
வன்னியில் கடந்த மூன்று நாட்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வெள்ளப்பெருக்குக் காரணமாக இடம்பெயர்ந்து தற்காலிக குடியிருப்புக்களில் தங்கியிருந்த மக்கள் மீண்டும் இடம்பெயரவேண்டி அவலநிலை ஏற்பட்டுள்ளது.



புளியம்பொக்கணை, தருமபுரம், சுண்டிக்குளம், பிரமந்தனாறு, விசுவமடு புதுக்குடியிருப்பு முதலான பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களின் குடியிருப்புக்குள் வெள்ளம் பாய்ந்ததில் அம்மக்களின் உடமைகள் சேதமானதோடு தற்காலிக குடிசைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இக்குடியிருப்புக்களிலிருந்து வெளியேறிய மக்கள் அருகிலுள்ள பாடசாலை கட்டங்களில் தங்கியுள்ளனர்.




இதேவேளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வேறு இடங்களுக்கு கொண்டுசென்று தங்கவைக்கும் பணிகளில் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு ஈடுபட்டுவருகின்றது. மழைவெள்ளம் காரணமாக போக்குவரத்துப் பாதைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பல பாதைகளை ஊடறுத்து வெள்ளம் பாய்கின்றதை பரந்தன் முல்லைத்தீவு பிரதான சாலையான ஏ-35 சாலையில் பல இடங்களில் காணமுடிகின்றது.
ஏனைய சிறுபாதைகளும் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட நிலையில் மக்கள் போக்குவரத்து செய்யமுடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இம் மழைவெள்ளம் காரணமாக நேற்று பாடசாலைகள் பல இயங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
__________
Sankathi.com








No comments:
Post a Comment