Thursday, 27 November 2008

** பிரித்தானிய நினைவெழுச்சி நாளில் 40,000ற்திற்கு மேற்பட்ட மக்கள்!


பிரித்தானியாவின் தமிழ் தேசிய நினைவெழுச்சி நாள் 2008 நிகழ்ச்சிகள் அந்நாட்டின் மிகப்பெரிய உள்ளரங்கமான ExCel மண்டபத்தில் மதியம் 12 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகின. 40,000ற்திற்கு மேற்பட்ட மக்கள் வணக்கம் செய்வதற்காக காலை 10 மணி முதலே வந்து குவிந்திருந்தனர்.


ஈகைச்சுடரை மாவீரர் லெப்.கேணல் வைகுந்தனின் தாயாரான திருமதி யோகராணி மனோகரராசா அவர்கள்ஏற்றிவைத்தார். தொடர்ந்து, மண்டபம் இருளில் ஆழ சுடர்வணக்கம் நடைபெற்றது.மிகநீண்ட வரிசைகளில் மக்கள் ஒரு மணிநேரத்திற்கு மேலாகக் காத்திருந்து மலர்வணக்கம் செலுத்தினர்.



இடையிடையே கவிதைகள் மற்றும் அரங்க நிகழ்வுகளும் இடம்பெற்றன. பிரித்தானிய பழமைவாதக் கட்சியின் இல்பேட் தெற்கு வேட்பாளர் டோபி பொன்டில் உரையாற்றினார். அவர் தனதுரையில் தமிழ் மக்களின் ஒருமைப்பாடு பற்றிப் பேசினார்.பிரித்தானியப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் உரையாற்றினர். அத்துடன் தமிழகத்தில் இருந்து வருகை தந்திருந்த மறுமலர்ச்சி திராவிடக் கழகப் பொதுச் செயலர் வைகோ அவர்கள் சிறப்புரையாற்றினார்.
___________________

No comments: