
இந்தத் தாக்குதலுக்கு படையினர் பரசூட் மூலம் தாக்கும் கிளஸ்ரர் குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர். இதன்போது மாதா கோவில் முற்றாக சேதமடைந்ததுடன், மாதாவின் திருவுருவச் சிலையும் உடைந்து நொருங்கியுள்ளது.

இப்பகுதியில் கிளஸ்ர் ரக பரும் அழிவை ஏற்படுத்தக்கூடிய, சர்வதேசத்தில் தடை விதிக்கப்பட்ட குண்டுகளைப் பாவித்துள்ள போதும், படை நடவடிக்கை காரணமாக மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளதால், உயிரழிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன.
எனினும், வீடுகளும், பயன்தரும் மரங்களும் அழிந்து போயுள்ளதுடன், 50 வரையான மாடுகளும் மற்றும் விலங்குகளும் பலியாகியுள்ளன. அத்துடன், ஏராளமான மாடுகள் படுகாயங்களுடன் அப்பகுதியெங்கும் முனகிக்கொண்டு கிடப்பதாக எமது களச் செய்தியாளர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இன்று காலை முதல் குஞ்சுப் பரந்தனில் இருந்து முன்னேற முனையும் சிறிலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
__________
Sankathi.com








No comments:
Post a Comment