Tuesday, 23 September 2008

** கிழக்கில் ஆயுதக்குழுக்களிடம் ஆயுதங்களைக் களைய ஆயுததாரி பிள்ளையான் உறுதியளித்துள்ளாராம்(??) - ரொபேட் ஓ பிளாக்.



கிழக்கு மாகாணத்தில் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களைவதற்கு சிறீலங்கா துணை இராணுவக் குழுவின் முதன்மை ஆயுததாரியும் கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சருமான பிள்ளையான் உறுதியளித்துள்ளதாக அமெரிக்கத் தூதுவர் ரொபேட் ஓ பிளாக் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிக் குடியில் அமெரிக்காவின் உதவியுடன் திறக்கப்பட்ட தொழில் பயிற்சி நிலையத் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றும் போது,


கிழக்கு மாகாணத்தில் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களைவதற்கு சிறீலங்கா துணை இராணுவக் குழுவின் முதன்மை ஆயுததாரியும் கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சருமான பிள்ளையான் உறுதியளித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாத சூழலில் அங்கு முதலீடுகளை மேற்கொள்ள தொழிலதிபர்கள் அச்சமடைகின்றனர். தனியார் முதலீடுகளை மேற்கொள்ள அங்கு பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம். சிறீலங்கா அரசாங்கமும், கிழக்கு மாகாணசபை நிர்வாகமும், முதலமைச்சரும் பாதுகாப்படை உறுதி செய்ய வேண்டும்.அங்கு நடைபெறும் ஆட்கடத்தல்கள், படுகொலைகள், மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அங்கு மேலும் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
pathivu.com
for contact: jaalavan@gmail.com

No comments: