Thursday 1 January 2009

** இளையோர் அறிவியற்கழக 3ம் ஆண்டு நிறைவு விழாவும், சான்றிதழ் வழங்கும் வைபவமும்

இளையோர் அறிவியற்கழக 3ம் ஆண்டு நிறைவு விழாவும், சான்றிதழ் வழங்கும் வைபவமும் இளையோர் அறிவியற் கழக வளாகத்தில் இன்று மாலை 3 மணியளவில் மாணவத் தலைவர்கள் செல்வி செ.தர்சாந்தினி, செல்வன் ந.ஜதீஸ்வரன் ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. பொதுச்சுடரினை கழக மாணவியும் 3மாவீரர்களின் சகோதரியுமான செல்வி வே.மாதவச்செல்வி ஏற்றினார்.


தேசியகொடியை தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் அவர்கள் ஏற்றினார். பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு அனைத்துலகத் தொடர்பகத்தைச் சேர்ந்த முனைவர் திரு அன்பரசு அவர்களும் முன்னாள் அனைத்துலகத் தொடர்பகத் துணைப்பொறுப்பாளர் லெப்கேணல் கலையழகன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு அனைத்துலகத் தொடர்பகத் துணைப்பொறுப்பாளர் பொ.ஜெயகரன் அவர்களும் ஈகச்சுடரேற்றி மலர்மாலை அணிவித்தனர்.


கழகத்தின் கல்விநோக்கம் தொடர்பாகவும், கழகத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கழக முதல்வர் செல்வி பிரதீபா உரையாற்றினார். சிறப்புரையை திரு வெ.இளங்குமரன் அவர்கள் ஆற்றினார். கழகத்தின் ஆண்டுநூலினை கழகப் பணிப்பாளர் திரு திலீபன் அவர்கள் வெளியிட்டு வைக்க கல்விக்கழகப் பொறுப்பாளர் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.
___________
Sankathi.com

No comments: