Wednesday 7 January 2009

** பிரான்சில் கவனயீர்ப்புப் போராட்டம்

ஈழத்தில் தமிழர் வாழ்நிலப் பகுதிகளில் தொடர்ந்தும் அப்பாவித் தமிழர்கள் மீதான வன்முறைகளும் எறிகணை வீச்சுக்களும் தொடர்ச்சியாக இடம் பெற்றவண்ணமுள்ளன. இந்நிலையில் பிரான்சில் கடந்த 2007ம் ஆண்டு பிரெஞ்சு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் இன்னும் விடுவிக்கப்படாமை குறித்து அதிருப்தி அடைந்த தமிழ் மக்கள் நேற்று புதன்கிழமை பி.ப 4 மணியளவில் பிரான்சின் றிபப்ளிக்கு எனும் பகுதியில் உலகின் கவனத்தை ஈர்க்கும்படியான அமைதிப்பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.

நூற்றுக்கும் அதிகளவில் அங்கு திரண்ட மக்கள் உலகியல் போர் நியமங்களை மீறி படுகொலைகளைப் புரிந்துவரும் சிங்கள அரசபயங்கரவாதிகளின் கோரத்தனமான இன அழிப்பு வன்முறையை விபரிக்கும் சுலோகங்களைத் தாங்கியவாறு மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளனர். கடுங்குளிரின் மத்தியிலும் உணர்வு கிளர்ந்த முகங்களுடன் போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் பின்னர் பி.ப 6 மணியளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
_________
Sankathi.com

No comments: