Thursday, 13 November 2008

** கோணாவில் நோக்கிய மும்முனை நகர்வுகள் முறியடிப்பு: படையினருக்கு பலத்த ஆளணி சேதாரம்

அக்கராயனிலிருந்து கோணாவில் நோக்கி சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட ஐந்தாவது நாள் முன்னகர்வும் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதன்போது சிறீலங்காப் படையினர் தரப்பில் பலத்த உயிர் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. பலர் காயமடைந்துள்ளன என களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐந்தாம் நாள் முறியடிப்புத் தாக்குதல்கள் - படம்: தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி


இன்று வியாழக்கிழமை அக்கராயனிலிருந்து கோணாவில் நோக்கி பல்குழல், ஆட்டிலறி, மோட்டார் என கனரக ஆயுதங்களின் சூட்டாதரவுடன் படையினர் மும்முனைகளில் முன்னகர்வுகளை மேற்கொண்டனர்.படையினரின் முன்னகர்வுகளுக்கு எதிராகப் போராளிகள் நடத்திய எதிர்த் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் பலத்த ஆளணி சேதாரங்கள் ஏற்பட்டுத்தி படையனிரை பழைய நிலைகளுக்கப் பின்வாங்கச் செய்துள்ளனர். எனினும் இப்பகுதியில் தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்று வருவதாக களமுனைச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
pathivu.com
******

No comments: