எமது மண்ணை வல்வளைப்புச் செய்து கிளிநொச்சி, முல்லைத்தீவு நோக்கி முன்னேறிய சிங்களப் படைகள் எமது களமுனைப் போராளிகளின் வீரமிகு தாக்குதல்களால் களமுனைகளில் மூச்சடங்கி சாவுக்குழிக்குள் அகப்பட்டுப் போயுள்ளனர். இவ்வாறு வடமராட்சி கிழக்குக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் அண்ணாத்துரை தெரிவித்துள்ளார்.வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத்தில் நேற்று முன்தினம் கரைச்சி வடக்கு, பூநகரி, வடமராட்சி கிழக்கு, மாந்தை மேற்கு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மக்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் போராட்டங்களில் நெருக்கடிகள் வருவதும், அது பின்பு தகர்த்தெறியப்படுவதும் வழமை. எமது விடுதலைப் போராட்டத்திலும் அவ்வாறான சந்தர்ப்பங்கள் நடந்தேறியுள்ளன.
1995-1996 காலப் பகுதிகளில் யாழ்ப்பாணத்தை விட்டு விடுதலைப் புலிகள் தந்திரோபாயமான பின்வாங்கலை மேற்கொண்டபோது, விடுதலைப் புலிகளின் கோட்டையினை பிடித்து விட்டதாகவும் புலிகள் மீண்டும் வன்னிக் காட்டில் ஒழிந்துவிட்டார்கள் என்றும் அன்றைய சனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சரும் இராணுவத் தளபதியும் கூச்சலிட்டு சிங்கள மக்களின் வரவேற்பைப் பெற்றனர்.
1995-1996 காலப் பகுதிகளில் யாழ்ப்பாணத்தை விட்டு விடுதலைப் புலிகள் தந்திரோபாயமான பின்வாங்கலை மேற்கொண்டபோது, விடுதலைப் புலிகளின் கோட்டையினை பிடித்து விட்டதாகவும் புலிகள் மீண்டும் வன்னிக் காட்டில் ஒழிந்துவிட்டார்கள் என்றும் அன்றைய சனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சரும் இராணுவத் தளபதியும் கூச்சலிட்டு சிங்கள மக்களின் வரவேற்பைப் பெற்றனர்.
அவ்வேளை முல்லைத்தீவை முற்றாக மீட்டு அங்கு நின்ற சிங்களப் படைகளைக் கொன்று ஆயுதங்களையும் கைப்பற்றி அன்றைய இனவாத அரசின் மூச்சை அடக்கினர். எமது தலைவரும், தளபதிகளும் களமுனையில் மூச்சாக ஏற்று நின்று போராடிய போராளிகளும் அதன்பின் ஜெயசிக்குறு நடவடிக்கை மூலம் வன்னிப் பெருநிலப் பரப்பை தொடர்ச்சியாக வல்வளைப்புச் செய்து சந்திரிக்கா அரசு மேற்கொண்ட முயற்சி தலைவரின் திட்டத்தில் தவிடுபொடியாகியானது.
வல்வளைப்புச் செய்த பகுதிகள் மட்டுமல்லாது இரும்புக்கோட்டை என்று சிங்கள அரசினால் கூறப்பட்டு வந்த ஆனையிறவும் எமது கைக்குள் வீழ்ந்தது. அது மட்டுமல்லாமல் யாழ் குடாநாட்டின் ஒரு பகுதியான வடமராட்சி கிழக்கில் 11 கிராமங்கள் எமது கையில் கிடைத்தன.
பொதுவாக இந்தப் பிரதேசங்கள் அன்றைய பொழுதில் விடுபட மக்கள் எல்லைப்படையாகத் திரண்டதே முக்கிய காரணம். இன்றைய நெருக்கடியான சூழலில் போராட வலுவுள்ள அனைவரும் எமது தாய்நாட்டுக்காக உழைக்க வேண்டிய காலகட்டத்தில் தள்ளப்பட்டுள்ளோம்.
எமது மண்ணை வல்வளைத்து மக்களை இடம்பெயரவைத்து பேரவலத்திற்குத் தள்ளிய சிங்கள இனவாத அரசின் மூச்சை அடக்கி வன்னிப் பகுதியிலுள்ள சிங்கள இராணுவத்திற்கு மட்டுமல்லாமல் எமது தமிழீழ மண்ணில் கால்பதித்த அனைத்துப் படைகளுக்கும் புதைகுழி அமைத்து எமது தலைவரின் காலத்தில் தமிழீழத்தைப் பெற அனைவரும் உழைக்க வேண்டும். இவ்வாறு அண்ணாத்துரை மேலும் தெரிவித்துள்ளார்.
_________
Sankathi.com








No comments:
Post a Comment