கண்டாவளைக்கோட்ட தேசியப் போரெழுச்சிக் குழுவினது ஒழுங்குபடுத்தலில் நேற்று முன்தினம் களமுனைப் போராளிகளுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டது. கண்டாவளைக் கோட்ட தொழிற்சங்கங்களின் இணையம், தருமபுரம் வட்டத்திற்குட்பட்ட மாதர் சங்கங்கள், கட்டைக்காடு அ.த.க பாடசாலை ஆகியவற்றின் பங்களிப்புடன் இவ்வுணவு வழங்கல் இடம்பெற்றது.
காலை 11.30 மணியளவில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் கண்டாவளைக்கோட்ட வெகுசன அமைப்பின் ஒன்றியத் தலைவர் செ.புஸ்hராசா தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் கருத்துரைகளை இணையத்தின் துணைத்தலைவர் திருமதி ம.துரைராசாவும், கண்டாவளைக் கோட்ட எல்லைப்படைத் துணைப் பொறுப்பாளர் நர்மதனும் நிகழ்த்தினர். பதிலுரையை வடபோர்முனைத் தளபதிகளிலொருவரான மகேஸ் நிகழ்ததினார். சிறப்புரையினைக் கண்டாவளைக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சீராளன் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் சமைத்த உணவு வழங்கப்பட்டது. இதனைக் கண்டாவளைக் கோட்ட தொழிற்சங்கங்களின் இணையத்தின் பொருளாளர் திருமதி சி.செல்வகுமார் வழங்கிவைக்க வடபோர்முனை நிர்வாகப் பொறுப்பாளர் வேந்தன் பெற்றுக்கொண்டார்.
__________
Sankathi.com
Saturday 3 January 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment