இலங்கையில் நடைபெற்றுவரும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவிடும் வகையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதியிடம் பல்வேறு தரப்பினர் நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவிடும் வகையில் பொதுமக்கள் நிதி உதவி அளிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் கருணாநிதி கேட்டுக்கொண்டார். மேலும் தனது சார்பில் 10லட்ச ரூபாயையும் வழங்கி நிதி உதவியை இன்று தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை செயலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கருணாநிதியிடம் நிதி உதவி அளித்தனர். அந்த வகையில் இன்று மதியம் வரை ரூ.26லட்சம் வரை நிதி உதவிகள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர உணவு மற்றும் உடைகள் வழங்க விரும்புவோர் அவற்றை அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி உரிய ரசீதினை பெற்றுள்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இலங்கைத்தமிழருக்காக நிதிகளை சேகரிக்காமல் தமிழக அரசே தனது சொந்தப்பணத்தில் நிதி உதவி அளித்திட வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
kumudam.com
*****
Subscribe to:
Post Comments (Atom)








No comments:
Post a Comment