Friday 26 December 2008

** யாழ் மக்களே சிந்தித்துச் செயற்படுங்கள் - எல்லாளன் படை

தனித் தமிழீழத்துக்கான போராட்டமானது தனது இறுதியான பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதை தாங்கள் அறிவீர்கள். இப் போராட்டத்திற்காக இரண்டு தசாப்த காலங்களாக போராளிகளும் மக்களும் உயிரை துச்சமென மதித்து போராடிக் கொண்டிருக்கும் இவ் வேளையில் போராட்டத்தின் நியாயமான கோட்பாட்டினால் போராட்டமானது இன்று உலகளாவிய ரீதியில் ஒருபரிணாம வளர்ச்சி அடைந்து வந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

அதனைப் பொறுக்காத மகிந்த அரசு தனது தோல்வியையும் எமது மக்கள் படுகொலை செய்யப்படுவதையும் சர்வதேசத்திடம் இருந்து மறைப்பதற்காக அதனுடன் ஒட்டுண்ணி போல் ஒட்டி வாழும் ஒட்டுக் குழுக்கள் மூலமும் துரோகிகள் மூலமும் உங்களுக்கு சில அற்பசலுகைகளை தந்து வஞ்சக எண்ணத்துடன் போலியாக உறவாடி களியாட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் என சில வேலைகளை உங்கள் ழூலம் செய்து போராட்டத்தை தவறாக சித்தரிக்க முயல்கின்றான். இதற்கு மக்களில் சிலரும் உடந்தையாக இருப்பது வேதனை அளிக்கின்றது.

யாழ் மக்களே!
எமது மக்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இவ் வேளையில் இவ்வாறான செயற்பாடுகள் தேவையா? சிந்தித்து செயற்படுங்கள். எனவே நீங்கள் அற்ப சலுகைகளுக்காக இவர்களுடன் தொடர்பை பேணும் போது உங்களை அறியாமலே நீங்களும் தனித் தமிழீழத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு உடந்தையாகும் சூழ்நிலை அல்லது சந்தர்ப்பம் ஏற்படலாம்.
எனவே இவர்களுடனான தொடர்பை முற்றாக நிறுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம். தனித் தமிழீழத்திற்கான காலம் எம் கண்முன்னால் கனிந்து வந்துள்ளது அதனை நாம் அனைவரும் ஒன்றுபட்டு வென்றெடுப்போம்.

எல்லாளன் படை
யாழ் மாவட்டம்.
26.12.2008

_________
Pathivu.com

No comments: