பிரெஞ்சு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிpழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் பொறுப்பாளர் திரு.பரிதி அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக இன்று பரிசில் தமிழ் மக்கள் போராட்டத்தை நடத்தியுள்ளனர். இன்று மதியம் இரண்டு மணியளவில் பரிஸ் ரீப்பப்பிளிக் மையத்தில் ஒன்று கூடிய தமிழ் மக்கள் இந்த ஆதரவுப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
இப்போராட்டத்தில் நூற்றுக் கணக்கான மக்கள் கலந்துகொண்டு, சிறீலங்காவின் இன அழிப்புப் போரையும் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள மனித உரிமை மிறல்களையும் அம்பலப்படுத்தியிருந்தனர்.
_
திரு பரிதி அவர்கள் நேற்று 25ம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் இன்று 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணி வரை சுமார் 36 மணித்தியாலங்கள் இவ் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.இலங்கை அரசால் மனித உரிமைகள் மீறப்படுதல்,இரண்டு இலட்சத்துக்கும் கூடுதலான மக்கள் இடம்பெயர்ந்து அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட நிலையில் இருப்பதை அம்பலப்படுத்துவது,அரசசார்பற்ற நிறுவனங்களை இலங்கை அரசு வெளியேற்றி மக்கள் மீது எறிகணை வீச்சுக்களையும் விமானத் தாக்குதல்களையும் நடத்துவதை நிறுத்துதல், தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதால் அவர்கள் மீதான ஐரோப்பிய நாடுகளின் தடை நீக்கப்படுதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியே இந்த 36 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

திரு.பரிதி அவர்கள் கடந்த 01.04.2007ம் ஆண்டில் இருந்து பிரெஞ்சு காவல்துறையினரால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவருடன் இன்னும் சிலர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் மேலும் ஒருவர் நாளை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப்போராட்டத்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
sankathi.com
*****












No comments:
Post a Comment