Tuesday, 28 October 2008

*** களனி மின்வழங்கல் நிலையம், சப்புகஸ்கந்த எண்ணெய் குதம், தள்ளாடி படைமுகாம் மீதும் வான்புலிகள் தாக்குதல்

மன்னார் தள்ளாடிப் படைமுகாம் மீது வான்புலிகள் வான்தாக்குதல் நடத்தியுள்ளதாக சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை இரவு 10.50 மணியளவில் விடுதலைப் புலிகளின் இரு வானூர்திகள் தள்ளாடிப் படைமுகாம் மீது இருகுண்டுகளை வீசிச் சென்றுள்ளன. குண்டுவீச்சின் போத பெயரிளவு சேதங்கள் ஏற்படவில்லை என இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் கொழும்பில் இரவு 11.30 மணியளவில் களனி மின்சார வழங்கல் நிலையம், சப்புகஸ்கந்த எண்ணெய்குதம் மீதும் வான்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். களினி மின்சார வழங்கல் பகுதியும், எண்ணெய்க் குதமும் சேதமடைந்துள்ளாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறீலங்கா தீ அணைக்கும் படையினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர். இதனால் கொழும்பில் பெரும் பதற்றம் நிலவியுள்ளது. மின்சாரங்கள் அணைக்கப்பட்டு விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் வான்நோக்கி சுடப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலையடுத்து இரவு 11.00 மணிக்கம் 11.30 மணிக்கும் இடையில் சிறீலங்காவின் மிகையொலி யுத்த வானூர்திகள் கிளிநொச்சி, இரணைமடு, விசுவமடு, முரசுமோட்டை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாப் பறந்து பரா வெளிச்சக் குண்டுகளை வீசிய வான்புலிகளின் வானூாதிகளைத் தேடியுள்ளன.
pathivu.com
****

No comments: