Saturday, 29 November 2008

** இன்றைய விமானத்தாக்குதலில் சர்வதேசத்தில் தடை செய்யப்பட்ட கொத்தணி குண்டுகள் பாவிப்பு!

இன்று வன்னியில் இலங்கை விமானப்படையினர் நடத்திய வான் தாக்குதலில் சர்வதேசத்தில் தடைசெய்யப்பட்ட கொத்தணி குண்டுகள் பாவித்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொத்தணி (கிளெஸ்ரர்) ரக ஒரு குண்டில் இருந்து சுமார் 500, 600 வரையான குண்டுகள் வெடித்துச் சிதறும் தன்மை கொண்டது. இக்குண்டுகள் உடனடியான சேதத்தை மட்டுமல்ல அவை வெடிக்காத நிலையிலும் பின்னர் சேதத்தையும் அழிவுகளையும் ஏற்படுத்தக் கூடியது. சர்வதேசத்தால் தடை செய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகள் அண்மையில் இஸ்ரேல் லெபனான் மீதான தாக்குதலின் போது பாவித்தது குறிப்பிடத்தக்கது.

__________________

No comments: