தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தமே கிடையாது என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மகிந்த பேசியதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகள், போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் பலம் பெறுகின்றனர். புலிகளை பலம் பெற வைக்கின்ற எந்த ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் எந்த ஒரு வடிவிலும் ஏற்றுக் கொள்ளமாட்டோம்.
இந்த நாட்டின் ஒரே எதிரி பயங்கரவாதம்தான்.
2009 ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவோம். 2009 ஆம் ஆண்டில் புலிகளின் பயங்கரவாதத்தை முறியடிக்கும் பெருமை வாய்ந்த வெற்றியை நாங்கள் பெறுவோம் என்றார் மகிந்த.
__________
Puthinam.com
Subscribe to:
Post Comments (Atom)








No comments:
Post a Comment