Tuesday, 23 December 2008

** கொங்கிரசுக்கு எதிராக தமிழகத்தில் வலுப்பெறும் போராட்டங்கள்!

ஈழத் தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வரும் கொங்கிரஸ் கட்சியின் பிரமுகர்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் போராட்டம் வலுவடைந்து வருகின்றது. கொங்கிரஸ் பிரமுகர்களின் உருவம் பொம்மைகளையும், உருவப்படங்களையும் எரித்து தமது எதிர்ப்புக்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது போராட்டங்களும் முனைப்புப் பெறத் தொடங்கியுள்ளன.


இந்நிலையில் இன்று சென்னையில் மக்கள் எழுச்சி இயக்கம் பேச்சுரிமைக்கும் எழுத்துரிமைக்கு எதிராக செயற்படும் தமிழக கொங்கிரஸ் கட்சியைக் கண்டித்தும், இந்திய அரசைக் கண்டித்தும் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. இந்நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.


விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்படுவதாகக் கூறிக்கொண்டு தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்படுபவர்களை அடக்கியொடுக்கும் நடவடிக்கையில் கொங்கிரஸ்கட்சியின் தமிழகக் கிளை தீவிரமாக ஈடுபட்டள்ளதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இவர்களது குற்றச்சாட்டின் பேரிலேயே பொது உடமைக் கட்சியின் தலைவர் பெ.மணியரசன், கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான் ஆகியோர் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
_________
Sankathi.com

No comments: