Saturday, 6 December 2008

** வடபகுதியில் மீண்டும் அடை மழை

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாக்கியுள்ளதால் வடபகுதி முழுவதும் அடை மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் காற்றுடன் கூடிய மழை பெய்வதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே வெள்ளப் பெருக்கினால் பெரும் பாதிப்படைந்த மக்கள் மீண்டும் பாதிப்புக்குள் உள்ளாகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இன்றும் நாளையும் கன மழை பெய்யும் என காலநிலை அவதானிப்பு நிலையம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
_________
Pathivu.com

No comments: