ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 20 வருடங்கள் ஆட்சிபுரியும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்லாவல மேதானந்த தேரர், வன்னியில் படையினரால் மீட்கப்படும் பகுதிகள் சிங்களவர்களின் வாழ்விடங்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, இந்த நாட்டின் எத்தனையோ தலைவர்களை நான் கண்டுவிட்டேன் ஆனால் அவர்கள் அனைவரும் என்னை மட்டுமே கண்டுள்ளார்கள் என்று பிரபாகரன் கூறியிருந்தார். ஆனால் அதற்கு தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நல்ல பதில் வழங்கியுள்ளார்.
இந்த நாட்டின் பாதுகாப்பையும் அபிவிருத்தியையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒருவராலேயே முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்ல முடியும். இதனை அவர் நிரூபித்துள்ளார். எனவே தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தை 20 வருடங்களாக்க சட்டதிருத்தம் கொண்டுவரப்படவேண்டும்.
வன்னியில் படையினரால் மீட்கப்படும் பகுதிகள் சிங்களவர்களின் வாழ்விடங்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. வன்னியில் 1500க்கு மேற்பட்ட பௌத்த விகாரைகள் இருந்துள்ளன. சிங்கள மன்னர்களால் கட்டப்பட்ட 1500க்கு மேற்பட்ட வாவிகள் தற்போதும் இருக்கின்றன என்று தெரிவித்தார்.
__________
Sankathi.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment