Sunday 28 December 2008

** முல்லைத்தீவு நோக்கிய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் முறியடிப்பு: 68 படையினர் பலி! 75 படையினர் காயம்

முல்லைத்தீவைக் கைப்பற்றும் சிறீலங்காப் படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 68 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 75 படையினர் காயமடைந்துள்ளனர் இதன்போது படையினரின் 17 உடலங்களும் படையக் கருவிகளும் கைப்பற்றப்பட்டதாக என தமிழீழ விடுலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.


நேற்று சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் பல்குழல், ஆட்டிலறி, மோட்டார் மற்றும் கனரக ஆயுதங்களின் சூட்டாதரவுடன் சிறீலங்காப் படையினர் முன்னகர்வுகளில் ஈடுபட்டனர்.படையினரின் முன்னகர்வுகளுக்கு எதிராக போராளிகள் நடத்திய தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 50 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 75 படையினர் காயமடைந்துள்ளனர்.

இந்த முறியடிப்புத் தாக்குதல் மதியம் 1 மணி வரை நீடித்தது. இதன்போது பெருமளவான படைக்கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளனர்.


ஏகே எல்.எம்.ஜி - 08
ரி-81 ரக எல்.எம்.ஜி - 01
ஆர்.பி.ஜி - 04
கவச எதிர்ப்பு எறிகணை செலுத்தி- 02
ரி-56-2 ரக துப்பாக்கிகள் - 08
ரி-56 ரக துப்பாக்கிகள் - 02

இதேபோன்று உடுப்புக்குளத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிய பிறிதொரு முன்னகர்வும் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. காலை 9 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட முன்னகர்வு மதியம் 12.30 மணியளவில் முறியடிக்கப்பட்டுள்ளது.


இதன்போது 18 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் படையினரின் உடலம் ஒன்றும் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
_________
Pathivu.com

No comments: