Wednesday 31 December 2008

** அம்பாறை மாவட்டத்தில் 12 மாதகாலங்களில் 191 படையினர் பலி! 247 படையினர் காயம்.

அம்பாறை மாவட்டத்தில் 2008ம் ஆண்டில் சிறிலங்கா படைக்கும் ஒட்டுக்குழுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் 7 ஒட்டுக்குழு உட்பட 198 படையினர் பலி 5 ஒட்டுக்குழு உட்பட 252 படையினர் காயமடைந்துள்ளனர்.

கடந்த 01-01-2008 தொடக்கம் 31-12-2008 வரையிலான ஒரு வருட காலப்பகுதியில் அம்பாறை மாவட்டத்திலும் அதனை சூழவுள்ள வனப்பகுதி உள்ளிட்ட சில பகுதிகளிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த சிறிலங்கா படையினரது விபரங்கள்.
விசேட அதிரடிப்படையினரது எண்ணிக்கை-123,
இராணுவத்தினரது எண்ணிக்கை-35,
ஊர்காவல் படையினரது எண்ணிக்கை-15,
பொலிஸாரின் எண்ணிக்கை-18,
கொல்லப்பட்ட ஒட்டுக் குழுவினரது எண்ணிக்கை-07

மற்றும் காயமடைந்தவர்கள் விசேட அதிரடிப்படையினரது எண்ணிக்கை-192, இராணுவத்தினரது எண்ணிக்கை-44,
ஊர்காவல் படையினரது எண்ணிக்கை-05,
பொலிஸாரின் எண்ணிக்கை-06,
காயமடைந்த ஒட்டுக்குழுவினரது எண்ணிக்கை-05 ஆகும்.

காயமடைந்த சிறிலங்கா படையினரில் 72பேர் யுத்தகளத்திற்கு மீண்டும் செல்லமுடியாதவாறு தமது உடல் அவயங்களை இழந்துள்ளனர்.

இதேவேளை சிறிலங்கா படையினருடனான மோதல்களின் போது 23 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர், 13 போராளிகள் விழுப்புண் அடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட அரசியல் துறையினர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
_________
Pathivu.com

No comments: