கிளிநொச்சி மாவட்டம் பரந்தனில் இருந்து முல்லைத்தீவின் இரண்டாம் கட்டை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று மேற்கொண்ட மும்முனை முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.
இதில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது:
பரந்தனில் இருந்து இரண்டாம் கட்டை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி தொடக்கம் மும்முனை முன்நகர்வுகளை மேற்கொண்டனர்.
இம்முன்நகர்வுகளுக்கு எதிராக தீவிர முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தி இன்று பிற்பகல் படையினரின் நகர்வினை முறியடித்தனர்.
இதில் சிறிலங்கா படையினர் 60 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 100 க்கும் அதிகமானபடையினர் காயமடைந்துள்ளனர்.படையினரின் உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட ஆயுத விவரம்:
பிகே எல்எம்ஜி - 01
ஏகே எல்எம்ஜி - 01
ஆர்பிஜி - 01
ரி-56 ரக துப்பாக்கிகள் - 04
உள்ளிட்ட படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.
முரசுமோட்டையில் உள்ள மக்களை வெளியேற்றுவதற்காக அப்பகுதி மீது கடந்த சில தினங்களாக கடுமையான எறிகணை மற்றும் விமானத் தாக்குதல்களை நடத்தியிருந்த படையினர் இன்று அப்பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்குடன் நகர்ந்துகொண்டிருந்தபோதே, 2ம் கட்டையில் விடுதலைப் புலிகள் நடத்திய வழிமறிப்புத் தாக்குதலில் பெரும் அழிவைச் சந்தித்துள்ளனர்.
__________
Sankathi.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment