
வன்னிப்பெரு நிலபரப்பில் இடம்பெயர்ந்து மனிதப் பேரவலத்திற்குள் சிக்கியுள்ள இரண்டு லட்சம் மக்களை காப்பாற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் அனைத்துலக மட்டத்தில் உரத்து குரல் கொடுக்க வேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்து.
போரினால் சுமார் இரண்டு லட்சம் மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து மரநிழல்களிலும் கொட்டகைகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
தங்களின் அனைத்துப் பொருளாதார வசதிகளையும் இழந்து அநாதரவான நிலையில் உள்ள மக்களுக்கு அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களே ஓரளவு உதவிபுரிந்து வந்தன.
இந்நிலையில் அந்நிறுவனங்களும் தற்போது அரசாங்கத்தினால் திட்மிட்டு வெளியேற்றப்பட்டமையினால் இடம்பெயர்ந்த மக்கள் தற்போது ஆதரவின்றி தவிக்கின்றனர்.
இத்தகைய செயலானது அனைத்துலக மனிதாபிமான சட்டங்களை மீறுவதாகவே அமைந்துள்ளது. இவ்வாறான ஈன இரக்கமற்ற செயற்பாட்டினை மனிதாபிமானமுள்ள எவரும் அனுமதிக்க மாட்டார்கள்.
இடப்பெயர்வினால் எமது மாணவர்களின் கல்விச்செயற்பாடுகளும் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. திட்டமிட்ட முறையில் சிறிலங்கா அரசாங்கம் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.
ஆகவே, சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்துவதற்கு புலம்பெயர் வாழ் மக்கள் உட்பட சகல தரப்பினரும் அனைத்துலக மட்டத்தில் குரல்கொடுக்க முன்வாருங்கள் என்று அறிக்கையில் பகிரங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
puthinam.com
for contact: jaalavan@gmail.com








No comments:
Post a Comment