Monday 29 December 2008

** வெளிநாடுகளில் வாழும் எமது மக்களின் பலத்தில் போராடுகின்றோம்-கேணல் பானு

எமது பலத்தை நாம் நிரூபிக்கின்ற போது என்ன உதவி வேண்டும் என்று வெளிநாடுகள் எம்மிடம் கேட்கும் நிலை வரும் என்று தளபதி கேணல் பானு தெரிவித்துள்ளார்.

சிங்கள அரசு வெளிநாடுகளின் உதவிகளை பெற்றுக்கொண்டு போரை நடத்துகின்றது. நாம் வெளிநாடுகளில் வாழும் எமது மக்களின் பலத்தில் போராடுகின்றோம்.

நாம் எமது நிலங்களை எதிரியின் வல்வளைப்பு மற்றும் வலிந்த தாக்குதல்கள் மூலம் இழந்திருக்கின்றோம். ஆனால் நாம் எமது பலத்தை இழக்கவில்லை. நாம் போரில் வெற்றி பெறுவது உறுதி.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் போர் மூலோபாயங்களுக்குச் செயல் வடிவம் கொடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு உழைக்க வேண்டும் 2009 ஆம் ஆண்டை "படையினரின் ஆண்டு" எனப் பிரகடனப்படுத்தியுள்ள மகிந்த ராஜபக்சக்கு அதனை நாம் அவர்களது "அழிவு ஆண்டு" என மாற்றுவோம்.

எமது மக்கள் சிறிலங்கா படைத் தாக்குதல் மற்றும் வல்வளைப்புக்களால் இடம்பெயர்ந்து பெரும் துயரை அனுபவித்து வருகின்றனர். ஆனால் அவர்கள்நம்பிக்கையுடன் இருக்கின்றனர். பார்க்கலாம்.இறுதி வெற்றி யாருக்கென்று.

சிங்கள அரசு வெளிநாடுகளின் உதவிகளை பெற்றுக்கொண்டு போரை நடத்துகின்றது. இன்று சிறிலங்கா பெரும் நெருக்கடிக்குள் இருக்கின்றது. அது பெரும் பொருண்மிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இன்னும் பெரும் பொருண்மிய உடைவு அவர்களுக்கு ஏற்படவுள்ளது

நாம் பலத்தை நிரூபிக்கின்ற போது வெளிநாடுகள் தாமாகவே என்ன உதவி வேண்டும் என்று கேட்கும் நிலை உருவாகும்.

மன்னார் களமுனைகளில் மிகச் சிறப்பாகச் செயற்பட்ட போராளிகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வாழ்த்தை உள்ளடக்கியதான சமர் ஆய்வுப் பிரிவின் சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கும் நிகழ்வில் சிறப்புரையாற்றும் போதே கேணல் பானு இவ்வாறு தெரிவித்தார்.
_________
Pathivu.com

No comments: