புதுவருடப் பிறப்பு நாளிலும் அதற்கு முன்புமாக தொடராகத் தமிழினப் படுகொலையைச் செய்து தன் இனப்படுகொலையை சிங்கள அரசு இன்னமும் தீவிரப்படுத்தி வருகின்றது எனத் தனியார் கல்வி நிறுவனங்களின் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் பரந்தன் பூங்காவனச் சந்திப்பகுதியிலும், புளியம்பொக்கணைச் சந்திப்பகுதியிலும், அதற்கு முதல்நாள் கண்டாவளைப் பகுதியிலுமாக பத்து வரையான பொது மக்களைப் படுகொலை செய்த சிங்கள வான்படையின் செயலைக் கண்டித்து விடுக்கப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
மகிந்த hஜபக்சவின் அனவெறிச் சிங்களப் பேரினவாத அரசு இடையறாது தனது வான்படை மூலம் வன்னியில் ஒரு தமிழினப் படுகொலையைச் செய்து வருகின்றது. நாள்தோறும் எனது உறவுகளைக் கொன்று குவித்துக் கொண்டு இனங்காணப்பட்ட இலக்குகளை அழித்தொழித்து விட்டதாக பொய்யான அறிக்கைகளை விடுத்து தனது கொலைக் கலாசாரத்தை மூடிமறைத்து வருகின்றது.
அன்றாட வாழ்விற்காக அல்லற்பட்டு அங்குமிங்கும் அலைந்து திரிந்;து நொந்துபோய் இருக்கும் எம் இரத்த உறவுகள் மீது தனது இனவாத மழையை குண்டு மழையாகப பொழிந்து வருகின்றது. அந்தவகையில் 31.12.2008 அன்று முரசுமோட்டைப் பகுதியிலும் புதுவருட நாளான நேற்று முன்தினமும் தமிழினப் படுகொலையை அரங்கேற்றியிருக்கின்றது. இத்தாக்குதலில் பல பொதுமக்கள் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டும் பல பத்து அப்பாவிப் பொதுமக்கள் படுகாயங்களுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.
எம் உறவுகளின் வாழ்விடங்கள் மீது எறிகணைகளை ஏவி அவர்களை இடம்பெயரச் செய்துவிட்டு அவர்கள் இடம்பெயர்ந்து வந்துகொண்டிருந்த போது அவர்களைக் கலைத்துக் கலைத்து குண்டு மழை பொழிந்து கொன்று குவித்துக் காயமடையச் செய்திருக்கின்றது சிறிலங்கா அரசு.
அத்துடன் தமிழனின் கல்வியைச் சீர்குலைத்து எம்மினத்தை அறியாமை என்னும் இருளில் தள்ளி தமிழினத்தின் இருப்பையும் அவர் தம் பாரம்பரியத்தையும் வழையடி வாழையாக இம்மண்ணில் வாழ்ந்துவரும் வரலாறுகளையும் அழித்துவிடும் நோக்கிலும் எமது அறிவுக் கண்ணைத் திறந்து வைக்கும் பாடசாலைகளையும் அழிக்கும் எண்ணத்துடன் முரசுமோட்டை முருகானந்தா மகாவித்தியாலயத்திற்கு மிக அருகி;ல் குண்டுகளை வீசிப் பாடசாலையையும் சேதப்படுத்தியுள்ளது.
சிங்கள அரசின் கபடத்தனமான மிலேச்சத்தனமான கொடிய செயலைக் கண்டு தனியார் கல்வி நிறுவனங்களின் மாணவர்களாகிய நாம் குருதி கொதித்துப்போயிருக்கின்றோம். இத்தகைய தாக்குதல்கள் இனியும் தொடராமல் மாணவர்களாகிய நாமும், எம் மக்களையும், கல்வியையும் காக்கும் பணியைத் தொடர்வதற்காக ஆயுதமேந்திப் போரிடவேண்டியிருக்கும் என்பதை சிங்கள அரசிற்குத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, இக்கொடிய இனவெறித் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதோடு இத்தாக்குதல் பற்றி சர்வதேச சமூகத்திற்கும் மனித உரிமைகள் சார் அமைப்புக்களுக்கும் தெரியப்படுத்துகின்றோம்.
_________
Sankathi.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment