Tuesday 30 December 2008

** அம்பாறை வனப்பகுதியில் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொண்ட படையினர் மீது தாக்குதல்!

அம்பாறை மாவட்டம் பொத்துவில் தொடக்கம் யால வரையிலான வனப்பகுதிக்குள் தேடுதல் நடவடிக்கைக்காக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை களமிறக்கப்பட்ட ஆயிரக்கணக்கிலான விசேட அதிரடிப்படையினரின் இரு அணிகளை இன்று காலை 07.40 மணிக்கும், 08.25 மணிக்கும் இடையில் உகந்தை வனப்பகுதிக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் வழிமறித்து தாக்கியதில் இரண்டு விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டதுடன், மேலும் 6 படையினர் படுகாயமடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறை தெரிவித்துள்ளது.

இவ் வழிமறிப்புத் தாக்குதலினை அடுத்து மேலும் படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு பலத்த துப்பாக்கிப் பிரயோகத்துடன் தேடுதல் நடவடிகையும் தொடர்ந்தது.

இதற்கிடையே மட்டக்களப்பில் தாக்கதல்கள் அதிகரித்துள்ள நிலையில் பொலநறுவை மட்டக்களப்பு எல்லைப் பகுதியான வெலிகந்தவிற்கு சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு கள நிலைமைகளை பார்வையிட்டதுடன், அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
__________
Sankathi.com

No comments: