Monday, 29 September 2008

** சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வுக்கு எதிராக புலிகள் முறியடிப்புத் தாக்குதல்.

வன்னேரிக்குளத்துக்கும் பண்டிவெட்டிக்குளத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் சிறிலங்கா படையினர் பெருமெடுப்பில் மேற்கொண்ட முன்நகர்வுத் தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இம் முறியடிப்புத் தாக்குதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி தொடர்ந்து இடம்பெற்று வருவதாக களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
வன்னியின் மேற்குப்பகுதி களத்தில் வன்னேரிக்கும் பண்டிவெட்டிக்குளத்துக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே சிறிலங்கா படையினர் பெருமெடுப்பில் முன்நகர்வுத் தாக்குதலை மேற்கொண்டனர்.
இந்நிலையில் விடுதலைப் புலிகள் கடுமையான முறியடிப்புத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
puthinam.com
****

for contact: jaalavan@gmail.com

No comments: