கிளிநொச்சிக்கென கொடுககப்பட்ட விலையானது - ஒருபுறத்தில் சிறிலங்கா சனாதிபதிக்குச் சீற்றத்தை ஏற்பபடுத்தும் அளவிற்கு அதிகரித்ததொன்றாகவும், மற்றொரு புறத்தில் படைத்தரப்பின் இழப்பை எவ்வாறு குறைத்தல் என்பது குறித்து ஆராய வேண்டியதான நிர்ப்பந்தத்தை சிறிலங்காப்படைத்தரப்பிற்கு ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் அப்பத்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 16ம் திகதி படையினர் கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பாரிய நடவடிக்கையில் 7 ஆயிரம் வரையிலான துருப்பினர் பயன்படத்தப்பட்டனர். கவசப்படைப்பிரிவும் இதில் பங்கெடுத்தது.கடும் ஆட்லறி எறிகணைகள், பல்குழல் எறிகணைகள் இதில் பயன்படுத்தப்பட்டன. தொடர்ச்சழியான வான் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டன. இதில் 53,56, 57,58 ஆகிய படையணிகள் ஈடுபடுத்தப்பட்டன.
ஆனால் 16ம் 17ம் திகதிகளில் படைத்தரப்பிற்கு ஏற்பட்ட இழப்புக்கள் மிக அதிகம் படை நடவடிக்கையும் படு தோல்வியில் முடிவடைந்துள்ளது. இது அரசிற்கும் படைத்தரப்பிற்கும் கடும் சிக்கல்களை உருவாக்கியுள்ளது எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
__________
Sankathi.com








No comments:
Post a Comment