போல் செல்வாக்கு பெற்றிருக்கவில்லை. வாலியோன் என்ற பெயரில் பலராமர் வழிபாடு இருந்துள்ளது. சமணம், பௌத்தம் ஆகிய வடபுல சமயங்கள் இங்கு பரவின. வடமொழித் தாக்கத்தின் விளைவாக வேள்விகள் நிகழ்ந்தன. சங்ககால கவிஆர்கள் சிலர் இவ்விரு சமயங்களையும் தழுவியிருந்தனர். இவ்வுலக வாழ்க்கையை வெறுத்தொதுக்கும் நிலையாமைக் கோட்பாடு செல்வாக்குப் பெறவில்லை. வாழ்க்கை உவப்புக் கொள்கையே மேலோங்கியிருந்தது.பொருளியல்நாட்டில் அடிப்படைத் தொழிலாக வேளாண்மை அமைந்தது. மருதநிலப் பகுதியில் நெல்லும், கரும்பும் பயிர் செய்யப்பட்டன. எள், கொள், துவரை ஆகியன குறிஞ்சி, முல்லை நிலப்பகுதிகளில் பயிர் ஆயின. சாமை, வரகு, திணை ஆகியன முக்கிய புன்செய் நிலப் பயிர்களாகும். தேனெடுத்தல், கிழங்குகளை அகழ்ந்தெடுத்தல், மீன்பிடித்தல், உப்பு விளைவித்தல் ஆகியன ஏனைய பொருளாதார நடவடிக்கைகளாகும். நெசவு, கொல்வேலை, தச்சு வேலை, கருப்பஞ் சாற்றிலிருந்து வெல்லம் எடுத்தல், சங்கறுத்தல், கூடை முடைதல் ஆகியன முக்கிய கைத்தொழில்களாக அமைந்தன. பண்டமாற்று முறையில் வாணிகம் நிகழ்ந்தது. பெரிய நகரங்களில் அங்காடி என்ற பெயரில் சந்தைகள் இருந்தன. பகற்பொழுதில் செயல்படுபவை நாளங்காடி என்றும், இரவு நேரத்தில் செயல்படுபவை அல்லங்காடி என்றும் அழைக்கப்பட்டன. கடைத்தெரு நியமம் என்று அழைக்கப்பட்டது. பொருட்களைக் கொண்டு செல்ல எருதுகள் பூட்டப்பட்ட வண்டிகள் பயன்படடன. வணிகர்கள் சாத்து என்ற பெயரில் குழுக்களாகச் செயல்பட்டனர். மிளகு, அரிசி, இஞ்சி, ஏலம், மஞ்சள், இலவங்கம் ஆகிய உணவுப் பொருட்களும் சந்தனம், அகில் ஆகிய மணப் பொருட்களும் தமிழகத்திலிருந்து அரேபியா, எகிப்து, உரோம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. குரங்கு, மயில், யானைத்தந்தம், முத்து ஆகியனவும் ஏற்றுமதியாயின. கடல் வாணிகத்திற்குப் பாய்கள் கட்டப்பட்ட மரக்கலங்கள் பயன்பட்டன.இலக்கணம்தமிழ் மொழி தொன்மையான நூலாக இன்று நம் பார்வைக்குக் கிட்டுவது தொல்காப்பியமாகும். தனக்கு முன்னால் வாழ்ந்த நூலாசிரியர்களின் நூல்களை கற்றுத் தேர்ந்து தொல்காப்பியர் இந்நூலை உருவாக்கியுள்ளார். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பிரிவுகளாக இந்நூல் அமைந்துள்ளது. பொதுவாக மொழிகளின் இலக்கணம் என்பது எழுத்து, சொல் யாப்பு சார்ந்ததாக மட்டுமே இருக்கும். ஆனால் தொல்காப்பியம் இவை மூன்றுடன் மட்டுமின்றி மனித வாழ்க்கையின் இலக்கணத்தை உணர்த்தும் வகையில் பொருளதிகாரம் என்ற அதிகாரத்தைப் படைத்துள்ளது.இலக்கியம்தமிழ் இலக்கியத்தின் பொற்காலமாக சங்ககாலம் அமைந்தது. இக்காலத்தில் தோன்றிய பெரும்பான்மைப் பாடல்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற பெயரில் பிற்காலத்தில் தொகுப்பு நூல்களாகத் தொகுக்கப்பட்டன. 1. நற்றிணை, 2. குறுந்தொகை, 3. ஐங்குறுநூறு, 4. பதிற்றுப்பத்து, 5. பரிபாடல், 6. கலித்தொகை, 7. அகநானூறு, 8. புறநானூறு என்ற எட்டு நூல்களும் எட்டுத்தொகை என்ற தொகுப்பில் அடங்குகின்றன. இந்நூல்களில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பல்வேறு கவிஆர்களால் பல்வேறு கால கட்டங்களில் பாடப்பட்டவை. 1. திருமுருகாற்றுப்படை, 2. பொருநராற்றுப்படை, 3. சிறுபாணாற்றுப்படை, 4. பெரும்பாணாற்றுப்படை, 5. முல்லைப்பாட்டு, 6. மதுரைக் காஞ்சி, 7. நெடுநல் வாடை, 8. குறிஞ்சிப் பாட்டு, 9. பட்டினப்பாலை, 10. மலைபடுகடாம் என்ற பத்து நூல்களும் பத்துப்பாட்டு எனப் பெயர் பெற்றன. இவற்றுள் திருமுருகாற்றுப்படையும், நெடுநல்வாடையும் நக்கீரராலும், எஞ்சிய எட்டு நூல்களும் எட்டு கவிஆர்களாலும் இயற்றப்பட்டன. இவ்விலக்கியங்களின் தனிச்சிறப்பு இவை அகம் புறம் என்ற பொருள் பாகுபாடுகளைக் கொண்டிருப்பதாகும். மனிதர்களின் அகம் (மனம்) சார்ந்த காதல் தொடர்பான செய்திகளைக் கூறுவது அகத்திணை ஆகும். இதற்குப் புறத்தேயுள்ள கல்வி, வீரம், கொடை, நீதி அறமல்லன போன்றவற்றைக் குறிப்பது புறத்திணையாகும். அகநூல்களில் இடம்பெறும் காதலர்களை, இயற்பெயர் சுட்டிக் குறிப்பிடக் கூடாது, என்ற தொல்காப்பியர் விதியை சங்ககாலக் கவிஆர்கள் உறுதியாகக் கடைபிடித்தனர்.சங்ககாலத்தை அடுத்து வரும் காலம் சங்கம் மருவிய காலம் எனப்படும். இக்காலத்தில் உருவான பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு எனப்படுகின்றன. இவற்றுள் திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை ஐம்பது, கார் நாற்பது, கைந்நிலை என்ற ஆறு நூல்களும் சங்ககால அகத்திணைமரபு சார்ந்தவை. எஞ்சிய நூல்களில் திருக்குறள் தவிர்ந்த, நாலடியார், பழமொழி, ஏலாதி, திரிகடுகம், நான்மணிக்கடிகை, ஆசாரக் கோவை, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்ச மூலம், முதுமொழிக் காஞ்சி என்ற பதினொறு நூல்களும் புறத்திணை சார்ந்தவை. குறள் அகமும், புறமும் சார்ந்த நூலாகும்.பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் தலையான இடத்தைப் பெறுவது திருக்குறள். 1330 குறள் வெண்பாக்களைக் கொண்ட இந்நூல் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது. எச்சமயத்தையும் சாராது வாழ்வியல் நெறிகளைக் கூறுவது இதன் தனிச் சிறப்பாகும். சங்க காலத்தில் வாழ்வியலின் பகுதியாகக் கருதப்பட்ட கள்ளுண்டல், பரத்தையற் பிரிவு, புலால் உண்ணுதல்,சூதாடல் ஆகியன வள்ளுவரால் கடிந்தொதுக்கப்படுகின்றன. திருக்குறளுக்கு அடுத்த இடத்தைப் பெறும் நாலடியார் சமண முனிவர்கள் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பாகும். இந்நூல் குறளுக்கு மாறாக உலகியல் வாழ்க்கை மீது வெறுப்பை வெளிப்படுத்தி துறவறத்தை வற்புறுத்துகிறது. இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்ற இரு நூல்களும் வைதீக சமயச் சார்பானவை. ஒழுக்கங்களின் தொகுதி என்ற பொருளைத் தரும் ஆசாரக் கோவை என்ற நூல் வடமொழி நீதிநூல்கள் சிலவற்றின் சாரமாக அமைகின்றது. பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகியன சமணம் சார்ந்து நீதி கூறுகின்றன.பல்லவர் காலம் (கி.பி. 3 முதல் 9 வரை)சங்ககாலத்துக்குப் பின் களப்பிரர் என்ற அரச மரபினரின் ஆட்சி நடைபெற்றது. இவர்கள் சமண சமயத்தைச் சார்ந்தவர்கள். இவர்களது காலத்தை இருண்ட காலம் என்று சொல்வது பொதுவான மரபு. ஆனால் திரமிள சங்கம் என்ற பெயரில் சங்கம் ஒன்றை அமைத்து தமிழ் வளர்த்தமையை சதாசிவபண்டாரத்தார் சுட்டிக்காட்டி, தமிழ் மொழிக்கு இது இருண்ட காலமல்ல என்பதைச் சான்றுகளுடன் நிறுவியுள்ளார். களப்பிரர் ஆட்சிக்குப் பின் பல்லவர் ஆட்சி தமிழகத்தில் நிலவியது. கி. பி. 260 தொடங்கி 450 ஆண்டுகள் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு பல்லவர் ஆட்சி நிலை பெற்றிருந்தது.சமயம்சைவமும், வைணவமும் எழுச்சி பெற்ற காலம் பல்லவர் காலம் ஆகும். சைவநாயன்மார்களும், வைணவ ழ்வார்களும் தோற்றுவித்த சமய இயக்கம் பக்தி இயக்கம். இவ்விரு சமயத்தினரும் சமணத்துடனும், பௌத்தத்துடனும் மாறுபட்டு அவற்றின் செல்வாக்கை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தேவார ஆசிரியர்களான திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தமிழ் நாடெங்கும் பயணம் செய்து சைவ சமயத்திற்குப் புத்துயிர் ஊட்டினர். இவர்களால் பாடப்பெற்ற சைவக் கோயில்கள் பாடல் பெற்ற தலங்கள் எனப் பெயர் பெற்றன. இவர்களைப் போன்றே ஆழ்வார்களும் வைணவக் கோயில்களுக்குச் சென்று பக்திப் பாசுரங்கள் பாடினர். இவர்களால் பாடப்பெற்ற வைணவக் கோயில்கள் மங்களா சாசனம் செய்த திருப்பதிகள் எனப்பட்டன.பௌத்த சமணத் துறவிகள் வாழும் சமய மடங்களில் சமய நூல்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன. காஞ்சிபுரம் பௌத்த மடத்தில் பயின்ற போதிதருமர், போதிருசி என்ற இரு துறவிகளும் சீனா, ஜப்பான் நாடுகளுக்குச் சென்று சென் புத்தமதப் பிரிவை பரப்பினர். பீகாரில் இருந்த உலகப் புகழ் பெற்ற நாலந்தா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும், துணை வேந்தராகவும் இருந்த தருமபாலர் காஞ்சியில் பிறந்து பயின்றவர்தாம். வெளிநாட்டுப் புத்ததுறவிகள் இங்கு வந்து சமய நூல்களைக் கற்றுச் சென்றனர்.பல்லவர் அரசுசங்ககாலத்தைப் போன்றே பல்லவர் காலத்திலும் ஆட்சிமுறை பிறப்பு வழி உரிமையாய் இருந்து வந்தது. மன்னருக்குத் துணைபுரிய அமைச்சர்கள் இருந்தனர். ஆட்சிப் பகுதியானது கோட்டம், நாடு, ஊர் என்று மூன்று பிரிவுகளாக பகுக்கப்பட்டது. நாட்டின் நிர்வாகத்தைக் கவனித்து வந்தவர் நாட்டார் என்றும், ஊரின் ஆட்சிக்குப் பொறுப்பான வேளாளர்கள் ஊரார் என்றும் அழைக்கப்பட்டனர். இவை தவிர பிரம்மதேயம் என்ற பெயரில் பிராமணருக்கு தானமாக வழங்கப்பட்ட ஊர்களைப் பிராமணர்களே நிர்வகித்து வந்தனர். இம்மூன்று வகையான நிர்வாகிகளும் கோவில் மான்யங்கள், நீர்ப்பாசனம், நீதி விசாரணை, நிலவுரிமை போன்றவற்றை கவனித்து வந்தனர். இதன் பொருட்டு வாரியங்கள் பல உருவாக்கப்பட்டன. இவ்வாரியங்கள் அதற்கென்று விதிக்கப்பட்ட பணியினைச் செய்து வந்தன. சான்றாக வேளாண்மைக்கு ஆதரவான ஏரிகளைப் பராமரிக்கும் வாரியம் ஏரி வாரியம் என்றும் தோட்டங்களைப் பராமரிக்கும் வாரியம் தோட்ட வாரியம் என்று அழைக்கப்பட்டதைக் குறிப்பிடலாம்.கலைபல்லவர் காலத்தில் கட்டிடக் கலையும் சிற்பக் கலையும் வளர்ச்சியடைந்தது. கருங்கற்களினால் கட்டிடங்களை கட்டும் பணி பல்லவர் காலத்தில்தான் உருவாகியது. குகைகளை உருவாக்கி அமைக்கப்பட்ட குடைவரைக் கோவில்கள் பல்லவர் காலத்தில் செல்வாக்கு பெற்றன (பல்லவர்களுக்கு முன்னர் பாண்டியர்கள் குடைவரைக் கோவில்களை உருவாக்கி உள்ளனர் என்பது தொல்லியல் வல்லுநர் நாகசாமியின் கருத்து). கல்லிலே கலை வண்ணம் கண்ட பல்லவர் கால சிற்பக்கலைக்கு காஞ்சியிலும், மாமல்லபுரத்திலும் உள்ள கோவில் சிற்பங்கள் சான்று பகர்கின்றன. இவை தவிர இசையும், நடனமும் பல்லவர் காலத்தில் தழைத்தமைக்கு, குடுமியான்மலை, திருமெய்யம் ஊர்களில் காணப்படும் கல்வெட்டுக்களும் சித்தன்ன வாசலில் தீட்டப் பெற்றுள்ள நடன மங்கையரின் ஓவியங்களும் சான்று.பல்லவர் காலத்தில் வடமொழி செழித்து வளர்ந்தது. பல்லவர்கள் வடமொழி ஆர்வலர்களாக இருந்தமையே இதற்குக் காரணமாகும். பல்லவ மன்னர்கள் அவையில் நடிப்பதற்காக பாஷகவி என்பவர் வடமொழி நாடகங்கள் சிலவற்றை எழுதியுள்ளார். பௌத்த துறவிகளைப் பகடி செய்யும் வகையில் மத்த விலாச பிரகசனம் என்ற எள்ளல் நாடகத்தை மகேந்திர வர்மன் வடமொழியில் எழுதியுள்ளான். அணி இலக்கண அறிஞரான தண்டி என்னும் கவிஞர் எழுதிய காவிய தரிஸனம் என்ற வடமொழி அணி இலக்கண நூல் தண்டியலங்காரம் என்ற பெயரில் தமிழில் வெளியாயிற்று. பாரதக் கதையைக் கூறும் பாரத வெண்பாவும் நந்திக் கலம்பகம் என்ற சிற்றிலக்கியமும், பெருங்கதை என்ற காப்பியமும் பல்லவர் காலத்தில் உருவான குறிப்பிடத்தக்க தமிழ் இலக்கியங்கள் ஆகும்.சோழர் காலம் (கி.பி. 10 கி.பி. 13)பல்லவர் காலத்துக்குப் பின் தமிழ்நாட்டில் உருவான ஒரு வலிமையான அரசு சோழப் பேரரசு கும். சோழர் ஆட்சியிலும் மன்னனே ஆட்சி மையமாக அமைந்தான். சோழநாடு மண்டலங்கள் என்ற பெரும் பிரிவுகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு மண்டலத்துள்ளும் வளநாடுகள் பல இருந்தன. பல கிராமங்களின் தொகுப்பாக கூற்றம் என்ற அமைப்பு இருந்தது. இதை கோட்டம் அல்லது நாடு என்றும் குறிப்பிட்டனர். பல கூற்றங்களை உள்ளடக்கியதாக வளநாடு அமைந்தது. சுப்பாராயலுவின் கருத்துப்படி 10 முதல் 300 சதுரம் வரை பரப்பைக் கொண்ட நிருவாகப் பிரிவாக நாடு இருந்தது. நாடுகளின் பொருப்பாளர்களாக நாட்டார், நாடுகண்காணி என்போர் இருந்தனர். வேளாண்மை காவல் வரிவசூல் ஆகிய பணிகளை இவர்கள் மேற்கொண்டனர். மன்னனுக்கு உதவி புரிய இருக்கும் அரசு அலுவலர்கள் உடன் கூட்டம் என்று அழைக்கப்பட்டனர். வாய்மொழியாக மன்னன் பிறப்பிக்கும் ஆணைகளைக் கேட்டு அவற்றை எழுத்தில் பதிவு செய்து உரியவர்களிடத்தில் அனுப்பி வைக்கும் பணியைச் செய்பவன் திருவாய்க்கேள்வி திருமந்திர ஓலை எனப்பட்டான்.கலை இலக்கியம்சோழர் காலத்தில் கட்டிடக் கலையும் சிற்பக்கலையும் செழித்து வளர்ந்தன. தன் நிழலைத் தனக்குள்ளே தருக்குடனே தாங்கி நிற்கும் தஞ்சைப் பெருங்கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம், தராசுரம் ஆகிய ஊர்களிலுள்ள கோவில்களும் அங்குள்ள சிற்பங்களும் சோழர்காலக் கட்டிடக் கலைக்குச் சான்றுகளாய் உள்ளன.சோழர் கால இலக்கியங்களில் சைவ சமயச் சார்புடைய இலக்கியங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உருவாயின. உமாபதி சிவாச்சாரியார் என்பவர் எட்டு சைவ சித்தாந்த நூல்களை இயற்றியுள்ளார். சைவ சமயத்தின் 63 நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் திருத்தொண்டர் புராணம் சேக்கிழாரால் இயற்றப்பட்டது. சிவபெருமான் மதுரையில் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களைக் கூறும் திருவிளையாடற் புராணம் என்ற நூலைப் பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவர் எழுதியுள்ளார்.ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவால நடையில் ஈடு எனப்படும் விரிவுரை இக்காலத்தில் உருவாகியது.சமண சமயத்தைச் சார்ந்த திருத்தக்கத்தேவர் எழுதிய சீவகசிந்தாமணி, கொங்குவேளிர் எழுதிய பெருங்கதை ஆகிய காவியங்களும் வளையாபதி, நீலகேசி என்ற சமணக் காப்பியங்களும் குண்டலகேசி என்ற பௌத்த காப்பியமும் தோன்றின. திவாகரம், பிங்கலந்தை என்ற நிகண்டுகளும், நன்னூல், யாப்பருங்கலக்காரிகை, புறப்பொருள் வெண்பா மாலை, வீரசோழியம், வெண்பாப் பாட்டியல் ஆகிய இலக்கண நூல்களும் உருவாயின.செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி ஒட்டக்கூத்தரின் மூவருலா, கம்பரின் இராமாயணம், புகழேந்தியின் நளவெண்பா ஆகியன சோழர் காலத்தில் தோன்றிய பிற இலக்கியங்கள் ஆகும். இளம்பூரணர், சேணாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார் ஆகியோர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதினர். சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரும், பரிபாடலுக்கும், திருக்குறளுக்கும் உரை எழுதிய பரிமேலழகரும் சோழர் காலத்தவரேயாவர்.சோழர் காலத்தில் வடமொழிப் பயிற்சியளிக்கும் கல்வி நிறுவனங்கள் (கடிகா) பல நிறுவப்பட்டன. நூல்களைச் சேகரித்து வைக்கும் நூலகம் போன்ற அமைப்பு சோழர் காலத்தில் இருந்தது. இதை சரஸ்வதி பண்டாரம் என்றழைத்தனர்.கிராமசபைசோழர் ஆட்சியின் சிறப்பியல்பாக கிராம சுய ஆட்சி முறை நிலவியது. பிராமணர்களுக்கு உரிய நிலங்களுக்கு வரி வாங்கப்படவில்லை. இவை இறையிலி எனப்பட்டன. இறையிலி நிலங்களைக் கொண்ட பிராமணர் குடியிருப்புக்கள் கிராமங்கள் எனப்பட்டன. குடும்பு என்ற சிறு பிரிவுகளாக கிராமம் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குடும்புக்கும் ஓர் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடும்புக்குரிய வேட்பாளர்களின் பெயர்களைப் பனை ஓலைத் துண்டில் தனித்தனியாக எழுதி அவ்வக் குடும்புக்குரிய குடத்தில் இடுவர். பின்னர் குடத்தை நன்றாக குலுக்கி அறியாச் சிறுவன் ஒருவனைக் கொண்டு ஓலைத்துண்டு ஒன்றை எடுக்கும்படி செய்வர். அவனால் எடுக்கப்படும் ஓலையில் காணப்படும் பெயருக்குரியவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். குடும்பில் உறுப்பினராவதற்கு தகுதிகள் வரையறுக்கப்பட்டிருந்தன. சொந்த மனையில் வீடு கட்டியிருத்தல், குறைந்தது கால்வேலி நிலமுடையவராய் இருத்தல், 35 வயதிற்குக் குறையாதிருத்தல், 70 வயதிற்கு மேற்படாதிருத்தல், நான்கு வேதத்தில் ஒரு வேதத்தையோ, ஒரு பாஷியத்தையோ ஓதும் ஆற்றல் பெற்றிருத்தல் என உத்திரமேரூர் சாசனம் குறிப்பிடுகிறது. அடித்தள மக்கள் கிராம சபைகளில் நுழைய விடாமல் தடுப்பதில் இத்தகுதிகள் முக்கியப் பங்காற்றின. மேலும் ஒரு குழுவிலோ, வாரியத்திலோ உறுப்பினராக இருந்து பணியாற்றிய போது ஒழுங்காகக் கணக்கு காட்டத் தவறியவர்கள், அவருடைய உறவினர்கள், ஒழுக்கமற்றவர்கள், வேட்பாளராகத் தகுதியற்றவர்கள் என்றும் இச்சாசனம் தெரிவிக்கின்றது.இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு வாரியங்கள் அமைக்கப்படும். ஏரி வாரியம், தோட்ட வாரியம், பஞ்சவார வாரியம், பொன் வாரியம், கலிங்கு வாரியம் கழனி வாரியம் ஆகியன முக்கிய வாரியங்களாகும். இவ்வாரியங்களின் உறுப்பினர்கள் வாரியப் பெருமக்கள் என்றழைக்கப்பட்டனர். ஒவ்வொரு வாரியங்களும் தமக்குரிய பணிகளைச் செய்து வந்தன.பிராமணர் அல்லாதோர் வாழ்ந்த குடியிருப்புக்கள் ஊர்கள் எனப்பட்டன. இவற்றை ஊரவை நிறுவகித்தது. அவையின் நிர்வாகக்குழு, ஆளும் கணம் என்றழைக்கப்பட்டது. வணிகர்கள் மிகுதியாக வாழ்ந்த நகரங்களின் சபை நகரத்தோம் எனப்பட்டன.சமூகம்சோழர் காலச் சமுதாயத்தில் சாதி வேறுபாடுகள் ஆழமாக இருந்தன. பிராமணர்கள் ஏற்றம் பெற்றிருந்த சாதியினராக விளங்கினர். அகரங்கள், அக்கிரகாரங்கள், சதிர்வேதி மங்கலங்கள் என்ற பெயர்களில் பிராமணர்களுக்குத் தனிக்கிராமங்கள் உருவாக்கப்பட்டன. கோவில்கள், மடங்கள் ஆகியன இவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. இலவச உணவும் உறையுளும் நல்கி வேதக்கல்வி புகட்டும் வேதபாட சாலைகளும் இவர்களுக்கென்றே மன்னர்களால் நிறுவப்பட்டன.பிராமணர்களுக்கு அடுத்த நிலையில் நிலக்கிழார்களாக விளங்கிய வேளாளர்கள் இருந்தனர். கோவில் நிலங்களின் மீது பிராமணர்களுடன் இணைந்து இவர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இவ்விரு சமூகத்தினரையும் தவிர பல்வேறு கைவினைத் தொழில் செய்து வந்தவர்களும், உழுகுடிகளான, பள்ளர், பறையர் ஆகியோரும் தனித்தனி சாதிகளாக அழைத்திருந்தனர். சோழர் காலச் சாதிகள் வலங்கையர், இடங்கையர் என்ற இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இவ்விரு பிரிவுகளின் உருவாக்கம் குறித்து வினோதமான புராணக் கதைகள் உருவாகியுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 98 குலங்கள் இடம் பெற்றிருந்தன. வலங்கையர் இடங்கையரிடையே சில நேரங்களில் பூசல்களும் மோதல்களும் நிகழ்ந்தன. பெரும்பாலும் இடங்கையினர் துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்தனர். சில நேரங்களில் வலங்கையினர் இடங்கையினர் ஆகிய இரு வகுப்பினரும் வேறுபாடுகளைத் துறந்துவிட்டு பிராமணர்களையும், வேளாளர்களையும் எதிர்த்துப் போராடியுள்ளனர். பெரும்பாலும் இப்போராட்டம் வரி எதிர்ப்பை மையமாகக் கொண்டேயிருந்தது.தீண்டாமை சோழர் காலத்தில் வேர்விட்டு வளர்ந்திருந்தது. பறையர்களுக்கென்று தனிக்குடியிருப்புகள் இருந்தன. தீண்டாச்சேரி என்று இக்குடியிருப்புகள் அழைக்கப்பட்டன. ஆயினும் இவர்களில் சிலர் சொத்துரிமை உடையவர்களாகவும் இருந்தனர்.ஆடலிலும், பாடலிலும் வல்ல பெண்டிரை விலைக்கு வாங்கியும், வன்முறையில் கைப்பற்றிக் கொண்டும் கோவில் பணிகளில் ஈடுபடுத்தினர். கோவிலைப் பெருக்கி மெழுகுதல், மாலை தொடுத்தல் தேவாரம் ஓதுதல், நடனமாடுதல், நாடகங்களில் நடித்தல் ஆகியன இவர்களின் முக்கியப் பணிகளாக அமைந்தன. தலைக்கோலிகள், தளிச்சேரிப் பெண்டுகள், பதியிலார், தேவரடியார் என்று இவர்களுக்குப் பெயர்கள் வழங்கின.அடிமைமுறை சோழர் காலத்தில் நிலை பெற்றிருந்தது. மன்னர்களும், வளம் படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கினர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் எனப் பெயர் பெற்றது. வறுமையின் காரணமாகத் தம் குடும்ப உறுப்பினர்களை விற்பதும் தம்மைத்தாமே விற்றுக் கொள்வதும் நிகழ்ந்துள்ளன. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். இவ்வாறு அடிமைகளானவர் மீது மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டது. அரண்மனை அடிமைகளுக்குப் புலிச்சின்னமும், சிவன் கோவில் அடிமைகளுக்குத் திரிசூலச் சின்னமும், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னமும், இலட்சினையாக இடப்பட்டன. நெற்குற்றுதல், வேளாண் பணிகள், கோவிற் பணிகள் ஆகியன அடிமைகளின் முக்கிய பணிகளாகும். தங்களை மட்டுமின்றி தங்கள் பரம்பரையினரையும் அடிமைகளாக விற்றுக் கொண்டதை இவர்களையும் இவர்கள் வர்க்கத்தாரையும் பரம்பரை பரம்பரையாக, வழியடிமை, யானும் எம் வம்சத்தாரும் என்று கல்வெட்டுக்களில் காணப்படும் தொடர்கள் உணர்த்துகின்றன.சமயம்சோழர் காலத்தில் அரசு சமயமாக சைவம் விளங்கியது. சிவனுக்கு முக்கியத்துவம் இருந்தது. பல்லவர் காலத்தில் வளரத் தொடங்கிய சைவம் சோழர் காலத்தில் வளர்ச்சியின் உச்சத்தை எட்டியது. சைவ சமயத்தின் தத்துவமாக சைவ சித்தாந்தம் உருப்பெற்று செல்வாக்குற்றது. பதி (இறைவன்), பசு (உயிர்), பாசம் (இருள் + தளை) என்ற மூன்றும் சைவசித்தாந்தத்தின் அடிப்படைத் தத்துவமாகும். இதன்படி உலக உயிர்கள் ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்றையும் உள்ளடக்கிய பாசத்தை நீக்கி பதியாகிய இறைவனை அடைய வேண்டும். சைவசமய இலக்கியங்களாகப் பன்னிரு திருமுறைகள் அமைகின்றன. மறைந்து கிடந்த தேவாரப் பாடல்கள் ஏழு திருமுறைகளாக வகுக்கப்பட்டு கோவில்களில் ஓதப்பட்டன. இதைக் கண்காணிக்க தேவார நாயகம் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். கோவில்களில் நாள்தோறும் விளக்கேற்றவும், தேவாரம் பாடவும், திருவிழாக்கள் நிகழ்த்தவும் மன்னர்களும் பொதுமக்களும் மானியம் வழங்கினர். சைவ வைணவ கோவில்களுக்கு வழங்கப்பட்ட நிலமானியங்கள் தேவதானம் எனப் பெயர் பெற்றன.தமிழ் வைணவர்களின் புனித நூலான நாலாயிர திவ்ய பிரபந்தம் என்ற தொகுப்பு சோழர் காலத்தில்தான் உருப்பெற்றது.பாண்டியர் காலம் (கி. பி. 13ம் நூற்றாண்டு)சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் உருவான பாண்டியப் பேரரசு சோழப் பேரரசைப் போன்றே மண்டலம், நாடு, கூற்றம் ஆகிய ஆட்சிப் பிரிவுகளைக் கொண்டிருந்தது. பல்லவர் காலத்தைப் போன்றே சோழர் காலமும் வேளாண்மையை மையமாகக் கொண்ட பெருமளவிலான கிராமங்களை அடிப்படை அலகாகக் கொண்டிருந்தது. வேளாண்மை முக்கியத் தொழிலாக இருந்தது. நெசவு, எண்ணெய் எடுத்தல், வெல்லம் தயாரித்தல், உப்பு விளைவித்தல் கிய தொழில்கள் நிகழ்ந்தன. பாண்டியர் ஆட்சியில் சிறப்புமிக்க தொழிலாக முத்து குளித்தல் விளங்கியது. உரோம் நாட்டிற்கு இம்முத்துக்கள் ஏற்றுமதியாகி தங்கத்தைக் கொண்டு வந்தன. மார்கோபோலோ என்ற இத்தாலி நாட்டு சுற்றுப் பயணி மாரவர்மன் குலசேகரன் என்ற பாண்டிய மன்னன் 1200 கோடி பொன்னைச் சேமித்து வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கொலைத் தண்டனை பெற்ற கைதிகள் முத்து குளித்தலில் ஈடுபடுத்தப்பட்டனர். வாணிபத்தின் பொருட்டு இங்கு வந்த அரேபியர்கள் இங்கே தங்கள் சமயத்தை பரப்பினர். பாண்டிய மன்னனின் அரசவையில் இஸ்லாமியர் சமயத்தைச் சார்ந்த அமைச்சர் ஒருவர் இடம் பெற்றிருந்தார். பாண்டியர்களின் கொற்கை துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பெருமளவில் நிகழ்ந்தது. மணிக்கிராமம், அஞ்சு வண்ணத்தார் என்ற வணிகச் சங்கங்களும் நானாதேசிகன் என்ற பெயரில் அயல்நாட்டு வாணிபம் மேற்கொண்ட குழுவும் இருந்தன. அரேபிய நாட்டிலிருந்து குதிரைகள் இறக்குமதி பெருமளவில் நிகழ்ந்தது. இது குறித்து வசப் என்ற அரேபியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்."அந்தக் குதிரைகள் வந்து இறங்கியதும், அவற்றிற்குப் பச்சை வாற்கோதுமையைத் தருவதற்கு மாறாக, வறுத்த வாற்கோதுமையையும் வெண்ணெய் சேர்த்துச் சமைத்த தானியத்தையும் தீனியாகப் போட்டுக் காய்ச்சிய ஆவின் பாலைக் குடிப்பதற்குக் கொடுக்கிறார்கள். இது மிகவும் விசித்திரமான செயல். லாயத்தில் முளைகளை அடித்து, குதிரைகளை அவற்றோடு கயிற்றால் பிணைத்து, அங்கேயே அவற்றை 40 நாள் விட்டு விடுகிறார்கள். அதனால் குதிரைகள் கொழுத்துப் பருத்துப் போகின்றன. பின்னர், அவற்றிற்குப் பயிற்சியளிக்காமலும் அங்கவடி முதலிய குதிரைச் சாமான்களைப் பூட்டாமலும், அவற்றின் மீது ஏறியுட்கார்ந்து இந்திய வீரர்கள் அவற்றைப் பிசாசைப் போல் ஓட்டுகிறார்கள். அவற்றின் வேகம் புரக்கின் வேகத்திற்குச் சமமாயிருக்கிறது. மிகுந்த வலிமையும் வேகமும் சுறுசுறுப்பும் உடைய புதிய குதிரைகளும் வெகு விரைவில் வலிமையற்ற, வேகமற்ற, பயனற்ற, மதியற்ற குதிரைகளாய் மாறிவிடுகின்றன. அதாவது, அவை எதற்கும் உதவாத இழி நிலையை எய்தி விடுகின்றன. சாட்டையடி வாங்காமலே மிக வேகமாக ஓடக்கூடிய வலிமைமிக்க அந்தக் குதிரைகள் இந்நாட்டுத் தட்பவெப்ப நிலையைத் தாங்க மாட்டாமல் வலியிழந்து வாடிப் போகின்றன. எனவே, அவை சவாரி செய்வதற்குப் பயனில்லாமல் போகின்றன. அதனால் ஆண்டு தோறும் புதிய குதிரைகளை வாங்குவது இன்றியமையாததாகி விடுகின்றது. எனவே ஆண்டுதோறும் முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் மா.பாருக்குக் குதிரைகளைக் கொண்டு வருகிறார்கள் (நீலகண்ட சாஸ்திரி, தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள் 276). குதிரைக்கு லாடம் கட்டுபவர்களும் இங்கே இல்லை. குதிரை வணிகர்கள் இலாடக்காரர்களை அழைத்துக் கொண்டு வருவதில்லை. லாடக்காரர் யாதேனும் வர முயன்றாலும் அவர்களை வணிகர்கள் தடுத்து விடுகிறார்கள். அப்படிச் செய்யாவிட்டால் குதிரை வாணிகம் குறைந்து போகுமென்று அவர்கள் அஞ்சினார்கள். அந்த வாணிகத்தில் அவர்களுக்கு ஆண்டுதோறும் பெரும் பொருள் கிடைத்தது. அந்த லாபத்தை இழப்பதற்கு அவர்கள் விரும்பவில்லை. குதிரைகளை அவர்கள் கப்பலில் ஏற்றிக் கொண்டு வந்தார்கள்.என்று மார்கோபோலாவும் குறிப்பிட்டுள்ளார் (நீலகண்ட சாஸ்திரி, தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள் 273 274).விஜயநகரப் பேரரசு (கி.பி. 14 16)பாண்டியர் ஆட்சியின் இறுதிக் காலத்தில் அடுத்தடுத்து வடஇந்திய இஸ்லாமியர்களின் படையெடுப்புக்கு ஆளானது. கி.பி. 1311இல் மாலிகாபூரும், 1318இல் குஷ்ருகானும், 1323இல் முகமது பின் துக்ளக்கும் படையெடுத்தனர். துக்ளக் பரம்பரையினரின் ஆட்சி டெல்லியில் நிலவியபோது அதன் 23வது மாநிலமாக தமிழகம் (தென்னிந்தியா) ஆனது. 1378 வரை இந்நிலை நீடித்தது. கி.பி. 1378இல் விஜயநகரப் பேரரசை நிறுவிய இரு சகோதரர்களில் ஒருவராகிய புக்கன் என்பவனின் மகன் குமாரகம்பனன் என்பவன் மதுரையின் மீது படையெடுத்து விஜயநகரப் பேரரசின் ஆட்சியை நிறுவினான். இதன்பின் தமிழகம் விஜயநகரப் பேரரசின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டில் மறைந்து போன சோழப் பேரரசின் ஆட்சிமுறையே பெரும்பாலும் பாண்டியர் ஆட்சியில் தொடர்ந்தது. ஆனால் விஜயநகரப் பேரரசு புதிய ஆட்சியமைப்பையும், நிறுவனங்களையும் தோற்றுவித்தது. மதுரை, தஞ்சை, செஞ்சி, வேலூர் என நான்கு மண்டலங்கள் உருவாயின. இவற்றை நிறுவகிக்க மண்டலாபதி என்ற அதிகாரி நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நிலவிய கிராம ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டது. சாதி வேற்றுமையும், தீண்டாமையும் இறுக்கமாயின. அடிமைமுறை பரவலாகியது. சைவமும், வைணவமும் செல்வாக்குப் பெற்றன. அதே நேரத்தில் சைவர்களுக்கும், வைணவர்களுக்குமிடையே சமயப் பூசல்கள் உருவாயின.நில அளவுகோலை மாற்றி நிலத்தை அளந்ததன் விளைவாக நிலத்தின் பரப்பு அதிகரித்து வரியளவு உயர்ந்தது. நிலக்குத்தகைத் தொகையை உயர்த்தின ர். விஜயநகர ஆட்சிக் காலத்தில் வரிப்பளு அதிகரித்தது. பரம்பரை நிலக்கிழார்களான பிராமணர்களும், வெள்ளாளர்களும் விஜயநகரப் பேரரசின் அதிகாரிகளும் உழுகுடிகளைக் கொண்டு நிலங்களைப் பயிரிட்டனர். ஆனால் உழுகுடிகளுக்கும், கைவினைஆர்களுக்கும் உரிய பங்கைக் கொடுக்கத் தவறினர். இதன் காரணமாக மக்கள் வலங்கை. இடங்கை என்ற பிரிவுகளைக் கடந்து நின்று காணியாளர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் எதிராக கிளர்ந்து எழுந்தனர். தஞ்சை மாவட்டத்தில் கொருக்கை என்ற ஊரில் கிடைத்துள்ள கி.பி. 1429ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில் நாம் மண்டலம் சேர இனம் ஒத்து இராதபடி ஆலே அல்லோ இப்படி நம்மை அநியாயம் செய்கிறார்கள் என்று இடம் பெற்றுள்ள செய்தி மக்கள் ஒன்றுபட்டுப் போராடியதைக் குறிப்பிடுகின்றது.நாயக்கர் காலம்கி.பி. 1529இல் தொடங்கி 1736 வரை மதுரை நாயக்கர் ஆட்சி நிலவியது. நாயக்கர் ஆட்சியில் பாளையப்பட்டுமுறை என்ற ஆட்சி முறை கி.பி. 1535இல் உருவானது. இதன்படி 72 பாளையங்கள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு பாளையமும் பாளையக்காரன் ஒருவனால் நிறுவகிக்கப்பட்டது. ஏற்கனவே குறுநல மன்னர்களாக இருந்த தமிழர்கள் மட்டுமின்றி கன்னட, தெலுங்கர் பாளையக்காரர்களாக நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு பாளையங்காரரும் தன் ஆளுகைக்குட்பட்ட பாளையங்களில் வரிவசூல் செய்யவும் வழக்குகளை விசாரித்து நீதி வழங்கவும் உரிமையுடையவர்களாயிருந்தனர். நாயக்கர் மன்னர்கள் நிகழ்த்தும் படையெடுப்பின் போது தங்கள் சொந்தப் படையை பாளையக்காரர் அனுப்புவது கட்டாயமாக இருந்தது. பாளையத்திலிருந்து கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பங்கு நாயக்க மன்னருக்கும், மற்றொரு பங்கு பாளையக்காரரின் படைவீரர்களின் செலவுக்கும் எஞ்சிய ஒரு பகுதி பாளையக்காரரையும் சென்றடைந்தது.நாட்டின் மைய ஆட்சி அதிகாரம் நாயக்க மன்னர்களிடம் இருந்தது. அரசனை அடுத்திருந்த உயர் அதிகாரி தளவாய் என்றழைக்கப்பட்டார். இவரை அடுத்திருந்தவர் பிரதானி, இவர் நீதி வழங்கும் பணியையும் மேற்கொண்டிருந்தார். இவரை அடுத்த பதவி ராயசம் என்பதாகும். இம்மூன்று பதவிகளும் முக்கியமான பதவிகளாக இருந்தன.நிலவரியே அரசின் முக்கிய வருவாயாக இருந்தது. நிலங்கள் தரவாரியாகப் பிரிக்கப்பட்டு வரி விதிக்கப்பட்டது. வீடு, குடியிருப்பு மனை, தோட்டம், கால்நடைகள் ஆகியனவற்றிற்கு சொத்துவரி விதிக்கப்பட்டது. கருமார் (கொல்லர்), தச்சர், குயவர், நெசவாளர் போன்ற கைவினைஆர்களிடமிருந்து தொழில்வரி வாங்கப்பட்டது. பரத்தையரும் தொழில்வரி செலுத்தியுள்ளார்கள். படைவீரர் பராமரிப்பிற்கென்று அவ்வப்போது வரிவாங்கப்பட்டது. நன்செய் நிலவரி நெல்லாயம் என்ற பெயரில் நெல்லாகவே வாங்கப்பட்டது. புன்செய் நில வரிகளும் ஏனைய வரிகளும் பொன்னாக வாங்கப்பட்டது.நாயக்க மன்னர்கள் வைணவர்கள், என்றாலும் பிற சமயங்களை மதித்தனர். சைவ, வைணவ வேறுபாடின்றி கோவில்களுக்குத் திருப்பணி செய்தனர். இவர்கள் ஆட்சியில்தான் கத்தோலிக்க கிறித்துவம் தமிழ்நாட்டில் கால் கொண்டது. தத்துவ போதகர் என்றழைக்கப்படும் ராபர்டிநொபிலி என்பவர் தம் சமயத்தை பரப்ப வேறுபாடான ஒரு முறையை மேற்கொண்டார்.சோழர் காலத்தைப் போன்றே நாயக்கர் காலத்திலும் வடமொழிக் கல்வியே முக்கியத்துவம் பெற்றது. வெற்றி வேற்கை என்னும் நறுந்தொகை, நைடதம், என்ற இலக்கியங்கள் அதிவீரராம பாண்டியன் என்பவரால் எழுதப்பட்டன. வரதுங்கராம பாண்டியன் திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி திருக்கருவைக் கலித்துறை அந்தாதி என்ற நூல்களையும், மாரனலங்காரம் என்ற நூலை திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரும், சுப்பிரதீபக் கவிராயர் கூளப்பநாயக்கன் காதல், கூளப்பநாயக்கன் விறலிவிடுதூது என்றும் நூல்களையும் இயற்றியுள்ளனர். 1. அழகர் அந்தாதி, 2. திருவரங்கக் கலம்பகம், 3. திருவரங்கத்தந்தாதி, 4. திருவரங்கத்துமாலை, 5. திருவரங்கத்து ஊசல், 6. திருவேங்கடத்தந்தாதி, 7. திருவேங்கடமாலை, 8. நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி என்ற எட்டு நூல்களும் அஷ்டப் பிரபந்தம் எனத் தலைவர்களால் போற்றப்படுகின்றன. இவற்றை எழுதிய பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் திருமலைநாயக்கர் காலத்தவர். மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் எழுதிய குமரகுருபரர், சீறாப்புராணம் பாடிய உமருப் புலவர், குற்றாலக் குறவஞ்சி பாடிய திருகூடராசப்பக் கவிராயர் ஆகியோர் நாயக்கர் காலத்தில் வாழ்ந்த குறிப்பிடத்தக்க கவிஆர்களாவர்.ஐரோப்பியர் காலம் (1533 1947)கி.பி. 1533இல் முத்துக்குழித்துறை கடற்கரைப் பகுதியில் உள்ள தூத்துக்குடி நகரில் வாணிபத்திற்காக வந்து தங்கியிருந்த அரேபிய மூர்களுக்கும் நெய்தல் நிலத் தொல்குடியினரான பரதவர்களுக்குமிடையே மோதல் நிகழ்ந்தது. இம்மோதலில் பரதவர்கள் மிகக் கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்டார்கள். இதிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் வழிமுறையாக கொச்சி நகரிலிருந்த போர்ச்சுக்கீசியரின் உதவியைப் பரதவர்கள் நாடினர். பரதவர்களுக்குத் தங்கள் கடற்படை துணையுடன் உதவ முன் வந்த போர்ச்சுக்கீசியர்கள் தங்கள் உதவிக்குக் கைமாறாக கத்தோலிக்கர்களாக மதம் மாறும்படி அவர்களை வேண்டினர். அதற்கு உடன்பட்ட பரதவர்கள் மதம் மாறியதுடன் போர்ச்சுக்கீசிய மன்னனின் குடிகளாகவும் தங்களை மாற்றிக் கொண்டனர். இதன் விளைவாக வடக்கே வேதாளை தொடங்கி தெற்கே கன்னியாகுமரி வரையிலான கடற்கரைச் சிற்×ர்கள் போர்ச்சுக்கீசியரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன.வெகு திரளான மதமாற்றம் சில புதிய வரவுகளை தமிழ்மொழிக்கு வழங்கியது. அண்டிரீக் என்ற போர்ச்சுக்கீசிய சேசுசபைத் துறவி பரதவர்களின் நிதி உதவி பெற்று கி.பி. 1567இல் தம்பிரான் வணக்கம் என்ற நூலையும், 1568இல் கிறிஸ்டியாவின் வணக்கம் என்ற நூலையும் முறையே அம்பலக்காட்டிலும் கொல்லத்திலும் அச்சிட்டு வெளியிட்டார். இந்திய மொழிகளிலேயே முதன்முதலாக அச்சு வடிவம் பெற்ற மொழி என்ற பெருமையை இந்நூல்களின் வாயிலாகத் தமிழ்மொழி பெற்றது. தூத்துக்குடி அருகில் உள்ள புன்னக்காயல் என்ற கடற்கரைச் சிற்×ரில் அடியார் வரலாறு என்ற நூலை 1586இல் இவர் அச்சிட்டு வெளியிட்டார். போர்ச்சுக்கீசிய மொழியில் தமிழ் இலக்கண நூல் ஒன்றையும் இவர் வெளியிட்டுள்ளார். தற்கால மருத்துவமனை ஒன்றையும் புன்னக்காயலில் இவர் நிறுவினார்.கி.பி. 1658இல் டச்சுக்காரர்கள் போர்ச்சுக்கீசியர்களிடமிருந்து தூத்துக்குடி நகரைக் கைப்பற்றினர். தூத்துக்குடி நகரில் நெசவாளர்களைக் குடியமர்த்தி அவர்கள் நெய்த கச்சைத் துணிகளை இலங்கைக்கு ஏற்றுமதி செய்தனர். ப்ராட்டஸ்டண்ட் பிரிவைச் சார்ந்த டச்சுக்காரர்கள் தங்கள் சமயத்தை இங்கு பரப்ப முயற்சி செய்தனர். ஆனால் இம்முயற்சியில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. "ஐரோப்பாவில் நிகழ்ந்த யுத்தங்கள் இந்தியாவில் டச்சுக்காரர்களின் தலைவிதியை நிர்ணயம் செய்தன என்ற கூற்றிற்கு ஏற்ப இங்கிலாந்திடம் ஐரோப்பிய யுத்தம் ஒன்றில் தோற்றுப் போன டச்சுக்காரர்கள் ஒப்பந்தம் ஒன்றின் மூலம் தூத்துக்குடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களின் உரிமையை ஆ ங்கிலேயரிடம் தந்தனர்.மைசூரை ஆண்டு வந்த நிஜாமின் கட்டுப்பாட்டின் கீழிருந்த ஆர்காடு நவாப் அதிலிருந்து விடுபெற்று சுயேச்சை மன்னனாக செயல்படத் தொடங்கினார். முதல் இரண்டு கருநாடகப் போர்களின் வாயிலாகத் தமிழ்நாட்டில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியார் மைசூர் போர்களின் வாயிலாக தென்னிந்தியாவில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். மதுரை நாயக்கர் உருவாக்கிய பாளையக்காரர்கள் சுயேச்சை மன்னர்கள் போல் செயல்படத் தொடங்கினர். இத்தகைய சூழலில் பாளையக்காரரிடம் வரி வாங்கும் உரிமையை கி.பி. 1781இல் நவாப்பிடமிருந்து கிழக்கிந்திய கம்பெனி வாங்கியது. இதன் அடிப்படையில் அவர்கள் வரி வாங்கும்போது, பூலித்தேவர், கட்டபொம்மன், ஊமைத்துரை, மருதுபாண்டியர், தீர்த்தகிரி (தீரன் சின்னமலை) ஆகியோர் வரிதர மறுத்துப் போராடி ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டனர். அந்நிய ஆட்சிக்கு எதிராகத் தெளிவான கொள்கைகளை முன்வைத்துப் போராடவிட்டாலும் இவர்களுடைய உறுதியான வீர உணர்வும், வெள்ளையர் எதிர்ப்புணர்வும் பாராட்டுதலுக்குரியன. 1806இல் வேலூரில் சிறை வைக்கப்பட்டிருந்த திப்புசுல்தானின் மகன்களின் ஆதரவுடன் நிகழ்ந்த வேலூர்க் கலகம் (வேலூர் எழுச்சி) வெள்ளையர் எதிர்ப்புப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்நிகழ்வுகளுக்குப் பின்னர் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிர்ப்பில்லாமல் போய்விட்டது.சென்னை மாகாணம் என்ற பெயரில் இன்றையக் கன்னியாகுமரி மாவட்டம், நெல்லை மாவட்டத்திலுள்ள செங்கோட்டைத் தாலுகா, புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் நீங்கலாக ஏனைய பகுதிகள் முழுவதிலும் கிழக்கிந்திய கம்பெனியின் நேரடி ஆட்சி நிலவியது. கன்னியாகுமரி மாவட்டம் செங்கோட்டைத் தாலுகா ஆகியன திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிப் பகுதியாகவும் புதுக்கோட்டை மன்னரின் ஆளுகையின் கீழ் புதுக்கோட்டைப் பகுதியும் விளங்கின. மேலும் இன்றையக் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் பகுதிகள் சிலவும் சென்னை மாகாணத்துடன் இணைந்திருந்தன.சென்னை மாகாணத்தின் தலைநகராகச் சென்னை விளங்கியது. ஆட்சித் தலைவராகக் கவர்னர் இருந்தார். சென்னை மாகாணம் 25 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு மாவட்டத்தின் தலைவராகக் கலெக்டர் நியமிக்கப்பட்டார். ஒவ்வொரு மாவட்டமும் பல தாலுகாக்களையும் தாலுகாக்கள் பிர்காக்கள் என்ற பிரிவுகளையும் கொண்டிருந்தன. தாலுகாவின் தலைவராக தாசில்தார் நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில் மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட குற்ற விசாரணை பொறுப்பு பின்னர் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.பண்டைத் தமிழ்நாட்டைப் போன்று கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியிலும் அரசின் முக்கிய வருவாயாக நிலவரியே இருந்தது. தனி நிலவுடைமை அனுமதிக்கப்பட்டு அவ்வுடையாளர்களிடமிருந்து நேரடியாக வரி வாங்கப்பட்டது. இதை இரயத்துவாரி முறை என்றழைத்தனர். பாளையக்காரர்கள் என்ற பெயர் மாறி ஜமீன்தார்கள் என்ற பெயர் உருவானது. ஜமீன்தார்களும், ஜாகீர்தர்கள், மிட்டாதாரர்களும் குறிப்பிட்ட நிலப்பகுதிகளுக்கு உரிமை பெற்று, பயிரிடுவோரிடமிருந்து வரி வாங்கினர். ஒரு பகுதி வரியை எடுத்துக் கொண்டு எஞ்சியதைக் கிழக்கிந்திய கம்பெனியாரிடம் வழங்கினர்.ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டல் தமிழகத்தை வெகுவாகப் பாதித்தது. உணவு தானியங்கள் உற்பத்திக்கு மாற்றாகப் பணப் பயிர்களைப் பரந்த அளவில் பயிரிடச் செய்தனர். குறிப்பாக இங்கிலாந்தின் நெசவாலைகளுக்கு அடிப்படைத் தேவையான பருத்தியையும், நூல்களுக்குச் சாயமேற்ற உதவும் அவுரியையும் அதிக அளவில் பயிரிடச் செய்தனர். அதே நேரத்தில் அவற்றிற்கு அவர்களே விலை நிர்ணயம் செய்தனர். தமிழ்நாட்டு உழவன், தான் உற்பத்தி செய்த பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையை இழந்தான். இதை,ஊரான் ஊரான் தோட்டத்திலேஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்காகாசுக்கு ரெண்டா விக்கச் சொல்லிகாயிதம் போட்டானாம் வெள்ளக்காரேன்என்ற நாட்டார் பாடல் எடுத்துரைக்கிறது.1857 சிப்பாய் எழுச்சிக்குப் பின்னர் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்குப் பதிலாக இங்கிலாந்து பாராளுமன்றத்தின் நேரடி ளுகையின் கீழ் தமிழ்நாடு வந்தது. 1859இல் இந்திய சிவில் சட்டமும், 1860இல் இந்தியக் குற்றச் சட்டமும் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தன. 1861இல் உயர்நீதி மன்றம் சென்னையில் நிறுவப்பட்டது.பாரம்பரிய கிராம சபைகளுக்கு மாற்றாக தாலுகா போர்டு ஜில்லா (மாவட்டம்) போர்டு, பஞ்சாயத்து ஆகிய நிறுவனங்கள் உருப்பெற்றன. பாரம்பரிய பள்ளிகளுக்கு மாற்றாக நவீனக் கல்விக் கூடங்கள் அரசினராலும், கிறித்தவ மிஷனரிகளாலும், தனிப்பட்டவர்களாலும், சாதியமைப்புகளாலும் நிறுவப் பெற்றன. இக்கல்வி நிறுவனங்களுக்கு அரசு மானியமும் கிட்டியது. சாதிய எல்லைகளைத் தாண்டி அனைவரும் கல்வி கற்கும் வாய்ப்பு இப்போதுதான் முதன் முதலாக உருப்பெற்றது. பெண் கல்விக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. மரபுகளை மீறிப் பெண்கள் கல்வி பெறும் நிலை உருவாகத் தொடங்கியது. மாநிலக் கல்லூரி ஒன்றும், 1834இல் பொறியியல் கல்லூரி ஒன்றும், 1835இல் மருத்துவக் கல்லூரி ஒன்றும் சென்னையில் தொடங்கப்பட்டது. 1857ம் ண்டில் சென்னைப் பல்கலைக்கழகம் நிறுவப் பெற்றது. இந்நவீனக் கல்வியானது படித்த மக்கள் கூட்டத்தை உருவாக்கியது. இதன் விளைவாகப் பத்திரிகைகள் சில உருப்பெற்றன. மதராஸ் கெஜட், கூரியர் என்ற பத்திரிகைகள் வெளியிடப்பட்டன. 1878 செப்டம்பரில் இந்து என்ற ஆங்கில நாளேடும் 1878 டிசம்பரில் மதராஸ் மெயில் என்ற ஆங்கில நாளேடும் வெளி வந்தன. 1880இல் சுதேசமித்திரன் என்ற தமிழ் நாளேடு வெளியானது. செய்யுள் வடிவங்களின் வாயிலாகவே பொதுமக்களிடம் கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்து வந்த முறை மாறி உரைநடை செல்வாக்குப் பெற்று வளரத் தொடங்கியது. அச்சு இயந்திரத்தின் வருகையின் காரணமாகப் பழைய தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள் அச்சு வடிவம் பெறத் தொடங்கின. சிறுகதை, நாவல் என்ற புதிய இலக்கிய வடிவங்கள் தமிழில் உருவாயின.தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்கள் பலரும் வேளாண்மையின் அடிப்படை தாரமான நீர்வளத்தைப் பெருக்குவதிலும், பேணுவதிலும் ஆர்வம் காட்டினர். ஆனால் ஆங்கிலேயர்கள் முழுமையாக ஆர்வம் காட்டவில்லை. மேலும் உணவு தானியங்களை வரைமுறையின்றி ஏற்றுமதி செய்தனர். இதன் விளைவாக 1876 1878 ஆண்டுகளில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. தாது வருஷப் பஞ்சம் என்று மக்கள் இதை அழைத்தனர். பஞ்சமோ பஞ்சம் என்று பரிதவித்து மக்கள் பல்லாயிரக் கணக்கில் மாண்டனர்.காட்டுப் பக்கம் நூறு பிணம் ஓ சாமியேவீட்டுப் பக்கம் நூறு பிணம் ஓ சாமியேரோட்டுப் பக்கம் நூறு பிணம் ஓ சாமியேமேட்டுப் பக்கம் நூறு பிணம் ஓ சாமியேஎன்று நாட்டார் பாடல் ஒன்று எடுத்துரைக்கிறது. இப்பஞ்சத்தையும் ஆங்கிலேயர்கள் தங்கள் சுரண்டலுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். பஞ்சத்தில் வாடிய மக்களுக்கு குறைந்த அளவு கூலி கொடடுத்து இரயில் பாதைகளும், கால்வாய்களும் அமைத்தனர். சென்னையில் ஓடும் பக்கிங்காம் கால்வாயின் ஒரு பகுதி இந்த முறையில்தான் வெட்டப்பட்டது. பஞ்சத்தின் துணை விளைவாக ஆங்கிலேயர்களின் இதர குடியேற்ற நாடுகளான இலங்கை, பர்மா (மியாமர்), மலேசியா, பிஜி தீவு, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கும் ஒப்பந்தக் கூலிகளாகச் சென்று தேயிலை, காப்பி, இரப்பர் தோட்டங்களை உருவாக்கினர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த வளமான பொருள் கிட்டவில்லை. கூலித் தமிழன் என்ற பெயர்தான் கிட்டியது.19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் தமிழ்நாட்டில் நிலை பெற்றது. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வ.உ.சி. பாரதி, சிவா ஆ கியோரின் தலைமையில் சுதேசிய இயக்கம் வீறு கொண்டு எழுந்தது. 1920இல் நிகழ்ந்த ஒத்துழையாமை இயக்கமும், 1930இல் உருவான சிவில் சட்ட மறுப்பு இயக்கமும், 1942இல் நிகழ்ந்த வெள்ளையனே வெளியேறு போராட்டமும், தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க அளவில் நிகழ்ந்தன. வள்ளலார் உருவாக்கிய சமரச சுத்த சன்மார்க்க இயக்கம், வைகுண்ட சாமியின் அய்யாவழி இயக்கம், தென்னிந்திய நலவுரிமைச் சங்கமாக உருவாகி நீதிக் கட்சியாக மாறி சுயமரியாதை இயக்கமாக வளர்ந்த திராவிட இயக்கம், பொதுவுடைமைக் கட்சியினர் உருவாக்கி வளர்த்த உழவர், தொழிலாளர் இயக்கங்கள் ஆகியன தமிழ்நாட்டின் இயக்கங்கள் என்ற தலைப்பில் தனியாக ஆராய்வதற்குரியன.
jaalavan@gmail.com