தமிழீழ விடுதலைக்காய் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்ய மாவீரர்களை நினைவு கோரும் முதலாம் நிகழ்வுகள் வன்னிப் பிரதேசத்தில் எழுச்சியுடம் ஆரம்பமாகியுள்ளன.இன்று செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணிக்கு திருவுருவப்படங்களுக்கு ஈகைச்சுடரேற்றல், மலர்வணக்கம், அகவணக்கம் செலுத்தி மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகின. சிவப்பு, மஞ்சள் வர்ண கொடிகள் கட்டப்பட்டு மாவீரர்களின் திருவுருவப் படங்கள் கொண்ட மாவீரர் மண்டபங்களுக்கு கடும் மழையிலும் பொதுமக்கள் சென்று தமது வணக்கத்தைச் செலுத்தியுள்ளனர்.
போராளிகளின் முகாங்களில் பொதுச்சுடரேற்றல், தேசியக் கொடியேற்றல், திருவுருவப்படங்களுக்கு ஈகைச்சுடரேற்றல், மலர்வணக்கம், அகவணக்கம், உறுதியுரை எடுத்தல் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகின.மாவீரர் துயிலும் இல்லங்களில் நாளை காலை 8:30 மணிக்கு ஏற்றப்படும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மாவீரர் நாள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
________
Pathivu.com
Subscribe to:
Post Comments (Atom)








No comments:
Post a Comment