தமிழீழ விடுதலை புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பாக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதாக சிறிலங்காவின் மூத்த அமைச்சரான மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த அறிவிப்பை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டார்.
அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விடுதலைப் புலிகளை தடை செய்வது குறித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும் தடை உத்தரவின் பிரகாரம் விடுதலைப் புலிகளுடன் எவரும் தொடர்பு வைத்திருக்க முடியாது எனவும் விளக்கமளித்தார்.
இதேவேளை, விடுதலைப் புலிகளை தடை செய்தமை பற்றிய முழுமையான விபரங்கள் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
_________
Sankathi.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment