
வன்னிப் பெருநிலப்பரப்பிலிருந்து ஜ.நா.உட்பட அனைத்துலக உதவி நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டமையைக் கண்டித்து நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அடையாள உண்ணா நிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு போரட்டமும் இன்று காலை 8.00 மணிக்கு தொடங்கியது.

நோர்வே நாடாளமன்றத்திற்கு முன்பாக இன்று காலை 8.00 மணிக்கு தொடங்கிய அடையாள உண்ணா நிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு போரட்டமும் நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி வரை தொடரவுள்ளது.

பெரியவர்கள் பெண்கள் என 20 வரையான தமிழீ உறவுகள் காலை 8.00 மணியிலிருந்து அடையாள உண்ணா நிலையை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக, நுற்றுக்கனக்கான நோர்வே வாழ் தமிழீழ மக்கள் நோர்வே நாடாளமன்றம் முன்பாக அணி திரண்டுள்ளனர்.
நாளை 10மணி முதல் 15 மணி வரை உண்ணாநிலைப் போராட்டத்துடன் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் அதே இடத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
நாளை 10மணி முதல் 15 மணி வரை உண்ணாநிலைப் போராட்டத்துடன் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் அதே இடத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

நாளைய போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அணிதிரண்டு தமிழீழ மக்களின் அவலத்தை வெளிப்படுத்தி, அவர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு ஆதரவான தமது ஒன்றுபட்ட குரலை வெளிப்படுத்தவுள்ளனர் என நோர்வே தமிழ் அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
pathivu.com
****
for contact: jaalavan@gmail.com








No comments:
Post a Comment