Wednesday, 24 December 2008

** ஈரோடு நீதிமன்றில் தமிழின உணர்வாளர் சீமான் அவர்களின் பிணை மனு தள்ளுபடி!

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் திருநகர் காலனியில் நடந்த கூட்டத்தில் பேசியதாக, இயக்குநர் சீமான், பெரியார் திராவிடக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி பொதுச் செயலாளர் மணியரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு நீதிமன்றத்தில் 3 பேரும் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 3 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி வழக்கறிஞர் மோகன் ஈரோடு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு செய்தார்.

அதை விசாரித்த நீதிபதி அசோகன், 3 பேரின் ஜாமீன் கோரிக்கையையும் தள்ளுபடி செய்தார். இதையடுத்து இன்று தாக்கல் செய்யவுள்ளதாக வக்கீல் மோகன் தெரிவித்துள்ளார்.
_______________________

No comments: