Tuesday 30 December 2008

** அம்பாறையில் விடுதலை புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் விசேட அதிரடிப்படையின் 2 பேர் பலி! 6 பேர் காயம்.

அம்பாறை பொத்துவில் காவல்துறை பிரிவு உகந்தையில் விடுதலை புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் இரு விசேட அதிரடிப்படையினர் பலி மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று செவ்வாக்கிழமை காலை 7.40 மணியளவில் உகந்தை காட்டுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட விசேட அதிரடிப்படையினரை வழிமறித்த விடுதலை புலிகள் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் இதில் இரு விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட அரசியல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக அத்துறையினர் மேலும் தெரிவிக்கையில் நேற்று ஆயிரக்கணக்கான விசேட அதிரடிப்படையினர் உகந்தை காட்டுப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைக்காக ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களை இன்று வழிமறித்த விடுதலை புலிகள் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் அம்பாறை மற்றும் கொழும்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இத்தாக்குதல்களையடுத்து அப்பகுதியில் மேலும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு தேடுதல்கள் மேற்கொண்டுவருவதாக அம்பாறை மாவட்ட அரசியல் துறையினர் மேலும் தெரிவிக்கின்றனர்.
_________
Pathivu.com

No comments: