Friday 26 December 2008

** யாழில் இருந்து மேலும் படையினர் வன்னிக் களமுனைக்கு அனுப்பி வைப்பு

பெரும் இராணுவப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள சிறிலங்கா அரசு தற்போது கிழக்கு மற்றும் யாழ்குடாவில் நிலைகொண்டுள்ள படையினரை அங்கிருந்து எடுத்து வன்னிக் களமுனைக்கு அனுப்பி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் கிழக்கில் இருந்து 500 படையினர் வன்னிக் களமுனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள சிறிலங்காப் படையினரின் படைத்தளங்களிலுள்ள படையினர் குறைக்கப்பட்டு அங்குள்ள படையினர் வன்னிக் களமுனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் பருத்துறை, அச்சுவேலி, யாழ்ப்பாணம் படைத்தளங்களில் படையினர் இவ்வாறு குறைக்கப்பட்டு வன்னிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
__________
Sankathi.com

No comments: