வடபோர் முனையில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய படை நடவடிக்கை விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.இதில் 150 சிறீலங்காப் படையினர் கொல்லபட்டுள்ளனர். மேலும் 400 படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளாகியதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளளனர்.
இன்றைய முறியடிப்புச் சமரில் விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளில் சிறீலங்காப் படையினரின் சடலங்களும் ஆயுத தளபாடங்களும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன.இன்று அதிகாலை 2 மணியளவில் கிளாலி தொடக்கம் முகமாலை கண்டல் வரையிலான 7 கிலோமீற்றர் வரையில் சிறீலங்காப் படையினர் பெரும் எடுப்பில் படையயெடுத்துள்ளனர்.53வது, 55வது முன்ன
ணி தாக்குதல் படையணிகள் களமிறக்கப்பட்டனர். இவர்களுக்கு ஆதரவாக யுத்த டாங்கிகள், பல்குழல், ஆட்லறி, மோட்டார் எறிகணைகள் என கனரக ஆயுதங்களின் சூட்டாதரவும் வழங்கப்பட்டுள்ளன.படையினரின் முன்னேற்ற முயற்சிக்குக்கு எதிராக விடுதலைப் புலிகள் நண்பகல் 12.30 வரை கடுமையாக எதிர்த் தாக்குதலைத் தொடுத்து படையினரின் முன்னேற்ற முயற்சியை முறியடித்து, படையினரை பழைய நிலைகளுக்கு பின்வாங்கச் செய்துள்ளனர்.
jaalavan@gmail.com
Subscribe to:
Post Comments (Atom)








No comments:
Post a Comment