திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் அளித்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணையை, வரும் 31ஆம் தேதிக்கு தள்ளிவைத்து, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசு தலையிடக்கோரி தமிழ்த்திரைப்படத்துறையினர் ராமேஸ்வரத்தில் நடத்திய கூட்டத்தில், உரையாற்றிய இயக்குனர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோர், இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசியதாக புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர், ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சீமான் மற்றும் அமீர் சார்பில் ராமநாதபுரம் விரைவு நீதி மன்றத்தில் இன்று காலை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி மாயாண்டி, வழக்கினை வருகிற 31ம்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே இயக்குனர் பாரதிராஜா தலைமையிலான திரைப்படத்துறையினர் மதுரை மத்திய சிறையில் இயக்குனர்கள் சீமான்,மற்றும் அமீர் ஆகியோரை இன்று நேரில் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாரதிராஜா, இலங்கைத் தமிழருக்காக சிறை சென்றது மகிழ்ச்சி அளிப்பதாக அவர்கள் தங்களிடம் தெரிவித்ததாக கூறினார். பாரதிராஜாவுடன் இயக்குனர்கள் செல்வமணி, சேரன், பாலா, நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட பலர் சென்றிருந்தனர்.
kumudam.com
****
Tuesday, 28 October 2008
Subscribe to:
Post Comments (Atom)








No comments:
Post a Comment