Saturday 27 December 2008

** புதுக்குடியிருப்பு மக்கள் குடியிருப்பு மீது வான் தாக்குதல் - மூவர் படுகாயம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 9ம் பிரிவில் தங்கியிரந்த இடம்பெயர்ந்தவர்களின் வாழ்விடம் மீது சிறீலங்கா வான் படை இன்று சனிக்கிழமை கடும் தாக்குதலை நடத்தியுள்ளது. இதன்போது குழந்தை உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.





மதியம் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் நான்கு வயதான செல்வராஜா செல்வரஞ்சன் என்ற குழந்தையும், 10 வயதான அமிர்த்தாசன் விதுசாளினி என்ற சிறுமியும், சத்தியசீலன் சத்தியராஜா என்ற 18 வயது மாணவனும் படுகாயமடைந்து புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
__________
Sankathi.com

No comments: