Thursday, 18 September 2008

** வன்னேரிக்குளம் நோக்கிய முன்னகர்வுகள் முறியடிப்பு: 25 படையினர் பலி! 40 படையினர் காயம்! இரு உடலங்கள் மீட்பு.



வன்னேரிக்குளத்தில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது என தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இன்று வியாழக்கிழமை 10 மணியளவில் வன்னேரிக்குளப் பிரதேசத்தை ஆக்கிரமிக்கும் நோக்குடன் மேற்கொண்ட முன்னகர்வுகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 25 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 40 படையினர் காயமடைந்துள்ளனர். படையினரது இரு உடலங்களும் படைக்கருவிகளும் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பெரும் எறிகணை தாக்குதல்கள், கனரக ஆயுதம் பிரயோகம் மற்றும் எம்.ஜ.24 உலங்கு வானூர்த்தி உந்துகணைத் தாக்குதல்களின் சூட்டாதரவுடன் மேற்கொண்டு முன்னகர்வுகளுக்கு எதிராக போராளிகள் பிற்பகல் 1 மணி வரை கடுமையாக எதிர்த் தாக்குதல்களைத் தொடுத்து, படையினரை பழைய நிலைகளுக்கு விரட்டியடித்துள்ளனர். இதன்போதே 25 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 40 படையினர் காயமடைந்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை கிளிநொச்சியின் தென்பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
pathivu
for contact: jaalavan@gmail.com

No comments: