Wednesday 31 December 2008

** சிறிலங்காவின் உதவாத உதவிகள்.

வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவசரத் தேவையாகவுள்ள கூடாரங்களைக் கொண்டு செல்லத் தடைவிதித்துள்ள சிறிலங்கா அரசு அதற்குப்பதிலாக பாவனைக்குதவாத கிடுகுகளை வன்னிக்கு அனுப்பிவைத்துள்ளது.

படை நடவடிக்கையினாலும், கடந்த மழை வெள்ளத்தினாலும் குடியிருப்புக்களை இழந்துள்ள மக்களுக்கு 42 ஆயிரம் வரையிலான கூடாரங்கள் அவசரத்தேவையென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பன்னாட்டுத்தொண்டு நிறுவனங்கள் வழங்கும் கூடாரங்களை வன்னிக்கு எடுத்துச்செல்லத் தடைவிதித்துள்ள அரசாங்கம், தற்போது ஒரு தொகுதி கிடுகுகளை அனுப்பிவைத்துள்ளது. அவை பல இடங்களில் ஏற்றி இறக்கி பயன்படுத்த முடியாத நிலையிலேயே வன்னிக்கு வந்த சேர்ந்துள்ளன.
__________
Sankathi.com

No comments: