Wednesday 7 January 2009

** மன்மோகன்சிங்கின் தமிழக வருகையை கண்டித்து புரட்சிகர இளைஞர் முன்னணியினர் கொடும்பாவி எரிப்பு

தமிழர் விரோத 'இந்திய' பிரதமர் மன்மோகன்சிங்கின் தமிழக வருகையை கண்டித்து புரட்சிகர இளைஞர் முன்னணியினர் நேற்று 07.01.2009 காலை 11 மணி அளவில் சென்னை நினைவரங்கம் (மெமோரியல் ஹால்) அருகில் மன்மோகன்சிங் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்
சிறிலங்கா சிங்கள இனவெறி அரசு தமிழர்களை இனப்படுகொலை செய்து வருகிறது. இவ்வினப்படுகொலையை எதிர்த்து ஈழத்தமிழர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள அரச பயங்கரவாதத்துக்கு எதிராக போராடி வருகின்றனர்.

இந்திய அரசின் விரிவாதிக்க கண்ணோட்டமும், தேசிய இன ஒடுக்குமுறையை உறுதிபடுத்த தொடர்ந்து சிங்கள இனவெறி அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதோடு போரையும் இந்திய அரசுதான் நடத்தி வருகிறது.

சிங்கள அரசோ தடைசெய்யப்பட்ட வான்படை மூலமாக தமிழினத்தை நிர்மூலமாக்கி வருகிறது. இதற்கு இந்தியா, அமெரிக்கா, பாக்கிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகளின் துணையுடன் கோழைத்தனமாக போரை நடத்தி வருகிறது.

தமிழர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், போரை நிறுத்தக் கோரியும் செவிமடுக்காத மன்மோகன்சிங்; சென்னையில் நடைபெற உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் வர்த்தக மாநாட்டிற்கு 07.01.09 சென்னை வந்தார். தமிழர் விரோத மன்மோகன்சிங் கும்பலை தமிழகத்தில் அனுமதிக்க இயலாது என்று புரட்சிகர இளைஞர் முன்னணி, புரட்சிகர தொழிலாளர் முன்னணி, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி , புரட்சிகர மாணவர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இந்தஆர்ப்பாட்டத்தில் தோழர்.மார்க்ஸ் தலைமையில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோர் சென்னை நினைவரங்கம் (மெமோரியல் ஹால்) அருகில் குவிந்தனர். சிங்கள அரச பயங்கரவாதத்திற்கு துணைபோகும் அமெரிக்க கைக்கூலி மன்மோகன் சிங்கே திரும்பிப்போ! என்று முழக்கமிட்டனர். அப்போது மன்மோகன்சிங் உருவபொம்மையை தீயிட்டு கொளுத்தினர். கண்டனஆர்ப்பாட்டத்தினையும் நடத்தினர். போராடிய தோழர்களை தமிழக காவல்துறை கைது செய்தது. முன்னதக மன்மோகன்சிங்கின் தமிழக வருகையை கண்டித்து சுவரொட்டிகள் பரப்புரை செய்த புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர்களை தமிழக காவல்துறை கைது செய்தது.
__________
Sankathi.com

No comments: