Sunday, 26 October 2008

*** ஈழத் தமிழ் மக்களுக்காக ஒன்றுபடுவீ்ர் தமிழகத்தீரே!

ஈழத்தமிழர்களின் பிரச்சினையால் கொதித்துப் போய் இருக்கின்றது தாய்த்தமிழகம். தமிழகத்தின் எழுச்சியும் கிளர்ச்சியும் தங்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.அந்த எதிர்பார்ப்பைப் பயனற்றதாக்கிவிடும் செயற் பாட்டில் தமிழகத்தின் ஈழ ஆதரவுச்சக்திகள் ஈடுபட்டு விடக்கூடாது என்பதுதான் ஈழத்தமிழர்களின் இன்றைய - பிரதான - கோரிக்கையாகும்.

தமிழக அரசியல் கட்சிகள் இடையேயான கொள் ளைக் கோட்பாட்டுப் பிரச்சினைகளை, அரசியல் போட்டா போட்டிகளை, உள்வீட்டுக் கழுத்தறுப்புக்களை பதம் பார்க்கும் பிரச்சினையாக ஈழத்தமிழர்களின் வாழ் வுரிமை தொடர்பான இந்தப் போராட்டத்தைப் பார்க்கக் கூடாது என்பதுதான் தமிழகக் கட்சிகளுக்கு ஈழத்தமிழர்களின் பணிவான வேண்டுகோளாகும்.ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிட்டுவதற்காக உயிரும் கொடுப்போம், சிறையும் செல்வோம் என்றெல்லாம் கூறி, ஈகையின் உச்சத்தில் நிற்கும் தமிழகத் தலைவர்களின் - பிரமுகர்களின் - தியாகம் நம்நெஞ்சைத் தொடுகின்றது; உள்ளத்தை உருக்குகின்றது.ஆனால் அந்த ஈகையும், தியாகமும், உணர்வெழுச் சியுடன் கூடிய உற்சாகமும் மூலநோக்கத்துக்கு கேடு பண்ணுபவையாக வந்து விடக்கூடாதே என்பதே நமது பிரதான கவலையாகும்.

ஆனால், ஈழத் தமிழரின் இனப்பிரச்சினை விவ காரத்தில் நமது நியாயமான சிரத்தையை வெளிப்படுத் துகின்றோம் என்று கூறிக்கொண்டு - தமிழகக் கட்சிகள் தங்களுக்குள் ஒன்றுபட்டு, ஒரே இலக்கில் செயற்படு வதை விட்டு - இந்த விவகாரத்திலும் தமது சொந்த அரசியல் குரோதங்களையும் குளறுபடிகளையும், காட்ட முற்படுமானால் அது ஈழத்தமிழர்களுக்கு நன்மை செய் வதாக முடியாது. பாதிப்பையே ஏற்படுத்தும்.ஈழத் தமிழருக்கு ஆதரவான உணர்வெழுச்சி இன்று தமிழகத்தில் உச்சக்கட்டத்தை - ‘கிளைமாக்ஸ்’ கட் டத்தை- எட்டியிருக்கின்றது. அதைக்கண்டு புதுடில்லி மத்திய ஆட்சிப்பீடமே ஆடிப்போயிருக்கின்றது.

ஈழத் தமிழர்களுக்கு நியாயம் செய்ய ஏதாவது செய்தேயாக வேண்டும் என்ற கட்டாயத்துக்குள் இந்திய மத்திய அரசை இந்த உணர்வெழுச்சி தள்ளிவிட்டிருக்கின்றது.கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தமிழக மக்கள் வயது வேறுபாடு, ஆண்-பெண் வேறுபாடு போன் றவை எல்லாம் துறந்து மனித சங்கிலிப் போராட் டத்தில் இணைந்து, ஈழத்தமிழர்களுக்கான தாங்களின் ஆதரவு எழுச் சியை ஒன்றுபட்டு வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இவ்வாறு தமிழகத்தில் ‘கிளைமாக்ஸ்’ கட்டத்தை எட்டியிருக்கும் ஈழத்தமிழர் ஆதரவு எழுச்சியை ‘அன்ரி கிளைமாக்ஸ்’ என்ற எதிர் நிலைக்குத் தள்ளிக் கெடுத்துவிட இயலக்கூடாது எனத் தீவிர, ஈழத்தமிழர் ஆதரவுப் போக் குடைய சக்திகளைக் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகத்தின் கட்சிகளிடையே நிலவும் அரசியல் போட்டா போட்டிகளுக்கு ஈழத்தமிழர் விவகாரத்தையும் தளமாக்க முயலாதீர்கள் என்பதுதான் தமிழகக் கட்சி களுக்கு ஈழத் தமிழர்கள் விடுக்கும் பணிவான வேண்டு கோள் ஆகும். ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்துக்கு இந்தியா நேரடியாக ஆதரவளிக்காமல் பின்னடிப்பதற்கு இந்தியத்தரப்பில் பல்வேறு காரணங்கள் முன்வைக்கப் பட்டாலும் அதில் பிரதானமானது ஒன்று.இலங்கையில் பிரிவினைக்கு இடமளிப்பதால் அது இந்தியாவிலும்-குறிப்பாகத் தென்னிந்தியாவிலும்- பிரிவினைக் கோரிக்கைக்கு வலுச்சேர்த்துவிடும் என்பதே புதுடில்லியின் பிரதான அம்சமாகும். இது வெளிப்படையான விவகாரமுமாகும்.

அப்படி இருக்கையில் - ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவும் உத்வேகமும் அளிக்கின்றோம் என்று கூறிக் கொண்டு - அந்த விவகாரத்தை ஒட்டி, இந்தியாவிலும் ‘தமிழ் நாடு’ தனிநாடாகும் என்று எச்சரிக்கை விடுத்து, அங்கும் பிரிவினைப் போக்கில் குரல் எழுப்புவது அல்லது பேசுவது, உண்மையில் ஈழத்தமிழருக்கு ஆதரவளிக் கும் செயற்பாடே அல்ல. அது, தன் தலையிலே தானே மண்ணை அள்ளிப் போடுவது போல, ஈழத்தமிழரின் விடுதலைப் போராட் டத் துக்கு ஆதரவாகக் குரல் எழுப்புவதாக நினைத்துக் கொண்டு, அதற்கு வேட்டு வைக்கும் செயலாகவே அமைந் துவிடும். ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டத்தின் நியா யத்தைப் புதுடில்லி நிராகரித்தும் புறம் ஒதுக்கவே அது வழி செய்யும்.

ஈழத் தமிழர்களுக்கு நல்லது செய்வதாக நினைத் துக் கொண்டு, அவர்களின் நியாயமான போராட்டத்துக்கு குந்தகம் விளைவிக்கும் இத்தகைய போக்கை தீவிர ஈழ ஆதரவுசக்திகள் கைவிட வேண்டும். களப்புறச் சூழ்நிலைகள் யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு தந்திரோபாய உத்தி யோடு நடந்து கொள்ள அவை முன்வர வேண்டும்.வெறும் அரசியல் உணர்ச்சிக் கோஷங்களைக் கை விட்டு அவற்றைப் பயனுள்ள வடிவங்களில் ஈழத் தமிழருக்கு ஆதரவான வலுவாக மாற்ற அவை எத்தனிக்க வேண்டும். அதுவே இன்றைய தேவையும் அவசியமுமாகும்.ஈழத் தமிழர் விவகாரத்தில் தமிழகத்தின் ஐக்கியமும் ஒன்றுபட்ட எழுச்சியுமே ஈழத்தமிழருக்கு விடிவைத் தேடித்தரும்.
*****

No comments: