SP_A0070.jpg)
பிரான்சின் புகழ்பெற்ற பகுதியான ஈபிள் கோபுரம் முன்பாக நேற்று சனிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் ஆரம்பமான இப்பேரணி ஆயிரக்கணக்கான மக்களின் உணர்வெழுச்சியுடன் உலகின் கண்களை ஈர்ப்பதாக அமைந்தது.

பிரெஞ்சுத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் ஒழுங்கு செய்யப்பட்ட இப்பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கடுங்குளிரையும் இடையிடையே வேகமெடுத்துப்பெய்த மழையையும் பொருட்படுத்தாது உணர்வுடன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
_________
_________
sankathi.com








No comments:
Post a Comment