படம்-தமிழ்நாதம்.கொம்
புலம் பெயர் நாடுகளில் தமிழ் மக்கள் கோவில்களுக்கு அதிக முக்கியம் கொடுக்கிறார்கள்.இது ஒரு வகையில் நன்மை உண்டு அதாவது புலம்பெயர் தமிழ் இளையவர்களுக்கு எமது கலை கலாச்சாரங்களை ஊட்டுவதர்க்கு ஆலயங்கள் சிறப்பாக திகழ முடியும்.ஆனால் இன்று எத்தனை ஆலயங்கள் இவ்வாறு செயற்படுகின்றன என்பதனை விரல் விட்டுஎண்ண முடியும். அந்தளவிற்கு ஆலயங்கள் தவறான முறைகளில் மக்களை அவர்களுடைய சிந்தனையில் இருந்து தடம்புரள வைக்கும் வகையில் செயற்பாடுகளில் செயற்படுத்தப்படுகின்றன என்பது ஒரு கசப்பான உண்மையாகும். கடவுள் நம்பிக்கை எனும் பெயரில் மக்கள் மத்தியில் உள்;ள பல ழூட நம்பிக்கைகளை களையாது தொடர்ந்தும் மக்களை அவ் மாயையில் வைத்திருந்து பணம் சம்பாதிக்கும் ஒரு வியாபார நிறுவனமாகவே புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் உள்ள பல ஆலயங்கள் செயறபடுகின்றன.இதனை புரிந்துகொள்ளாது பல மக்கள் தமது பணத்தினையும் நேரத்தினையும் வீணடிக்கிறார்கள் என்பதே வேதனைக்குரிய விடையமாகும்.
இத்தனைக்கும் மேலாக புலம்பெயர் நாடுகள் பலவற்றில் உள்ள தமிழ்மக்களின் பல ஆலயங்கள் அரசியலுடன் நேரடியான தொடர்புகளை பேணுகின்றன. இங்குள்ள சில கோயில்கள் சிறீலங்கா தூதுவராலயங்கள் மற்றும் ஒட்டுக் குழுக்களினாலும் நடாத்தப்படுகின்ற.இவற்றை தெரிந்தும் கூட எம் மக்கள் பல ழூடநம்பிக்கைகளில் தொடர்ந்தும் அவ் ஆலயங்களுக்கு செல்கிறனர். இன்றும் சில கோவில்கள் பொது நோக்கங்களுக்காக ஒழுங்கான நிர்வகங்களுடன் இயங்குகின்றன. எனவே அவ் ஆலயங்களுக்கு செல்ல முடியும் எல்லா இடமும் இறைவன் ஒன்றுதான். நமது மனங்கள்தான் வேறுபடுகிறன. பிள்ளையார் எந்தக் கோவிலில் இருந்தாலும் அவர் பிள்ளையார்தான். நான் கோயில்களை இடிக்கவேண்டுமோ அல்லது வழிபடக்கூடாது என்று சொல்லவில்லை எம்மிடம் உள்ள பல ழூடநம்பிக்கைகளை களை எடுக்க வேண்டும். நாம் என்ன செய்கிறோம் என்னத்தை செய்கிறோம் என்ற எண்ணம் எமக்கு சுயமாக தெரிய வேண்டும் எவனாவது சென்னவுடன் செய்ய வேண்டிய தேவை இல்லை.
இன்று (31-08-08) பரிஸ் நகரின் லாச்சப்பலில் உள்ள பிள்ளையார் கோவில் தேர்த் திருவிழா. இன்று லாச்சப்பல் வீதி முழுமையாக தேங்காயால் ழூடப்ட்டிருக்கும் ஆயிரக்கணக்கான தேங்காய்கள, உணவுகள் என்பன வீணாக போகும் இது ஒரு சிறிய உதாரணமே. இதை விட ஆயிரக்கணக்கான யூரோ நாணயங்கள் மக்களிடம் இருந்து ஆலய நடத்துநர்களுக்கு கைமாறும் நிகழ்வுமாகும். இதைவிட இன்னெரு சிறப்பம்சம் எம் இளையோர்கள் சிலர் கத்தி, வாள், மற்றும் போத்தல் சகிதம் வேடுவக் வேடம் போட்டு காடுகளில் செய்ய வேண்டிய செயல்களை வீதிகளில் செய்வதனால் சில இடங்களில் இரத்தங்கள் பாயும். இவர்களை இயக்குவதில் சிறீலங்கா தூதரகம் பெரும் பங்காற்றுகிறது.
ஒரு கடைக்காறர் இருநூறு தேங்காய் உடைத்தால் அடுத்த கடைக்காறர் முன்நூறு தேங்காய்.எதற்காக இவை எல்லாம்? வன்னியில் எம் உறவுகளின் கதறல்களுக்கு மத்தியில் இவைகள் முக்கியமா என சிறிது சிந்திப்போம்.. கோயில்களுக்கு போகத்தான் வேண்டும் எனில் ஒரு தேங்காய் போதும் ஆயிரம் தேங்காய் தேவை இல்லை மிகுதி பணத்தினை உண்ண உணவின்றி வாழும் உறவுகளுக்கு கொடுங்கள்.
உண்மையிலேயே தமிழர்கள் வாழ்வியலில் கோயில்கள் கோயில் திருவிழாக்கள் என்றால் மிக முக்கிய இடம் வழங்கப்படுவதுண்டு. தாயகத்தில் ஒரு கோவில் திருவிழா என்றால் அந்த ஊர் விழாக் கோலம் பூண்டிருக்கும். ஆகவே கோவில்கள் திருவிழாக்கள் என்பன தமிழ்மக்களால் மிகவும் விரும்பப்படுகின்றன. அவற்றை செய்வதிலும் தப்பில்லை.ஆனால் தற்போது தாயகத்தில் எம் உறவுகள் சிங்கள வெறியரின் வெறியாட்டத்தால் உணவுக்காக ஒரு துண்டு கூரைக்காக மழை வெயில் என்று சொல்ல முடியாத துன்பத்தில் துடித்துக் கொண்டிருக்கையில் களங்களிலும் நம் உறவுகள் உயிரைக் கொடுத்து மண் காத்துகொண்டிருகையில் நாம் இங்கு கோயில் குளம் என்ற ஆடம்பரமான கொண்டாட்டங்கள் தேவையா? இரத்த உறவுகள் உயிர் வாழத் துடித்துகொண்டிருக்கையில் நாம் இங்கு பட்டு வேட்டியும் காஞ்சிபுரச் சாறியும் உடுத்து தங்க நகைகளுடனும் இறைதரிசனம்(?) செய்து சாகாவரம் பெறப்போகிறோமா??
இங்கு ஒரு கோவில் திருவிழாவுக்கு செல்லும் மக்கள் தொகை பொங்கு தமிழ் போன்ற தேசியத்திற்கு வலுச்சேர்கும் பெரியளவிலான நிகழ்வுகளுக்குகூட வருவதில்லை.ஆனால் தமிழீழம் வேண்டுமாம்(?) சுதந்திரம் கடையில் வாங்கும் பொருளா?? ஒருத்தன் சொல்லியிருக்கிறான் தமிழன் என்றல் சொறியும் போது சொறிந்துவிட்டு பின்பு தூங்கிவிடுவானாம். இந்த நிலை மாற வேண்டும். நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் சிந்தித்து செயற்படவேண்டும். சிலர் சொல்வார்கள் விடுதலைப்புலிகள் சண்டை ஆரம்பித்தால் ஆதரவாம் இல்லாட்டில் இல்லையாம். என்னையா புலிகள் இயந்திரமா? ஓவ்வொரு போராளியும் எங்களைப் போன்ற ஒரு உயிர் என்பதை மறந்துவிடக்கூடாது. எனவே அவற்றை எல்லாம்; மற்றும் எங்களுடைய பலம் பலவீனம் எதிரியின் பலம் பலவீனம் என்பவற்றையும் கருத்தில் கொண்டுதான் தலைவர் அவர்கள் திட்டங்களை வகுப்பார்.உதாரணமாக சில நாட்களுக்கு முன்பு தமிழீழத் தலைநகர் திருமலையில் நடந்த தாக்குதலை குறிப்பிடலாம்.
எனவே நாம் சிறிது காலத்திற்கு எமது தேசத்தற்காகவும் தேசமக்களுக்காகவும் தலைவர் போராளிகளுக்காகவும் உழைத்துவிட்டு தமிழீழம் அமைந்த பின்பு நாம் அனைவரும் தாயகத்திற்கு சென்று தாயக உறவுகளுடன் இணைந்து தமிழீழத்தின் பிரசித்தி பெற்ற நல்லூர், திருக்கோணேஸ்வரர், வல்லிபுரக் கோவில், வற்றாப்பளை கண்ணகை அம்மன், திருக்கேதீஸ்வரர், போன்ற அனைத்து தலங்களுக்கும் சென்று வடம் பிடித்து தேர் இழுப்போம்.
தாய் பிச்சை எடுக்க பிள்ளை அன்னதானம் கொடுத்தானாம்.
(இந்த வரிகள் நமக்கு பெருந்த வேண்டாம்(?))
யாழவன்
வத்திராயன்.