
வன்னிவேளாங்குளத்தில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 18 படையினர் காயமடைந்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் பெரும் எறிகணைச் சூட்டாதரவுடன் படையினர் முன்னகர்வுகளில் ஈடுபட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் எறிகணைச் சூட்டாதரவு மற்றும் போராளிகளினது முறியடிப்புத் தாக்குதலுடனும் படையினரின் முன்னகர்வுகள் அனைத்தும் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.
படையினருக்கு ஏற்பட்ட பலத்த இழப்புகள் காரணமாக படையினர் முன்னகர்வுகளை கைவிட்டுவிட்டு தமது பழைய நிலைகளுக்குத் திரும்பி ஓட்டமெடுத்துள்ளனர். இதன்போதே படையினர் தரப்பில் 15 படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 18 படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
pathivu.com
for contact: jaalavan@gmail.com








No comments:
Post a Comment