Sunday 31 August 2008

24.கோவில் திருவிழாக்களும் - புலம்பெயர் தமிழர்களும்.


படம்-தமிழ்நாதம்.கொம்

புலம் பெயர் நாடுகளில் தமிழ் மக்கள் கோவில்களுக்கு அதிக முக்கியம் கொடுக்கிறார்கள்.இது ஒரு வகையில் நன்மை உண்டு அதாவது புலம்பெயர் தமிழ் இளையவர்களுக்கு எமது கலை கலாச்சாரங்களை ஊட்டுவதர்க்கு ஆலயங்கள் சிறப்பாக திகழ முடியும்.ஆனால் இன்று எத்தனை ஆலயங்கள் இவ்வாறு செயற்படுகின்றன என்பதனை விரல் விட்டுஎண்ண முடியும். அந்தளவிற்கு ஆலயங்கள் தவறான முறைகளில் மக்களை அவர்களுடைய சிந்தனையில் இருந்து தடம்புரள வைக்கும் வகையில் செயற்பாடுகளில் செயற்படுத்தப்படுகின்றன என்பது ஒரு கசப்பான உண்மையாகும். கடவுள் நம்பிக்கை எனும் பெயரில் மக்கள் மத்தியில் உள்;ள பல ழூட நம்பிக்கைகளை களையாது தொடர்ந்தும் மக்களை அவ் மாயையில் வைத்திருந்து பணம் சம்பாதிக்கும் ஒரு வியாபார நிறுவனமாகவே புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் உள்ள பல ஆலயங்கள் செயறபடுகின்றன.இதனை புரிந்துகொள்ளாது பல மக்கள் தமது பணத்தினையும் நேரத்தினையும் வீணடிக்கிறார்கள் என்பதே வேதனைக்குரிய விடையமாகும்.

இத்தனைக்கும் மேலாக புலம்பெயர் நாடுகள் பலவற்றில் உள்ள தமிழ்மக்களின் பல ஆலயங்கள் அரசியலுடன் நேரடியான தொடர்புகளை பேணுகின்றன. இங்குள்ள சில கோயில்கள் சிறீலங்கா தூதுவராலயங்கள் மற்றும் ஒட்டுக் குழுக்களினாலும் நடாத்தப்படுகின்ற.இவற்றை தெரிந்தும் கூட எம் மக்கள் பல ழூடநம்பிக்கைகளில் தொடர்ந்தும் அவ் ஆலயங்களுக்கு செல்கிறனர். இன்றும் சில கோவில்கள் பொது நோக்கங்களுக்காக ஒழுங்கான நிர்வகங்களுடன் இயங்குகின்றன. எனவே அவ் ஆலயங்களுக்கு செல்ல முடியும் எல்லா இடமும் இறைவன் ஒன்றுதான். நமது மனங்கள்தான் வேறுபடுகிறன. பிள்ளையார் எந்தக் கோவிலில் இருந்தாலும் அவர் பிள்ளையார்தான். நான் கோயில்களை இடிக்கவேண்டுமோ அல்லது வழிபடக்கூடாது என்று சொல்லவில்லை எம்மிடம் உள்ள பல ழூடநம்பிக்கைகளை களை எடுக்க வேண்டும். நாம் என்ன செய்கிறோம் என்னத்தை செய்கிறோம் என்ற எண்ணம் எமக்கு சுயமாக தெரிய வேண்டும் எவனாவது சென்னவுடன் செய்ய வேண்டிய தேவை இல்லை.

இன்று (31-08-08) பரிஸ் நகரின் லாச்சப்பலில் உள்ள பிள்ளையார் கோவில் தேர்த் திருவிழா. இன்று லாச்சப்பல் வீதி முழுமையாக தேங்காயால் ழூடப்ட்டிருக்கும் ஆயிரக்கணக்கான தேங்காய்கள, உணவுகள் என்பன வீணாக போகும் இது ஒரு சிறிய உதாரணமே. இதை விட ஆயிரக்கணக்கான யூரோ நாணயங்கள் மக்களிடம் இருந்து ஆலய நடத்துநர்களுக்கு கைமாறும் நிகழ்வுமாகும். இதைவிட இன்னெரு சிறப்பம்சம் எம் இளையோர்கள் சிலர் கத்தி, வாள், மற்றும் போத்தல் சகிதம் வேடுவக் வேடம் போட்டு காடுகளில் செய்ய வேண்டிய செயல்களை வீதிகளில் செய்வதனால் சில இடங்களில் இரத்தங்கள் பாயும். இவர்களை இயக்குவதில் சிறீலங்கா தூதரகம் பெரும் பங்காற்றுகிறது.

ஒரு கடைக்காறர் இருநூறு தேங்காய் உடைத்தால் அடுத்த கடைக்காறர் முன்நூறு தேங்காய்.எதற்காக இவை எல்லாம்? வன்னியில் எம் உறவுகளின் கதறல்களுக்கு மத்தியில் இவைகள் முக்கியமா என சிறிது சிந்திப்போம்.. கோயில்களுக்கு போகத்தான் வேண்டும் எனில் ஒரு தேங்காய் போதும் ஆயிரம் தேங்காய் தேவை இல்லை மிகுதி பணத்தினை உண்ண உணவின்றி வாழும் உறவுகளுக்கு கொடுங்கள்.

உண்மையிலேயே தமிழர்கள் வாழ்வியலில் கோயில்கள் கோயில் திருவிழாக்கள் என்றால் மிக முக்கிய இடம் வழங்கப்படுவதுண்டு. தாயகத்தில் ஒரு கோவில் திருவிழா என்றால் அந்த ஊர் விழாக் கோலம் பூண்டிருக்கும். ஆகவே கோவில்கள் திருவிழாக்கள் என்பன தமிழ்மக்களால் மிகவும் விரும்பப்படுகின்றன. அவற்றை செய்வதிலும் தப்பில்லை.ஆனால் தற்போது தாயகத்தில் எம் உறவுகள் சிங்கள வெறியரின் வெறியாட்டத்தால் உணவுக்காக ஒரு துண்டு கூரைக்காக மழை வெயில் என்று சொல்ல முடியாத துன்பத்தில் துடித்துக் கொண்டிருக்கையில் களங்களிலும் நம் உறவுகள் உயிரைக் கொடுத்து மண் காத்துகொண்டிருகையில் நாம் இங்கு கோயில் குளம் என்ற ஆடம்பரமான கொண்டாட்டங்கள் தேவையா? இரத்த உறவுகள் உயிர் வாழத் துடித்துகொண்டிருக்கையில் நாம் இங்கு பட்டு வேட்டியும் காஞ்சிபுரச் சாறியும் உடுத்து தங்க நகைகளுடனும் இறைதரிசனம்(?) செய்து சாகாவரம் பெறப்போகிறோமா??

இங்கு ஒரு கோவில் திருவிழாவுக்கு செல்லும் மக்கள் தொகை பொங்கு தமிழ் போன்ற தேசியத்திற்கு வலுச்சேர்கும் பெரியளவிலான நிகழ்வுகளுக்குகூட வருவதில்லை.ஆனால் தமிழீழம் வேண்டுமாம்(?) சுதந்திரம் கடையில் வாங்கும் பொருளா?? ஒருத்தன் சொல்லியிருக்கிறான் தமிழன் என்றல் சொறியும் போது சொறிந்துவிட்டு பின்பு தூங்கிவிடுவானாம். இந்த நிலை மாற வேண்டும். நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் சிந்தித்து செயற்படவேண்டும். சிலர் சொல்வார்கள் விடுதலைப்புலிகள் சண்டை ஆரம்பித்தால் ஆதரவாம் இல்லாட்டில் இல்லையாம். என்னையா புலிகள் இயந்திரமா? ஓவ்வொரு போராளியும் எங்களைப் போன்ற ஒரு உயிர் என்பதை மறந்துவிடக்கூடாது. எனவே அவற்றை எல்லாம்; மற்றும் எங்களுடைய பலம் பலவீனம் எதிரியின் பலம் பலவீனம் என்பவற்றையும் கருத்தில் கொண்டுதான் தலைவர் அவர்கள் திட்டங்களை வகுப்பார்.உதாரணமாக சில நாட்களுக்கு முன்பு தமிழீழத் தலைநகர் திருமலையில் நடந்த தாக்குதலை குறிப்பிடலாம்.

எனவே நாம் சிறிது காலத்திற்கு எமது தேசத்தற்காகவும் தேசமக்களுக்காகவும் தலைவர் போராளிகளுக்காகவும் உழைத்துவிட்டு தமிழீழம் அமைந்த பின்பு நாம் அனைவரும் தாயகத்திற்கு சென்று தாயக உறவுகளுடன் இணைந்து தமிழீழத்தின் பிரசித்தி பெற்ற நல்லூர், திருக்கோணேஸ்வரர், வல்லிபுரக் கோவில், வற்றாப்பளை கண்ணகை அம்மன், திருக்கேதீஸ்வரர், போன்ற அனைத்து தலங்களுக்கும் சென்று வடம் பிடித்து தேர் இழுப்போம்.

தாய் பிச்சை எடுக்க பிள்ளை அன்னதானம் கொடுத்தானாம்.
(இந்த வரிகள் நமக்கு பெருந்த வேண்டாம்(?))

யாழவன்
வத்திராயன்.

Thursday 28 August 2008

23 - வான் புலிகள் நடத்திய தாக்குதலில் திருமலை துறைமுகத்தில் பாரிய அழிவு: விடுதலைப் புலிகள்.



திருகோணமலையில் சிறிலங்கா கடற்படையின் கிழக்கு தலைமையகத் தளத்தின் மீது வான் புலிகள் நடத்திய தாக்குதல்களில் பாரிய அழிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் நான்கிற்கும் அதிகமான கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 35-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:



திருகோணமலை உட்துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள சிறிலங்கா கடற்படையின் கிழக்குத் தலைமையகம் மீது நேற்று முன்நாள் இரவு 9:15 மணிக்கு வான்புலிகளின் வானூர்திகள் தாக்குதலை நடத்தின.
இத்தாக்குதலில் கடற்படையினருக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
கடற்படைத் தலைமையகத்தில் இருந்த படைய தங்ககங்கள் வான் புலிகளின் துல்லியமான குண்டுவீச்சுக்கு இலக்காகின.
இதில் நான்கிற்கும் அதிகமான கடற்படையினர் கொல்லப்பட்டனர். 35-க்கும் அதிகமான கடற்படையினர் படுகாயமடைந்தனர்.
அத்துடன் படையத்தளப் பகுதியும் பாரிய அழிவுக்கு உள்ளானது. தாக்குதலை வெற்றிகரமாக நடத்திய வான் புலிகளின் வானூர்திகள் பாதுகாப்பாக தளம் திரும்பின என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி:
.com

Sunday 24 August 2008

22-தாயகத்தில் எம் உறவுகளின் பேரவலம்!

புலத்தில் வாழும் தமிழா ஒரு பிடி உணவு
வழங்கு களத்தில் உள்ள நம் உறவுகளுக்கு…


தாயகத்தில் எமது உறவுகள் உணவின்றி மாற்ற உடையின்றி மரங்களின் கீழும் காடுகளிலும், மழை, வெயில் மத்தியில் அகதி வாழ்வு வாழ்கின்றனர். எமது மக்கழுக்கான உதவிகளை நாம் தான் செய்ய வேண்டும். புகைப்படங்களில் கூட பார்க்க முடியவில்லை நேரில் அனுபவித்தல்..? நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. போராட்ட சுமைகளை தொடர்ந்து என்நேரமும் தாங்குபவர்களும் அவர்கள்தான்.


10 இலட்சத்திற்கு அதிகமான மக்கள் புலத்தில் வாழும் போது நாம் ஏன் யாரிடமும் கை ஏந்த வேண்டும். அரச அரச சார்பற்ர நிறுவனங்களிடம் நாம் கை ஏந்த வேண்டிய தேவை இல்லை.எமக்கு என்று “த.பு.கழகம்” “செடோட்” போன்ற அமைப்புக்கள் உள்ளன அவர்கள் ஊடாக உதவ முடியும். நாம் எதற்கு சிங்களவனிடம் உதவி கேட்க வேண்டும்.அவன் ஒரு அமைச்சர்(?) சொல்கிறான் வன்னியில் தமிழர்கள் நின்மதியாக வாழ்கிறார்களாம்.இவனிடம் எதற்கு நாம் உதவி கேட்க வேண்டும்?கேட்டால் கொடுப்பவனா இவன்?


ஆனால் நாங்கள் இங்கு புலத்தில் புலிகள் ஏன் அடிக்கவில்லை. அவர்கள் அடிக்காமல் விட்டது பிழை என்பது போன்ற விவாதங்கள் செய்து கொண்டு இருப்பது வேறு நாட்டார் எமது பிரச்சினைகளை நோக்குவது போல் உள்ளது.அதாவது எமது மக்கள்எமது இரத்த உறவுகள் என்ற நினைவு இன்று பலருக்கு இல்லை என்பதுதான்வேதனைக்குரிய விடையம். நம் அனைவருக்கும் ஒரு இடப்பெயர்வுஅனுபவம் இருக்கும் நாம் அந்த கணப்பொழுதினை ஒரு கணம் நினைப்போமானால் நிச்சயமாக உதவி செய்ய முடியும்.


எம் தேசத்தில் ஒரு குழந்தை தானும் பசியால் இறக்கக் கூடாது அவ்வாறு நிகழுமாக இருப்பின் அதனுடைய பொறுப்பு சிங்களனோ அல்லது சிங்கள அரசோ கிடையாது அதனுடைய பொறுப்பு புலம் பெயர்ந்து வாழும் ஒவ்வொரு தமிழனுடையதும்தான். .மக்கள் மீதான விமானத் தாக்குதல் செல் தாக்குதல் போன்ற காடைத்தனமான செயல்களுக்கு சிறீலங்கா அரசு(?) பொறுப்பு.இடப்பெயர்வுக்கும் அவர்கள்மீது குற்றம் சுமத்தலாம் ஆனால் அங்கு ஒரு உயிர்தனிலும் பசியால் போகுமாக இருந்தால் அதற்கு நாம் தான் பொறுப்பு என்பதை மறந்துவிடலாகாது. சிங்களவன் நம் எதிரி.அவனுடைய நோக்கம் தமழர்களை அழிப்பதுதான்.அவனை நாம் எதிர்த்துப் போராடுகிறோம். எனவே அவனுடைய ஒவ்வொரு நகர்வுகளையும் நாம் முறியடிக்க வேண்டும்.

நாம் இங்கு சில முக்கியமற்ற நிகழ்வுகளுக்கு முக்கியம் கொடுத்து பல செலவுகளை செய்கிறோம். இவ்விடத்தில் ஒன்றை நாம் கவனமாக விளங்கிக் கொள்ள வேண்டும் அதாவது உதாரணமாக நாம் இங்கு சாப்பிடாமல் அங்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறவில்லை சாப்பிட்ட பின்பு சாப்பிடும் “பீடாவை-கோலாவை” தவிர்க்க முடியும் என்றுதான் சொல்கிறேன்.கேயில்களுக்கு திருவிழாஎடுக்கிறோம் தெருவில் தேங்காய் உடைக்கிறோம் எம் இரத்தங்கள் உணவிற்காக வாடுகையில் இங்கே கடவுளின் பெயராலும் கொண்டாட்டங்கள் என்ற பெயராலும் பல கிலோ,பல வகை உணவு வகைளை கொட்டிச் சிந்தி வீணடிக்கிறோம். நம்மை பெற்ற தாயும் நாம் பிறந்த பொன்னாடும் அழிவின்- துயரின் விழும்பில் இருக்கும் போது நாங்கள் ஆடை அணிகள் ஆடம்பரங்கள் என்று பகட்டுக்காட்டி ஆண்டவனை பூசிப்பதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை நம்மால் முடிந்த உதவியை எம் உறவுகளுக்கு செய்யவேண்டும்.மற்றவர்களிடம் நாம் கையேந்த வேண்டிய எமக்கு தேவை இல்லை.நாம் கஸ்ரப்பட்டு உழைக்கும் உழைப்பில் ஒரு தெகையில் எம் உறவுகள் ஒரு நேரம் பசி தீருமானல் அப் பணத்திற்கான பெறுமதி நிச்சயமாக கணக்கிட முடியாது.

நம்மால் முடிந்த உதவியை எம் உறவுகளுக்கு செய்யவேண்டும். மற்றவர்களிடம் நாம் கை ஏந்த வேண்டிய தேவை எமக்கு இல்லை.நாம் கஸ்ரப்பட்டு உழைக்கும் உழைப்பில் ஒரு தொகையில் எம் உறவுகள் ஒரு நேரம் பசி தீருமானால் அப் பணத்திற்கான பெறுமதி நிச்சயமாக கணக்கிட முடியாது.

இங்கு பல உறவுகள் சொல்வார்கள் எங்களுக்கு உதவி செய்ய விருப்பம் ஆனால் யாரிடம் கொடுப்பது என்று தெரியாதென. தற்போது சில நாடுகளில் நிலமைகள் சற்று இறுக்கம்தான் ஆனால் நம் உறவுகளுக்கு உதவுவதற்கு எங்கும் பிரச்சினை இல்லை. நாம் உதவி செய்வதற்க்கு பல வழிகள் உண்டு இங்கு “த.பு.கழகம்” உள்ளது அதுமுடியாவிட்டால் உங்களுக்கு அறிமுகமான அமைப்புக்கள் ஊடாக அல்லது, தாயகத்தில் உள்ள வேறு உறவுகள் ஊடாக என பல வழிகளில் செய்ய முடியும்.

எனவே தயவுசெய்து அனைத்து உறவுகளும் எமது தாயக உறவுகளுக்கு தொடர்ந்தும் எம்மாலான உதவிகளை செய்வோம்.

“செடோட்” தொடர்புகளுக்கு….
E-mail- sedot.uthavi@gmail.com
Tele phone-0041 762944857

யாழவன்.

Monday 4 August 2008

21-'இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு" நூல் தொடர்பிலான ஆய்வு.



தமிழ்த் தேசியத்தின் மறைக்கப்பட்ட வரலாறு ஒரு முழுமையான வரலாறாக இந்த ஆய்வு நூலின் மூலமாக வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது.
கி.மு. 300 ஆண்டுகள் தொடங்கி தற்காலம் வரையுள்ள இலங்கைத் தமிழர்களின் சமய, கலை, கலாச்சார, மொழி, சமூக, பொருளாதார, அரசியல் வரலாற்று நிகழ்வுகள் யாவும் காலவரண் முறைப்படி பல வகையான மூல ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட ஒரு முழுமையான நூலாகும்.
இலங்கை இரு தேசங்களைக்கொண்ட ஒரு நாடு. ஒன்று தமிழ்த் தேசம். மற்றையது சிங்களதேசம். இந்த இரு தேச மக்களும் வரலாற்றுக் காலம் தொட்டு, அந்த மண்ணில் தொடர்ச்சியாக வாழ்ந்து, அந்த மண்ணை அந்நியரான மேலைத் தேசத்தவர்கள் கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் ஆக்கிரமிப்புக்குள்ளாக்கும் வரை, ஆட்சி செய்து வந்தார்கள்.
அந்த நாட்டின் வரலாறு இரு தேசங்களை உள்ளடக்கிய வரலாறாக எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த நாட்டின் வரலாறு சிங்கள தேசத்தின் வரலாறாக மட்டுமே எழுதப்பட்டிருக்கின்றது. தமிழர் வரலாறு அங்கொன்றும் இங்கொன்றுமாக குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது. இது ஒரு துர்ப்பாக்கியமான நிலைமையாகும். இந்த நிலைமையே இன்று வரை தொடர்கிறது.
தமிழர்கள் தமது சுதந்திரத்தை முதன்முதலில் அந்நியரான போர்த்துக்கேயரிடம் இழந்ததில் இருந்து இன்று வரையும் அடிமைகளாக, சுதந்திரமற்றவர்களாக அந்த மண்ணில் வாழ்ந்து வருகின்றனர்.
ஜனநாயக வழிகளில் போராடி தமது சுதந்திரத்தைப் பெறலாம் என போராடிப் போராடி தோல்வியைக்கண்ட தமிழர்கள் தாம் இழந்த சுதந்திரத்தை மீளப்பெற இன்று அரச பயங்கரவாதத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடி வருகின்றனர்.
தமிழர்களுக்கன தனியான சமய, மொழி, பண்பாடு அடையாளங்களும் அவர்களுக்கே சொந்தமான பாரம்பரிய பிரதேசமும் நிரந்தரமாக அந்த மண்ணில் உண்டு. அதனால் அவர்கள் தம்மைத்தாமே ஆளும் உரிமையும், இறைமையும் கொண்ட ஒரு ப+ரண தேசியத்தைக் கொண்டவர்கள்.
ஆனால், மேற்படி இறைமையையும் தேசியத்தையும் அதிகாரப+ர்வமாக நிறுவுவதற்கு அவர்களுக்கு ஒரு தொடர்ச்சியான வரலாற்றுப் பதிவு மிக அத்தியாவசியமானது. இதுவே இந்நூல் இச்சந்தர்ப்பத்தில் வெளிவர அடிப்படைக் காரணமும், உடனடிக் காரணமுமாகும்.
இந்நூல் முற்றுமுழுவதுமாக மூல ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு ஆய்வுசெய்து உள்ளதை உள்ளவாறே எழுதப்பட்ட ஒரு புலமைசார் நூலாகும்.
இலங்கை, இந்தியா, போர்த்துக்கல், நெதர்லாந்து, பிரித்தானியா, பிரான்ஸ், சுவிற்சலாந்து, அமெரிக்கா, ஜேர்மனி ஆகிய நாடுகளிலுள்ள பல ஆவணக்காப்பகங்களில் இந்நூலாசிரியர் பல மாதங்களாகத் தேடி எடுக்கப்பட்ட முக்கியமான ஆதாரங்களே இந்நூலின் ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அத்தோடு இலங்கையில் குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் அமெரிக்கா, பிரித்தானியா, இலங்கை பல்கலைக்கழக தொல்லியலாளர்களால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின்போது பெறப்பட்ட தொல்லியல் சான்றுகளும், கல்வெட்டுகளும் இந்த ஆய்வின் மிக முக்கிய ஆதாரங்களாக இடம்பெற்றுள்ளன.
சுருங்கக்கூறின் அத்தனை வரலாற்று நிகழ்வுகளும் மூல ஆவணங்களை ஆதாரமாகக்கொண்டு எதுவித பக்கசார்பும் இன்றி உள்ளதை உள்ளவாறே பதிவு செய்யப்பட்டள்ளன. நிச்சயமாக இந்நூல் தமிழர்களின் 2300 வருடகால வரலாற்றை மிகவும் தெளிவாகவும், சுருக்கமாகவும், உண்மைத்தன்மை கொண்டதாகவும் கூறும் முதல்தர நூல் என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள்.
மேலும் சிறப்பாக பல்வேறு மட்டத்தினரையும் கருத்திற்கொண்டு இந்நூல் தமிழிலும் ஆங்கிலத்திலும் தனித்தனியாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. 600-க்கும் மேற்பட்ட பக்கங்களைக்கொண்ட இந்நூல் 10 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தமிழர்களே அந்த மண்ணின் ஆரம்பக் குடியிருப்பாளர்கள் என்பதை தொல்லியல் சான்றுகளின் ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
இதுவரையும் எந்த ஆய்வாளர்களும் துணிந்து இவ்வாறான ஒரு முடிவைக்கூறத் தயக்கம் காட்டியே வந்துள்ளனர். ஆனால் ஆதாரங்களின் அடிப்படையில் உண்மையான நிலைப்பாட்டை உள்ளவாறு துணிந்து கூறப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.
சைவமும் தமிழுமே இலங்கையின் ப+ர்வீக மக்களின் மதமும், மொழியும் என்பதனையும் தொல்லியல் சான்றுகள் கல்வெட்டு ஆதாரங்கள் மூலம் நிறுவப்பட்டுள்ளது.
அத்தோடு இலங்கையில் பல்வேறு ஆரம்ப சிற்றரசுகள் இருந்திருப்பதையும், அச்சிற்றரசுகள் யாவும் திராவிடத் தமிழ் மக்களின் சிற்றரசு என்பதனையும் இந்த ஆய்வுமூலம் காட்டத் தவறவில்லை.
கி.மு. 5 ஆம் நூற்றாண்டளவில் வட இந்தியாவிலிருந்து விஜயன் வந்தது பற்றி 'மகாவம்சம்" கூறும் கதை வெறுமனே ஐதீகக் கதை என்பதையும் இந்நூல் மிக துல்லியமாக வெளிப்படுத்தி நிற்கின்றது.
அத்தோடு ஆரிய இனம் என்ற ஒரு இனக் குழு இலங்கையின் ப+ர்வீக மக்கள் மத்தியில் காணப்படவில்லை என்பதை தொல்லியல் சான்றுகளின் அடிப்படையிலும் சிங்கள, தமிழ் தொல்லியளாளர்களின் புலமைசார் வெளியீடுகளில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களையும் வைத்து நிரூபிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கி.மு. 3 ஆம் நூற்றாண்டளவில் வட இந்தியாவிலிருந்து வருகை தந்த பௌத்த மத வருகையின்போது இலங்கையிலிருந்த ப+ர்வீக திராவிட இன மக்களே பெரும்பாலும் பௌத்தர்களாக மாறியிருக்கின்றார்கள் என்பதையும் தெளிவுபடுத்தி எழுதப்பட்டுள்ளது.
கி.மு. 3 ஆம் நூற்றாண்டுகளில் இருந்து வரலாற்றுக் காலம் ஆரம்பித்ததிலிருந்து இராச்சியங்கள் தோற்றுவிக்கப்பட்டு மத, வியாபார, அரசியல் தொடர்புகளின் காரணமாக பல்வேறு இனக் குழுவினர் பல நாடுகளிலிருந்தும், குறிப்பாக இந்தியத் துணைக் கண்டத்திலிருந்தும் வந்து இலங்கையில் குடியேறினார்கள் என்ற வரலாற்று உண்மை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
கி.பி. 10 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் சோழர் இலங்கையை ஆக்கிரமித்த நிகழ்வுகளோடு, கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாண இராச்சியம் மிகவும் பலம் வாய்ந்த ஒரு இராச்சியமாக தன்னை வளர்த்து இலங்கையில் பெரும்பான்மையான பிரதேசங்களில் தனது மேலாண்மையை செலுத்தியமை பற்றியும் அதற்கு வன்னிச் சிற்றரசுகளின் ஆதரவு தொடர்ச்சியாகக் கிடைத்தமை பற்றியும் காலவரண்முறைப்படி ஆய்வு செய்து விளக்கப்பட்டுள்ளது.
இலங்கையை அந்நியரான போர்த்துக்கேயர் கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் ஆக்கிரமித்தபோது எவ்வாறு தமிழ்த் தேசம் சீரழிக்கப்பட்டது என்பது பற்றியும் சைவக் கோவில்களும், கலாச்சார மையங்களும், கல்வி நிறுவனங்களும் முற்றாக அழிக்கப்பட்டமை பற்றியும் கத்தோலிக்க மதமும், மேலைத்தேச கலாச்சாரமும் எவ்வாறு தமிழர்கள் மத்தியில் கட்டாயப்படுத்தித் திணிக்கப்பட்டமை பற்றியும் தமிழர்களின் பொருளாதார வளங்களை எவ்வாறு போர்த்துக்கேயர் வழித்துத் துடைத்து எடுத்தார்கள் என்பது பற்றியும் இந்நூலின் மூலம் விளக்கப்பட்டள்ளது.
தமிழர்களின் தேசியக் கொடியாகிய நந்திக்கொடி இறக்கப்பட்டு போர்த்துக்கேயரின் அந்நியக்கொடி தமிழ்ப் பிரதேசங்களில் பறக்கவிடப்பட்டு தமிழர்களின் அடிமை வாழ்க்கை உலகத்திற்கு பறைசாற்றப்பட்டமை பற்றி அதிகாரப+ர்வமான போர்த்துக்கேய ஆவணங்களில் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் ஆய்வு செய்து முதல் முறையாக எழுதப்பட்டுள்ளது.
போர்த்துக்கேயரைப் போன்றே அவர்கள் பின்னர் இலங்கைக்கு வருகை தந்த டச்சுக்கார ஆக்கிரமிப்பாளர்கள் ஒட்டுமொத்தமாக தமது புரட்டஸ்தாந்து மதத்தை தமிழர்கள் மத்தியில் திணித்தமை பற்றியும் தமிழர்களின் இரத்தத்தை உறிஞ்சிக்குடித்ததோடு மட்டும் திருப்திப்படாமல் அவர்களின் தசையையும் விட்டுவைக்கவில்லை என்பதனையும் டச்சு ஆவணங்களில் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் மூலம் மிகவும் தெளிவாக ஆய்வு செய்து முதல் முறையாக பல அதிர்ச்சி தரும் வரலாற்று நிகழ்வுகள் இந்நூல் மூலம் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது.
சமய, பொருளாதார நோக்கில் இலங்கையை ஆக்கிரமித்த போர்த்துக்கேயர், டச்சுக்காரர்களை விட பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்கள் நாட்டை நிரந்தரமாக பிரித்தானிய சாம்பிராயத்தின் கீழ் ஆட்சி செய்யும் நோக்கம் கொண்டவர்களாகக் காணப்பட்டார்கள். இதன் விளைவாக இவர்கள் இலங்கையில் தமது புரட்டஸ்தாந்து மதத்தை மிசனரிகளின் உதவிகளுடன் மிகவும் தீவிரமாகப் பரப்பினார்கள். இதற்கு கல்வியை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தவேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டது.
அதனால், தமிழர்கள் ஆங்கிலக் கல்வி வாய்ப்பையும் வேலை வாய்பையும் பெறுவதற்காக மதம் மாறவேண்டிய நிலை ஏற்பட்டது. தெருக்கள், வீதிகள், குளங்கள், கால்வாய்கள் திருத்தி அமைக்கப்பட்டன.
சட்டதிட்டங்கள், நிர்வாகக் கட்டுமானங்கள் மிகவும் சிறந்த முறையில் கடைப்பிடிக்கப்பட்டது. நாட்டிலும் அமைதியும், பாதுகாப்பும் நிலவியது. சுகாதார வசதிகள் மக்களுக்கு வழங்கப்பட்டது.
இவைகளின் விளைவாக நாட்டில் மக்கள் தொகையும் அதிகரித்தது. புதிய அரசியல் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி ஆட்சியில் உள்ளுர்வாசிகளை பங்கெடுக்க வைத்தனர். பல்வேறுபட்ட நன்மைகளை மக்கள் பெற்றபோதிலும் பிரித்தானியர் அறிமுகப்படுத்திய பிழையான பொருத்தமில்லாத அரசில் சீர்திருத்தங்கள் தமிழர்களின் ஆளுகின்ற உரிமையையும் தமிழர்களின் பாரம்பரிய பிரதேச அடையாளத்தையும் மிகவும் ஆபத்தான நிலைக்குத் தள்ளியது. இதன் தாக்கம் தமிழ்த் தேசியவாதத்திற்கு வழி அமைத்தது.
இலங்கையைவிட்டு பிரித்தானியர் 1948 ஆம் ஆண்டில் விலகியபோது அவர்களது தவறான பொருத்தமற்ற அரசியல் சீர்திருத்தக் கொள்கையினால் பெரும்பான்மை மக்களின் தலைவர்களிடம் இலங்கையை ஆளுகின்ற இறைமை சென்றடைந்தது. தமிழர்கள் தொடர்ந்தும் அரசியல் அடிமையானார்கள்.
தொடர்ந்து, ஆட்சியை நடாத்திய சிங்கள அரசு பெரும்பான்மை என்ற ஒரே ஒரு பலத்தை தமது வசம் வைத்துக்கொண்டு அதன் அடிப்படையில் ஆட்சியை அமைத்து அதனூடாக முப்படைகளின் பலத்தையும் தன்னகத்தே கொண்டு தமிழர்களை எந்த வழிகளில் எல்லாம் அடக்கி-ஒடுக்கி அழித்தொழிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.
1948 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் அரசியல் தலைவர்கள் ஜனநாயக வழிகளில் போராடி அல்லது சிங்கள அரசியல் தலைவர்களிடம் விலைபோன நிலையில் இளம் தலைமுறையினர் சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போரடத் தொடங்கினர்.
மேற்படி காலகட்ட வரலாறுகள் அனைத்தும் காலவரண் முறைப்படி பிரித்தானிய ஆவணக்காப்பகங்களில் கிடைக்கப்பெற்ற முதல்தர ஆவணங்களை ஆதாரமாகக்கொண்டு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்டது.
இக்காலகட்ட வரலாற்றை இந்நூலின் மூலம் வாசிப்பவர்கள் கண்களில் இருந்து கண்ணீர் வராமல் இருப்பதற்கு நியாயம் இல்லை. இந்நூல் தமிழர்களின் மனச்சாட்சியை மட்டுமல்ல சிங்கள மக்களின் மனச்சாட்சியையும் ஏனைய உலக நாட்டு மக்களின் மனச்சாட்சியையும் தொடும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.
தமிழ்க் கல்விமான்களும், மற்றையவர்களும் இந்நூலின் மூலம் பல புதிய தரவுகளையும் ஆச்சரியமும் அதிசயமும் தரக்கூடிய பல உண்மைகளையும் நிச்சயம் அறிந்துகொள்வார்கள். தமது சொந்த சுய இலாபங்களுக்காக குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவர்களின் மனச்சாட்சியை நிச்சயம் இந்நூலில் உள்ள நிகழ்வுகள் என்றும் உறுத்திய வண்ணம் இருக்கும்.
தமிழர்களின் நியாயமான, நீதியான, தர்மமான சகல உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்பது தவிர்க்கமுடியாத ஒன்று என்பதனை சகல தரப்பினர்களும் உணர்வுபூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் ஏற்றுக்கொள்கின்ற ஒரு யதார்த்தத்தை இந்நூல் நிச்சயம் ஏற்படுத்துவதற்கு தவறாது என்பதுவே இந்நூலின் பயன்பாடாக விளங்கியுள்ளது.
நன்றி.